Header Ads



கவிஞர் கண்ணதாசன், குர்ஆனை மொழிபெயர்க்காதது ஏன்..?

“ஆர்­மோ­னிய பெட்­டிக்கு அழகு தமிழை அறி­மு­கப்­ப­டுத்­திய பெருமை ஒரு கவி­ஞ­ருக்கு உண்­டென்றால், அது கண்­ண­தா­ச­னுக்குத் தான் உண்டு” என சக கவி­ஞ­ரான திரைப்­பட பாட­லா­சி­ரியர் கவிஞர் முத்­து­லிங்கம் மனந்­தி­றந்து பாராட்­டு­கின்றார் என்றால் அது கவிஞர் கண்­ண­தாசன் என்ற பெருங்­க­வி­ஞரின் பெரு­மைக்குச் சான்று.

தமிழ்த் திரை இலக்­கி­யத்தில் தத்­து­வம்–­ந­கைச்­சு­வை–­கா­தல்–­சோ­கம்–­பக்தி எனப் பல்­துறை பாடல்­க­ளையும் எழுதி, புகழ் குவித்த கவிஞர் கண்­ண­தாசன் உரை­நடை இலக்­கி­யத்­திலும் சாதனை படைத்தார். “ஏசு­கா­வியம்” எழுதி தமிழ்ப்­பேசும் கிறிஸ்­தவ சகோ­த­ரர்­களின் பேரா­த­ர­வையும், “அர்த்­த­முள்ள இந்­து­மதம்” நூற் தொகு­தி­களை எழுதி இந்­துக்­களின் அன்­பையும் பெற்றுக் கொண்டார். அப்­ப­டி­யென்றால், தமிழ்ப்­பேசும் முஸ்­லிம்­க­ளுக்­காக சமய சார்­பாக எதுவும் எழு­த­வில்லை என்­கி­றீர்­களா?

கவிஞர் கண்­ண­தாசன் ஆரம்ப காலங்­களில் திரா­விட இயக்­கங்­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருந்­த­போது முஸ்­லிம்­க­ளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்­புக்கள் இருந்­த­மையால் இஸ்­லாத்­தை­யும்–­அதன் விழு­மிய சிறப்­புக்­க­ளையும் நன்கு அறிந்து –தெரிந்­து–­பு­ரிந்து கொண்ட தெளிவு கவி­ஞ­ரிடம் இருந்­த­மையால், முதலில் புனித குர்­ஆனை பூந்­த­மிழில் மொழி­மாற்றஞ் செய்­யவே விழைவு கொண்டார். அதா­வது “அர்த்­த­முள்ள இந்­து­ம­தம்”–“­ஏ­சு­கா­வியம்” இரண்­டையும் எழு­தமுன், குர்­ஆனைத் தமி­ழுக்குத் தரவே கவிஞர் விரும்­பினார்.

ஆனால்–­க­விஞர் விரும்­பி­யது நடக்­க­வில்லை. “ஏசு­கா­வி­யம்”–“­அர்த்­த­முள்ள இந்து மதம்” இரண்டும் வெளி­வந்து விட்­டன. முஸ்­லிம்­களின் புனித குர்­ஆனை தமி­ழுக்கு மொழி­பெ­யர்க்கும் கவி­ஞரின் முயற்சி ஏன் நடக்­க­வில்லை? அது அறி­வு­பூர்­வ­மான ஒரு சிந்­த­னை­யோட்­டத்தை ஏந்­தி­யி­ருந்­தமை, சம­கால இலங்­கையின் சிந்­த­னைக்கு விருந்­தாகும்.

கவிஞர் கண்­ண­தாசன் தமிழ்த் திரை­யு­லகில் பாட­லா­சி­ரி­ய­ராகக் கொடி கட்டிப் பறந்த காலம். கவி­ஞரின் பாடல் வரிகள் பட்டித் தொட்டி எங்கும் முணு­மு­ணுக்­கப்­பட்ட தருணம். கவிஞர் நினைத்­ததை முடிக்கும் புகழ் குவிந்த வேளை. கவிஞர் கண்­ண­தாசன் தான் நடத்­திய “தென்றல்” என்ற சஞ்­சி­கையில் முஸ்­லிம்­களின் புனித மறை­யான குர்­ஆனை தமிழ்ப்­ப­டுத்தும் தன் ஆசையை வெளி­யிட்டார்.

செய்தி தமிழ் கூறும் நல்­லு­ல­கெங்கும் தென்­றலாய் பர­விற்று. ‘பிர­ப­ல­மான கவி­ஞர்–­அ­ரு­மை­யான முயற்­சி–­அ­ழகு தமிழில் அறி­வுப்­ப­சிக்குத் தீனி­யாக வெளி­வரும்’ எனத் தமிழ் உள்­ளங்கள் எதிர்­பார்த்­தன. தமிழ் நாட்டு முஸ்­லிம்கள் ‘நல்ல பணி­தானே’ என்று பாராட்­டி­விட்டு வாளா­வி­ருக்­க­வில்லை. சிந்­தித்­தார்கள்; சீர்­தூக்கிப் பார்த்­தார்கள். ஒரு முடி­வுக்கு வந்­தனர். அம்­மு­டிவை கவிஞர் முன் வைப்போம். கவி­ஞ­ருடன் கலந்­து­ரை­யா­டுவோம். கருத்துப் பரி­மா­றுவோம். தெளிவு பிறக்கும் இன்ஷா அல்லாஹ் எனத் தீர்­மா­னித்­தனர்.
தீர்­மா­னத்­தின்­படி கவி­ஞரை முஸ்லிம் அறிவு ஜீவி­க­ளான உல­மாக்கள் சிலர் சந்­தித்­தனர். கவி­ஞரோ இன்­முகம் காட்டி, நன்­மொழி பேசி வர­வேற்று உப­ச­ரித்தார். கருத்துப் பரி­மாற்றம் ஆரம்­ப­மா­னது.

“கவி­ய­ரசே….. நீங்கள் வெளி­யிட்ட ஆசை நியா­ய­மா­னது. நாங்­களும் முஸ்லிம் சமு­தா­யத்தின் சார்­பாக உங்­களை மெச்­சு­கின்றோம்; புகழ்­கின்றோம்; நன்­றியும் தெரி­விக்­கின்றோம். ஆனால், ஒரு சில சிக்­கல்கள் மனத்தை சிணுங்கச் செய்­கின்­றன. அவற்றை உங்­களின் மேலான கவ­னத்­திற்குத் தரு­கின்றோம். அவை பற்றி நீங்கள் ஆழ­மாக சிந்­தித்து முடி­வெ­டுங்கள்” என முஸ்லிம் உல­மாக்கள் முன்­னுரை நிகழ்த்­தினர்.

“என்ன சிக்கல் என்­பதை மனந்­தி­றந்து தெளி­வாகச் சொல்­லுங்கள்.

மெல்லாம் கூடிப் பேசி தெளிவு பெறுவோம்” எனக் கவிஞர் கூறி, சுதந்­தி­ர­மான கருத்­துக்­க­ளுக்கு வாசலைத் திறந்து வழி­விட்டார். தானொரு புகழ் பூத்த பெருங்­க­விஞன் என்ற பம்­மாத்து சிறி­து­மின்றி இட­ம­ளித்தார்.

“கவி­ய­ர­சரே…. எங்­க­ளது திரு­மறை குர்ஆன் மனி­தனால் எழு­தப்­பட்ட நூலன்று. அது வல்ல இறை­வனால் வஹி­மூலம் நபி­க­ளா­ருக்கு அரு­ளப்­பட்ட இறை­வேதம். அதனால் தானோ, என்­னவோ அது அரு­ளப்­பட்ட நாள் முதல் இன்று வரை ஒரு வரி­யேனும்– ஒரு எழுத்­தே­னும்–­ஒரு அட்­ச­ர­மேனும் சேர்க்­கப்­ப­டவோ, நீக்­கப்­ப­டவோ இல்லை….”

“…..இது முஸ்­லிம்­க­ளுக்­காக மட்டும் அரு­ளப்­பட்ட வேத­மல்ல. முழு மனித சமு­தா­யத்­திற்­கா­கவும் அரு­ளப்­பட்ட வையத்தில் வாழ்­வாங்கு வாழ்­வ­தற்­கென இறக்­கப்­பட்ட ஒரு வாழ்க்­கைத்­திட்டம். அதனால் இது முழு உலக மனி­தர்­க­ளுக்கும் கிடைக்­கத்­தக்க விதத்தில் உல­கி­லுள்ள எல்லா மொழி­க­ளிலும் மாற்­றப்­பட வேண்­டி­யது அவ­சி­யமே. அந்த வரி­சையில் நம் தேன் தமி­ழிலும் இக்­குர்ஆன் மொழி மாற்றம் செய்­யப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்க முயற்­சியே! ஆனால்……..” என நீட்ட……

“தயக்­க­மின்றி சொல்­லுங்கள்….” எனக் கவி­ய­ரசர் வாசலை அகலத் திறந்தார்.
“நீங்கள் தமிழ்க்­க­விஞர். உங்­க­ளுக்குத் தமிழ்ப்­பு­லமை பாண்­டித்­தியம் எல்லாம் உண்டு. குர்ஆன் அர­பு­மொ­ழியில் இறக்­கப்­பட்ட வேதம். உங்­க­ளுக்கோ அரபு தெரி­யாது. அரபு மொழி வாசிக்­க–­எ­ழுத மட்டும் தெரிந்­தாலும் போதாது. அம்­மொ­ழியில் நன்கு பாண்­டித்­தியம் பெற்­றி­ருக்க வேண்டும்……”

“அரபு மொழி நம் தமிழ் போல தொன்­மை­யான மொழி. சொல்­வளம் மிக்க மொழி. சில பொருட்­க­ளுக்கு அர­பியில் நூற்­றுக்கு மேற்­பட்ட சொற்கள் கூட இருக்­கின்­றன. ஒட்­ட­கத்­திற்கு மட்டும் ஆயிரம் சொற்கள் வரை இருக்­கின்­றன. ஆயிரம் சொற்­க­ளுக்கும் ஆயிரம் கருத்­துக்கள் இருக்­கின்­றன. இந்த சொற்­களின் சில­வற்­றுக்கு வர­லாற்றுப் பின்­ன­ணியில் தான் அச­லான உரு­வங்கள் இருக்­கின்­றன…”

“அத்­த­கைய அச­லான சொற்­களின் முழு வடி­வத்தைப் புரிந்து கொள்ள வேண்­டு­மானால், வர­லாற்றுப் பின்­னணி தெரிந்­தி­ருக்க வேண்டும். உங்­க­ளுக்கோ அரபு மொழியும் தெரி­யாது; அரபு மொழியில் பாண்­டித்­தி­யமும் இல்லை. வர­லாற்றுப் பின்­ன­ணியும் புரி­யாது. இந்­நி­லையில் குர்­ஆனை தமிழ்ப்­ப­டுத்­து­வது எங்­ஙனம் சாலும்? என சிந்­தி­யுங்கள்” எனக் கூறிய உலமா அமை­தி­யானார்.
இவற்றை எல்லாம் செவி­ம­டுத்த செந்­தமிழ்க் கவி­ஞரும் சிந்­திக்­க­லானார். சிறிது நாழிகை அவர்­க­ளி­டையே அமை­தி­யாகக் கழிந்­தது. அமை­தியை கிழித்துக் கொண்டு, “நீங்கள் சொல்­லிய எந்தத் தகு­தி­யுமே எனக்­கில்லை. வர­லாற்றுப் பின்­னணி புரி­யாமல் சொற்­க­ளுக்குப் பொருள் தேடு­வது முடி­யாத காரியம். இது விரலை சுட்டுக் கொள்ளும் முயற்சி. நான் இம்­மு­யற்­சியை கை விடு­கிறேன்…” எனக் கூற­லானார் கவிஞர் கண்­ண­தாசன்.

என்னே பெருந்­தன்மை! தனது தகு­தியைத் தொட்­டுக்­காட்­டி­யதை – தானொரு நாட­றிந்த கவிஞன் என்ற மம­தையோ, ஈகோ உணர்வோ சிறி­து­மின்றி ஏற்றுக் கொண்ட அந்த மனம், எவ்­வ­ளவு விசா­ல­மா­னது? தானொரு ‘உலக மகா கவிஞன்’ என்­பதை அழ­காக அடை­யா­ளப்­ப­டுத்தி விட்டார் கவி­ய­ரசர் கண்­ண­தாசன்.

வர­லாற்றுப் பின்­னணி புரி­யாமல், ஒரு சொல்­லுக்குப் பொருள் தேடும் அரை­வேக்­காட்டு மனி­தர்கள், கவி­ஞரின் வார்த்­தை­களை சிந்­திப்­பார்­க­ளாக!
இந்த சம்­ப­வத்தின் மூலம் மட்­டுமா தமிழ்ப் பேசும் முஸ்­லிம்கள் மனங்­களில் கவிஞர் கண்­ண­தாசன் இடம் பிடித்தார். இன்­னொரு விட­யமும் உண்டு. அதன் மூலமும் முஸ்­லிம்கள் நெஞ்­சங்­களில் கவிஞர் ஆசனம் போட்டு அமர்ந்­துள்ளார். அது என்ன விடயம்?

கவி­ஞ­ருக்கு மிக நெருக்­க­மான முஸ்லிம் நண்­பர்கள் “உங்­க­ளது அழகுத் தமிழால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டும்” என அன்புத் தொல்லை செய்து நச்­ச­ரித்­த­மையால், என்றும் நிலைத்­தி­ருக்கும் வண்ணம் குர்­ஆனின் தலை­வாசல் எனத்­தகும் ஸூரத்துல் பாஃத்­திஹா (அல்­ஹம்து) வின் ஏழு வச­னங்­க­ளையும் கவிஞர் தமிழ்க் கிண்­ணத்தில் தந்­துள்ளார். நீங்­களும் அவற்றை சுவைத்துப் பாருங்கள். “திறப்பு” எனும் தலைப்பில் கவிஞர் தந்த தமிழ் வரிகள் இதோ…

எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லா(ஹ்)வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்;

உலகமெல்லாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லா(ஹ்)வே
தோன்றுபுகழ் அனைத்திற்கும் 
சொந்தமென நிற்பவனாம்;

அவன் அருளாளன் அன்புடையோன்
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்
உன்னையே நாங்கள் 
உறுதியாய் வணங்குகிறோம்
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகின்றோம்;

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;

அருளைக் கொடையாக்கி
யார்மீது சொரிந்தனையோ,
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்திவிடு;

எவர்மீது உன்கோபம்
எப்போதும் இறங்கிடுமோ,
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ,
அவர்களது வழிவிட்டு
அடியவரைக் காத்துவிடு!

“சத்­திய எழுத்­தாளன்” கலா­பூ­ஷணம் எஸ்.ஐ.நாகூர்­கனி

No comments

Powered by Blogger.