Header Ads



வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரை, தலையை மிதித்துக்கொன்ற யானை


திம்புலாகல, அலவாகும்புர கிராமத்தில் யானை மிதித்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (09) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அலவாகும்புர பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த குறித்த நபர் அதிக உச்னம் காரணமாக வீட்டு வாசலில் தூக்கி கொண்டிருந்த போது யானை அவரது தலையை மிதித்துக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.