Header Ads



முஸ்லிம்கள் வர்த்தக நோக்கத்திற்காக கிழக்கில் வந்து களமிறங்கினர், இதுதான் அவர்களின் வரலாறு - கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் வடகிழக்கு இணைந்த தாயகத்திற்காக ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்த போது அவர்களிடம் முஸ்லிம் தலைமைகள் தனியலகு கோரிக்கையை முன்வைத்ததாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

கேள்வி - விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் முஸ்லிம் தலைமைகளுக்குமான சந்திப்பின் போது தனியலகு பற்றி பேசப்பட்டதா?

பதில் - முஸ்லிம் தலைமைகள் பேச்சு வார்த்தைகளின் போது தனியலகு கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக நோர்வே தலைமையிலான பேச்சுக்களின் போது ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

ஆனால் நாம் அதனை ஏற்று கொண்டிருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் வடகிழக்கு இணைந்த தாயகத்திற்காகவே ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தார்கள். வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிம்கள் வர்த்தக நோக்கத்திற்காக கிழக்கில் வந்து களமிறங்கியவர்களாக காணப்படுகின்றார்கள். முதன்முதலாக முஸ்லிம் ஆண்களே கல்முனைக்குடியில் வந்திறங்கினார்கள்.

இவ்வாறு தான் அவர்களின் வரலாறு இருக்கின்றது. அப்படியிருக்கையில், வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம். தமிழர்களுக்கு தாயகம் கிடைக்கின்ற போது முஸ்லிம்களுடன் பேச்சுகளை நடத்தி தீர்வினை வழங்குவோம் என்ற முடிவுக்கே வந்திருந்தோம்.

ஏனென்றால் தனிநாடு கோரி நாம் போராடிக்கொண்டிருக்கையில், முஸ்லிம்களும் தனியலகைக் கோருக்கையில் அது கிடைப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.

அதற்காக முஸ்லிம்களை எமது நிர்வாகத்திற்குள் அடக்குவதற்கு நாம் விரும்பவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வடக்கும் கிழக்கும் இணைவதை எதிர்ப்பதில் முதலாவது முஸ்லிம் பிரதிநிதி ஹிஸ்புல்லாஹ் ஆவார்.

வடக்கு, கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றார். ஆனால் அவர் என்ன நோக்கத்திற்காக கூறுகிறார் என்பது தெரியாதுள்ளது.

8 comments:

  1. இழிசாதி பறையன் பெண் ஆசைக்கு காட்டிக்கொடுத்தும், கூட்டிகொடுத்ததும் பிரபாகரன் கதையை முடித்துவிட்டு இன்று நாய் வேடம் போடுகிறான்

    ReplyDelete
  2. பணம்,பெண்,சொகுசு வாழ்க்கை இவைகலுக்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்த,நீதான் காட்டு வாழ்க்கை,மிருக வாழ்க்கையில் இருந்து அண்மையில் மனித வாழ்க்கைக்கு திரும்பினாய் என்பதை நினைவில் வைத்துக்கொள் இனவாத,கொலைகார மிருகமே.

    ReplyDelete
  3. இவருக்கு இவருடைய வரலாறே தெரியாது அதற்குள் முஸ்லிம்களைப் பற்றி பேசுகிறார்.....

    ReplyDelete
  4. முன்னாள் பிரதி அமைச்சரா ?
    முன்னாள் கொலை காரன்,
    முன்னாள் தீவிரவாதி ok
    இவன் பிரதி அமைச்சரா இருந்தானா ?

    ReplyDelete
  5. துரோகி என்பதற்கு அகராதியில் கருத்து தேடினால் " கருணா" என்றிருக்கும். அப்படிப்பட்ட துரோகி இப்போ வரலாறு பற்றி பேசுறான்.

    ReplyDelete
  6. தாயகம் என்பது ஒரு சமூகம் பல நூற்றாண்டுகளாக பிறந்து வாழ்ந்து வரும் பகுதியைக் குறிக்கும்.அப்படியாயின் இன்று நேற்று வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களா?அவர்களுக்கும் அது தாயகம்தான்.தமிழர்களுக்கு மட்டும்தான் தாயகம் என்பது முட்டாள்தனமான கருத்து.

    ReplyDelete
  7. இவன்யார் கருத்துச்சொல்ல

    ReplyDelete
  8. Iya Karuna, nee thayaham patti pesuhirai your lol,lol okay
    Ondu sei rasa entha vitha pathappum illama onda solaiyaham(kokkadicholi) la oru nal (just 24 hours) poi thannan thaniya thangittu va mukkuva parpam onda mukkuva iname onna pudichi nar nar aha kilchiruvanuhal athukkulla nee thamil thayaham patti kathaikirai eduda thumbukattaya naikku soppirathukku.

    ReplyDelete

Powered by Blogger.