Header Ads



புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கி வருகிறேன் - மஹிந்த தெரிவிப்பு

2015ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஒரு தடவையே ஜனாதிபதி தனது பதவியில் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார். 

நேற்று பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி வெட்பாளர் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை முன்னிறுத்துவதாகவும் அவர் கூறினார். 

அத்துடன் புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்குவதாகவும், வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்கள் அதில் இணையலாம் என்றும் அவர் கூறினார். 

தமக்கு ஆதரவான முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்துக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.