Header Ads



ரிசாட்டை கைதுசெய்து விசாரிக்காதது பிரச்சினைக்குரியது

பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தாதது பிரச்சினைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சென்றிருந்த போதே திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட இரண்டு பேருக்கு முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீனுடன் இருந்த தொடர்புகளை மறைக்கும் தேவை யாருக்கும் இல்லை. எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தில் றிசார்ட் பதியுதீன் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவார். அந்த வேட்பாளர் நாட்டை நேசிக்கும் நபராக இருப்பார் எனவும் எஸ்.பி.திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Oattu mottha Samoorthi kasaiyum kollayaditthu eappam vitta naikku, pin kathaval nulainthu pathaviyai Pera mudiyamai karanamaha panni peeya thinnuthu.

    ReplyDelete

Powered by Blogger.