Header Ads



வெலிகமயில் புத்தர் சிலைக்கு, கல் அடித் தாக்குதல்


வெலிகம, கப்பரதோட்டை பிரதேசத்தில் வீதியில் இருந்த புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று -21- அதிகாலை 04.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

புத்தர் சிலை மீது இரண்டு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேகநபர்கள் இதுவரை இனங்காணப்படாத நிலையில், புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக முரண்பாடு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.