Header Ads



"உலமா சபை எம்முடன், வெளிப்படையாக பேச முன்வர வேண்டும்" ஞானசாரர்

'இது இஸ்லாமியரின் சித்தாந்தம் தொடர்பான பிரச்சினை. அது எழுந்ததுமே அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முஸ்லிம் மத அமைப்பில் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எம்மிடம் உள்ளது'

'பிக்குமார்களினால் செய்ய முடியாதவற்றை அரசியல்வாதிகள் செய்து முடிக்க வேண்டும். அவசியமான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை மாற்ற வேண்டும். அராபிய சட்டங்கள் தேவையா இல்லையா என்பது அரசியல்வாதிகளால் கலந்துரையாடப்பட வேண்டும்'  

'மோதல் ஒன்று நிகழ்ந்திருக்குமானால் தாம் வாள்களை வைத்திருந்ததை வஹாப்வாதிகள் நியாயப்படுத்த அது உதவியிருக்கும்' 

கேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலோடு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

பதில்: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதி, இன ஒற்றுமைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நாடு மிகவும் அபாயகரமான நிலைமையிலுள்ளது.

கேள்வி : ஆனால், இன்று மகாநாயக்க தேரர்கள், முஸ்லிம் மதத் தலைவர்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வந்திருக்கிறார்கள் அல்லவா?

பதில் : ஆனால், இவர்கள் நீங்கள் கூறும் இந்த நல்லிணக்கத்தை உருவாக்க முனைவது யாருடன்? கர்தினால் ஆண்டகையை முத்தமிட எண்ணுகிறேன் என்று கூறுவது யார்? இவர்கள்தான் வஹாப் வாதத்தின் தந்தைகள். அவர்கள்தான் கடந்த காலங்களில் குரைக்கும் நாயை மாமிசம் உண்ணும் நாய்களாக மாற்றி அவிழ்த்துவிட்டவர்கள். தற்போது அதைப்பற்றிக் கேட்டால் ஆம். நாயை நாம் தான் வளர்த்தோம் என்று கூறி கதையை அத்துடன் நிறுத்திவிடுகிறார்கள். நோயுள்ள நாய் கடித்தால் அந்த நாயை வளர்த்தவரிடமிருந்தே தண்டப் பணம் அறவிடப்படும். ஆனால் நாம் என்ன செய்தோம்? இவர்களுடன்தான் இன்று இந்தப் பிரச்சினை பற்றி கதைக்கின்றார்கள். அவ்வாறாயினும் எவ்வாறு நாம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது? இந்த வெறிபிடித்த அடிப்படை வாதம் ஆரம்பித்தது வீட்டில். முதலில் தந்தையும் மகனும் வீட்டில் அடித்துக்கொள்வார்கள். சகோதர சகோதரிகள் அடித்துக்கொள்வார்கள். பக்கத்து வீட்டாருடன் சண்டை செய்வார்கள். அது விரிவடைந்து பள்ளிவாசல்கள் பள்ளிவாசல்களுடன் அடித்துக்கொள்ளும். இவ்வாறுதான் இது ஏற்பட்டது.

கேள்வி: அவ்வாறாயின் தர்கா நகரில் இவ்வாறான நிலையையா நாம் கண்டோம்?

பதில்: தர்கா நகரில் மாத்திரமல்ல; திஹாரியா, பகலதெனிய, மாதம்பை, தொடங்கஸ்லந்த, காலி போன்ற அநேகமான இடங்களில் இந்நிலைமையைக் கண்டோம்.

கேள்வி: நீங்கள் அக்காலப் பகுதியில் இதுதொடர்பாக பொறுப்பான தரப்பினரிடம் அறிவுறுத்தவில்லையா?

பதில்: நாம் இது பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எழுதி அனுப்பினோம். 2014ல் இருவர் இணைந்து சஹ்ரானை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக முன்னாள் அரசின் தலைவருக்கு பாதுகாப்பு செயலாளருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் கூறினோம். இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பேசுபவர்கள் அன்று அதுபற்றி கணக்கெடுக்கவில்லை. இன்றுள்ளவர்களும் அவ்வாறுதான். இன்று இதனை காரணமாகக் கொண்டு யாராவது அரசியல் லாபம் தேட எண்ணினால் இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென்றால் அதற்கு தேசிய நிகழ்ச்சி நிரலொன்று தேவை.

கேள்வி: ஆனால் எமக்குள் பல அடிப்படைவாத பிரிவுகள் தலைதூக்க முயற்சி செய்வது தெரிகின்றதே.

பதில் : சஹ்ரானின் தற்கொலைத் தாக்குதலுக்கு கெக்கிராவையில் மீன்பிடிக்கும் முஸ்லிம் தந்தை பலியா? தங்காலையில் மீன்பிடிக்கும் முஸ்லிம் மீனவர் பலியா? கொழும்பில் மற்றும் நெரிசலான பிரதேசங்களில் நடைபாதை வியாபாரிகள் பலியா? சந்தியில் கடலை விற்கும், வடை விற்கும் போத்தல் பத்திரிகை, இரும்புப் பொருட்களை சேகரிக்கும் மனிதர் பலியா? இவர்களையா நாம் அடிக்கப் போகின்றோம்? தயவுசெய்து அந்தக் குற்றத்தை மட்டும் செய்ய வேண்டாம். நாம் அவர்களுடன் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவோம். இந்த அப்பாவி பிள்ளைகளை மதரசாக்களில் அடைத்துவைத்து கறுப்பு வெள்ளை நீல மண்ணிற அங்கிகளுக்குள் மறைத்து நிக்காப், புர்கா, ஹிஜாப் என்பவற்றால் மூடி வைக்கிறார்கள். இந்நிலைமையை எமது சித்தாந்தத்தால் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நடுநிலையாக சிந்திக்கும் மதத்தலைவர்கள் மற்றும் பிக்குகள் இங்கு தலைமைவகிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கேள்வி: ரத்தன தேரரின் நடவடிக்கை முஸ்லிம் அடிப்படைவாதத்தை நோக்கி முஸ்லிம்களை தள்ளும் விதத்தில் உள்ளதாக நீங்கள் கூறியது ஏன்?

பதில்: உண்ணாவிரதம் இருக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், ஏன் குண்டுவெடித்து ஒரு வாரத்துக்குள் அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவில்லை? இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிரச்சினைக்கு உரியதென்றால் அவருக்கு அது தெரிந்திருந்தால் அன்று ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரு மாதமும் இரண்டு வாரங்களும் கடந்த பின்னரா அவர் இதனை செய்யவேண்டும்? தற்போது மறைக்க வேண்டிய அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது. நான் இந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கிறேன் என எண்ணவேண்டாம். ஆனால், அவர் திடீரென இவ்வாறு அமர்ந்தது ஏன்? என்ற கேள்வி எனக்குள்ளது.

கேள்வி: மறுநாள் நீங்கள் கண்டிக்கு சென்றது சிங்கள பௌத்த சக்தி ரத்தன தேரருடன் இணைந்து விடும் என்ற பயத்தாலா?

பதில் : அன்று நாம் கண்டியிலிருந்தோம். நாம் அங்கு சென்றோம். நாம் அங்கு செல்லாவிட்டால் இவர்களே கூறுவார்கள், ஞானசார தேரரை கட்டிப்போட்டுள்ளார்கள். வாயை கட்டிவைத்துள்ளார்கள் என்று. வேறு ஏதாவது 'கேம்' ஒன்று பெரியவருடன் இருக்கும். அதனால் தான் செல்லவில்லையென்று சொல்வார்கள். இன்று முஸ்லிம் அமைச்சர்கள் குறித்து சிங்கள சமூகத்தினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கு இவ்வாறா விடை தேடுவது? அவர் இது தொடர்பாக ஜனாதிபதியுடன், பிரதமருடன் பேசி, அமைச்சரவைக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்கலாம். அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவ்வாறான நடவடிக்கைக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அங்கு சேர்ந்த கூட்டத்தை வழிநடத்த ஒருவர் அங்கிருக்கவில்லை. எல்லோரும் அதனை தூண்டுவதற்கே அங்கிருந்தார்கள். அநேகமானோர் அங்கு இனவாத தீயை மூட்டுவதற்கு தயாராகவிருந்தார்கள். எந்தவொரு கூட்டத்திற்கும் ஒழுக்கமிருக்க வேண்டும். அதற்கான நோக்கம் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர் எமக்கு இதுபற்றி அறியத் தந்திருக்கலாம். அவ்வாறென்றால் நாம் கலந்துரையாடி நீங்கள் இந்த பிக்குகள் அமைப்புக்கு தலைமை தாங்குங்கள் என்று கூறி இதனை வழிநடத்தி வெற்றிபெற அனைத்து நடவடிக்கைகளையும் செய்திருப்போம். ஆனால் அவர் திடீரென போய் அமர்ந்துவிட்டார். பொறுப்பான எவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவ்வேளையில்தான் நான் சென்று கூறினேன்,                   

நாளை 12மணி வரையும்தான் காலக்கெடு இல்லாவிட்டால் முழு நாட்டையுமே ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று. ஆனால், இவ்வேளையில் செய்யவேண்டியது. நாட்டு மக்கள் உண்ணாவிரதம் தொடர்பாக ஆர்வம் காட்டுவதைக் குறைத்து சரியான பிரச்சினையை கவனத்தில் கொள்வதாகும். இவ்வாறான செயல்களால் உண்மையான பிரச்சினை மழுங்கடிக்கப்பட்டு விடும். அதனால்தான் நான் அதனை விமர்சனம் செய்தேன்.

கேள்வி: அமுலில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நம்பிக்கை கொள்ள முடியுமா?

பதில் : எனக்கென்றால் தெளிவானதும் ஏகமனதானதுமான திட்டமொன்று உள்ளதாகத் தெரியவில்லை. இப்பிரச்சினை தொடர்பில் அனைவரும் வெளிப்படையாக தொடர்புகொள்ள வேண்டும். உலமா சபை எம்முடன் இது தொடர்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வரவேண்டும். முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தற்போது ஒருபுறம் உள்ளார்கள். அதுவும் நல்லது. தற்போது அவர்களால் எம்மோடு வெளிப்படையாக அமர்ந்து பேசமுடியும். ஆனால், அவர்கள் அவ்வாறு பேச முயற்சிப்பதாக எமக்குத் தோன்றவில்லை. யு.என்.பி., ஸ்ரீலங்கா, ஜே.வி.பி. ஆகியோருக்கு முடியுமென்றால் எம்மோடு இதுபற்றிப் பேச அவர்களால் ஏன் முடியாது? உங்களுக்கு எம்முடன் உள்ள பிரச்சினை என்ன? எமக்கு தெரிந்தவற்றை நாம் உங்களுக்கு கூறுகின்றோம். நாம் ஒன்றாக இணைந்து இந்நாட்டு பிள்ளைகளையெண்ணி இந்தப் பிரச்சினையை கலந்துரையாடி தீர்த்துக்கொள்வோம். அவ்வாறு கதைப்பதற்கு இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள்? அந்த நல்ல குணம் ஏன் அவர்களிடம் இல்லை? இவ்வேளையில் நாட்டையும் மக்களையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவும் வெளிப்படையாக இந்தப் பொதுவான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவேண்டியதே முதலில் செய்ய வேண்டியதாகும்.

கேள்வி: இதற்காக நீங்கள் எவ்வாறான திட்டங்களை இந்நாட்டு தலைவர்களுக்கு பரிந்துரைக்கின்றீர்கள்?

பதில்: உடனடியாக விசாரணை ஆணைக்குழுவை அமையுங்கள் என ஜனாதிபதிக்கு பரிந்துரையொன்றை வழங்க நாம் விரும்புகிறோம். சிங்களவர்களால் முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினை என்ன? முஸ்லிம்களால் சிங்களவர்களுக்குள்ள பிரச்சினை என்ன? இவ்விருவர்களாலும் தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினை என்ன? இவ்விடயங்கள் பற்றி கலந்துரையாடி இச் சமூகங்களின் மனதை குளிர வைக்காமல் எம்மால் இந்தப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் எட்ட முடியாது. இந்தப் பிரச்சினைப் பற்றி பேசாமல் புரையோடிப்போக விட்டதால்தான் அவர்கள் ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால் இந்தப் பிரச்சினையை கலந்துரையாட இடமொன்றை தயார் செய்யும்படி நாம் கேட்கிறோம்.

ரஸிக கொட்டுதுரகே   தமிழில்: வீ.ஆர். வயலட்


7 comments:

  1. அது உல்லாச சபை

    ReplyDelete
  2. இந்த தலையங்கம் தொடர்பாக இவனுடன் உல‌மா சபை பேச இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது

    ReplyDelete
  3. பேசாமல் நாட்டை இவரிடமே கொடுத்தால் என்ன! ஒரு முடிவு கண்டுவிடுவார்.

    ReplyDelete
  4. நீங்க யாரு அரசின் என்னபதவியில் இருக்கிற

    ReplyDelete
  5. இலங்கையில் அரசியல்வாதியை விட பிக்குகளுக்கு ஒரு பலம் உண்டு அதை எமது முட்டாள்தனமான பதிவுகளால் புறக்கணிக்க முடியாது , எதையும் மதியால் வெல்ல வேண்டும் அதற்கு சிங்களத்தில் பேச்சு வன்மை அவசியம் அது உலமா சபையிடம் இல்லை , இந்த பிக்குவை மதிக்காதவர்கள் அவர் பிரச்சினையை கிளப்பிய போது அவர் முஸ்லிமாக வேண்டி பலர் துஆ கேட்டனர் , பதிவிட்டனர் , நாம் பேசும் விதமாக பேசினால் ,,,,எல்லாம் சாதகமாகும் , உள்ளதை புரட்டுபவன் அல்லாஹ்

    ReplyDelete
  6. நீங்க யாரு ராசா உங்களோடு பேச, இந்த நாட்டின் ஜனாதிபதியா இல்ல பிரதமரா? பிரியா பேச வேண்டும் என்றால் Ajan உடன் பேசி மகிழுங்கள், அவரும் வேல வெட்டி இல்லாம சும்மாதான் இருக்கார் போலிருக்கு.

    ReplyDelete
  7. ஞானசாரருக்கு ஜோக் எல்லாம் அடிக்கத் தெரியாதென்று நீங்கள் எல்லாம் சொன்னீர்கள். அதை நாங்கள் எல்லாம் நம்பினோம். இதனை விடவும் பெரிய ஜோக் உங்களுக்குத் தேவையா? குவியட்டும் பாராட்டுகள் ஞானசாரருக்கு. ஜோக் மன்னன்” (Emperor of the Jokes) என்ற பட்டத்தையும் முஸ்லிம்கள் சார்பில் அவருக்கு நாம் சூட்டுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.