Header Ads



பலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)


நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட்டுள்ளது.

தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிங்கள காடையர் கூட்டமே இந்த வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதேவேளை சம்பவ இடத்திற்கு முப்படையினரும் விரைந்துள்ளனர்.

அங்குள்ள முஸ்லிம்களும் அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கருகில், பெருமளவில் கூடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தன.

பலகத்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவிலான கிறிஸ்த்தவர்கள் வசித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.