Header Ads



றிசாத் பதவி விலகவிட்டால், அவருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிப்பேன் - பிரதியமைச்சர் எச்சரிக்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அமைச்சர் பதவி விலகவிட்டால், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தான் தீர்மானித்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று -20- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு, இராணுவத் தளபதிக்கு அமைச்சர் அழுத்தம் விடுத்துள்ளதன் மூலம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தடையை ஏற்படுத்துவதாக சமூகத்தில் நிலைபாடு தோன்றியுள்ளதாகவும், இந்த விடயங்களை கருத்திற்கொண்டே, அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாகவும் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.