Header Ads



எமது பக்கம் வருகிறீர்களா..? றிசாத்திற்கு இரவில் தொலைபேசியில் அழைப்புவிடுத்த மகிந்த

எதிர்க்கட்சியினர் பகலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றனர். இரவில் எதிர்க்கட்சி தலைவர் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தமது பக்கம் வாறீர்களா என்றும், வந்தால் உங்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் எனவும் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும  சபையில் தெரிவித்தார். 

அத்துடன் உண்மையில் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது உண்மையென்றால் ஏன் அதில் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிடவில்லை. எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. முஸ்லிம் மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் நாம் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்க மாட்டோம். அதேபோல் நல்லவர்களை தண்டிக்க இடமளிக்கவும் மாட்டோம். 

இன்று ஏற்பட்டுள்ள பயங்கரவாத நகர்வுகளுக்கு அங்கீகாரம் கொடுத்தது முன்னைய ஆட்சியாளர்களே எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.