குருநாகலில் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த திட்டம் - தேரர்களும், பலம்பொருந்திய நபர்களும் பின்னணி
குருநாகல் பகுதியில் (நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை) குழப்பம் ஒன்றினை ஏற்படுத்த சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து நபர்கள் அங்கு குழப்பங்களை ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளனர். இதில் தேரர்கள் சிலரும் பலம்பொருந்திய நபர்கள் சிலரும் இருந்துள்ளனர்.
எனினும் எமது படைகளை கொண்டு உடனடியாக இவற்றை தடுக்க எம்மால் முடிந்துள்ளது.இந்த விடயங்களில் ஊடகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும்.
செவ்வாய்க்கிழமை குருநாகல் பகுதியில் குழப்பமேற்படுத்த தேரர்கள் சிலரும் அவர்களுடன் இணைந்து பலம்பொருந்திய நபர்கள் சிலரும் முயற்சித்தனர் என பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
ஏன் அந்த தேரர்கலையும்,பலம் பொருந்தியவர்கலயும் கைது செய்து அவசர காலச் சட்டத்தில் அடைக்க முடியாது.ஆனால் அப்பாவி பெண்களை ஆடைக்காக அவசரகாலச் சட்டத்தில் கைது செய்யத்தான் உங்களால் முடியும்.
ReplyDelete