Header Ads



புளிச்சாக்குளம் ஜும்ஆப் பள்ளிவாசலில், சகல மதத்தலைவர்களும் ஒன்றுகூடினர்




இன மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்;படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட சர்வ மத ஒன்று கூடல் நிகழ்வு புத்தளம் புளிச்சாக்குளம் பிரதேசத்தின் புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் 29.05.2019 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல அரசியல்வாதிகள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உட்பட பல அரச ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர்கள், சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல உறுப்பினர்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் உட்பட பெருந்திரளான பிரதேசமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கு பிரதம பேச்சாளராக அஷ;nஷய்க் முனீர் முழப்பர் (நளீமி) அவர்கள் வருகைதந்திருந்தார்கள்.

மேலும் தற்போதைய சூழ்நிலையின் நிமித்தம் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மார்க்கம் பற்றிய அதிருப்தி மாற்றுமத சகோதரர்களுக்கு மத்தியில் உருவாகியுள்ளதின் காரணமாக இவ்வாறான நிகழ்ச்சிகள் நடாத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே இஸ்லாம் போதித்துள்ள சாந்தி, சமாதானம், சமத்துவம் போன்ற பண்புகளை போதனைகளில் மாத்திரமன்று எமது அன்றாட வாழ்விலும் எடுத்து நடக்கக் வேண்டிய காலகட்டத்தில் நாம் இறுக்கின்றோம்.

அதன் அடிப்படையில் இப்பிரதேசத்தின் பள்ளி பரிபாலன சபையினர், ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள், சமூக அடிப்படையிலான அமைப்பினர், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் முஸ்லிம் ஹேன்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.