Header Ads



அல்குர்ஆனை வைத்திருந்த, பிக்கு கைது - பிரதேச வாசிகள் பிடித்தனர்


மஹரகம தஹம் மாவத்தையில் குர்ஆன் ஒன்றை தம்வசம் வைத்திருந்த பிக்கு ஒருவரை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பிக்குவிடம் காணப்பட்ட சிங்கள மொழியிலான குர்ஆன் கீழே விழுந்​தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பிக்கு அமைதியற்ற முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பிக்குவை பொலிஸாரிடம் பிரதேசவாசிகள் ஒப்படைத்தப் பின்னர், பிக்குவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் கண்டியிலுள்ள விகாரையில் இருப்பதாகவும், குர்ஆன் பற்றி ஆய்வு செய்வதற்காக இதனை சிங்கள மொழியில் தான் வைத்திருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிக்குவை பொலிஸார் விடுவித்துள்ளனர்.

4 comments:

  1. யா அள்ளாஹ் சகல பிக்குமார்களும் அல்குர்ஆனை ஆராய்ந்து அதனை ஏற்றுக்கொள்வதற்கான வந்தர்ப்பத்தை வழங்வாயாக. மேலும் அவர்களுக்கு ஹிதாயத்தை வழங்கவாயாக.

    ReplyDelete
  2. குழப்பமான செய்தி... பிக்கு குர்ஆனை வைத்திருந்தால் குற்றமா.. குர்ஆன் முழு உலகுக்குமானது எந்த ஒரு பிரிவினரும் சொந்தம் கொண்டாட முடியாது..

    அவருடைய குர்ஆன் கீழே விழுந்தபோது அவரே எதிர்ப்பு தெரிவித்தாரா..

    என்ன செய்தி

    ReplyDelete
  3. குர்ஆன் என்பது வன்முறையைத் தூண்டும் புத்தகம் என்று மக்கள் புரிந்து இருக்கின்றார்கள். குரான் என்ற நூலில் நல்ல விடயங்களை எழுதி இருப்பது போன்று, அதே நூலில் வன்முறையைத் தூண்டும் விடயங்களும் தாரளமாக உள்ளன என்பதை அந்த நூலை சிலமுறை முழுமையாக படித்தவன் என்கின்ற முறையில் சொல்கின்றேன்.

    ReplyDelete
  4. Nilawan markas: Al Quran, irai thoodharin waalkayil 23 aandugalaaga santharpaththitku eatpa sirithu sirithaga irakkappattadhu. Enave Al Quran i aarayumpothu. Hadeedh udan oppittu aarayavendum. Etchandarpathil edhatkaaga irakkap pattathu endru. Enawe ilaguwaga purinthu kolla Al Quran thafseer udan serthu waasithal puriyum.

    ReplyDelete

Powered by Blogger.