Header Ads



338 பயணிகளுடன் கட்டுநாயக்காவில், அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்


இந்தோனேஸியாவில் இருந்து ஜித்தா நோக்கி பயணித்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருடா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 338 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் குறைந்த அழுத்தம் காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கடமையில் உள்ள விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.