Header Ads



பிசாசுடன் இணைந்தாவது, இதனை செய்ய வேண்டும்...!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து தேர்தல் ஒன்றில் வெற்றி பெற முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் கடுவலை தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 42 வீத வாக்குகளே கிடைத்தன. தொகுதி வாரியாக அதிக வாக்குகள் கிடைத்த போதிலும் மொத்தமாக 42 வீத வாக்குகளே கிடைத்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுக்கு 13 வீத வாக்குகள் கிடைத்தன. 13 வீதம் இல்லை என்றாலும் 10 வீத வாக்குளாவது அந்த கட்சிகளிடம் இருக்கின்றது.

இந்த 10 வீதமும் 42 வீதமும் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். இதனால், மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் தனிப்பட்ட விரோதத்தை கவனத்தில் கொண்டு செயற்பட்டால், நாட்டுக்கே சவக்குழியை வெட்டியதாக மாறிவிடும். பிசாசுடன் இணைந்தாவது இதனை செய்ய வேண்டும் என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.