Header Ads



வசீம் தாஜுதீனை 'நைற் றைடர் ' மாத்திரமே காப்பாற்றியிருக்க முடியும் - மகிந்த


மணிக்கு 175 கிலோ மீற்றர் வேகத்தில் வந்த வாகனத்தில் இருந்து வசீம் தாஜுதீனை ' நைற் றைடரினால் ' மாத்திரமே காப்பாற்றியிருக்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

கேகாலையில் நேற்ற -18- இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்காக அரசாங்கம் விசேட நீதிமன்றங்களையும் கூட அமைத்திருக்கிறது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.