Header Ads



பசில் எங்கே..? பேச்சில் பங்கேற்காதது ஏன்...??

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜக்ஷவுக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும்  ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  அவர் ஏன் கலந்துகொள்ளவில்லையென தன்னால் கூற முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அன்றைய பேச்சுவார்த்தையில் கட்சித் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இருப்பினும், இதற்கு விருப்பமில்லாதவர்களும் இருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தை நல்ல எதிர்பார்ப்புடன் நிறைவு பெற்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.