Header Ads



அம்பலத்துக்குவரும் அமைச்சர்களின் தகவல்கள், வாபஸ் வாங்கமாட்டேன் என ரஞ்சன் திட்டவட்டம்

கொக்கேன் பயன்படுத்திய அமைச்சர்கள் தொடர்பில் தன்னிடம் போதிய சான்றுகள் இருப்பதாகவும், தான் கூறிய எந்தவொரு கருத்தையும் ஒருபோதும் வாபஸ் பெறப் போவதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

தான் இந்த அமைச்சரவையை மட்டும் சுட்டிக்காட்ட வில்லையெனவும், இதற்கு முன்னர் இருந்த அமைச்சரவைகளிலும் இருந்த முன்னாள் அமைச்சர்களையும் இணைத்தே கூறியதாகவும் அவர் கூறினார்.

என்னுடைய கட்சிக்காரர்கள் என்று வரையறுத்து நான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க வில்லை. கொக்கேனுடனும், பாதாள உலகக் குழுக்களுடனும் தொடர்புள்ள பொதுவான அரசியல்வாதிகளைப் பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தன்னிடம் இதுவரையில் எவரும் எழுத்து மூலமோ, நேரடியாகவோ இது தொடர்பில் தகவல் கோரவில்லை. என்னை கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அழைக்கப் போவதாகவும், வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் இடமளிக்காதிருக்கப் போவதாகவும் வெளியிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

யார் கேட்டாலும் என்னிடம் ஒப்புவிக்க முடியுமான சாட்கள் உள்ளன. அரசியலில் தனது நண்பகர்கள் பயன்படுத்துவதை பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.

நான் இதுவரையில் வெளிப்படுத்திய தகவல்களும் பொய்யாகவில்லை. இதனையும் நிரூபிப்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்கிரில்லாவிலா?, ஹில்டனிலா? எந்தக் கிளப்பின் மலசலகூடத்தில் வைத்து பயன்படுத்துகிறார்கள்? என்பதை நிரூபிக்க தன்னிடம் சான்றுகள் உள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

No comments

Powered by Blogger.