Header Ads



நாமல் குமார, கைது செய்யப்படுவாரா..?

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை குறித்து உறுதியான தகவல்களை இல்லை என தெரியவருகிறது.

நாமல் குமார என்பவரின் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளில் கொலை சூழ்ச்சி தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என குற்ற விசாரணை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரி பிரசன்ன அல்விஸை கொலை செய்வது தொடர்பில் நாமல் குமார மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மேற்கொண்ட கலந்துரையாடல் மாத்திரமே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பிரதி பொலிஸ் மா நாலக சிலவாவின் கல்வி தகுதி தொடர்பில் முறைப்பாடு செய்த அதிகாரிகள் மூன்று பேரில் குறித்த பொலிஸ் அதிகாரி அல்விஸ் டி சில்வாவும் உள்ளார்.

அவர் பயங்கரவாத விசாரணை பிரிவில் பணியை ஆரம்பிப்பதற்கு முன்னர் குறித்த பொலிஸ் அதிகாரி அந்த பிரிவில் சேவை செய்துள்ளார்.

நாமல் குமார பொலிஸ் மற்றும் மக்களை பிழையாக திசை திருப்பியுள்ளதாகவும், அந்த குற்றச்சாட்டு அடிப்படையில் அவரை கைது செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எப்படியிருப்பினும் நாமல் குமாரவை கைது செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.