Header Ads



பிரான்ஸில் போன்று இலங்கையிலும், புரட்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு

தற்போதைய அரசாங்கம் ஊடக ஒடுக்குமுறைக்கு தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை - கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரிய வரிச்சுமை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பிரான்ஸில் இடம்பெற்றதை போன்று இலங்கையிலும் புரட்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருந்தன.

நாட்டின் பெரும்பகுதி சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இத்தகைய நிலையிலேயே பிரதமர் பொறுப்பை ஏற்று மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக, தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, தாங்கள் பின்புற கதவின் ஊடாக ஆட்சிக்கு வந்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்ததாக தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.