கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, அதிபராக ULM அமீன் நியமனம்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக யூ.எல்.எம் அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் எதிர்வரும் 2019 ஜனவரி 02ம் திகதி செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றும் இவர் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தை சேந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மஹ்மூத் மகளீர் கல்லூரியின் அதிபர் வெற்றிடத்திற்காக நடத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர் பலாங்கொடை தமிழ மகா வித்தியாலயம் சாய்ந்தமருது மழஹருஷ்ஸம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் ஆசிரியராகக்கடமையாற்றியுள்ளார்.அத்துடன் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் பிரதி அதிபராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியியல் முதுமாணி டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார் . இவர் இலங்கையின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான சோலைக்கிளி அதீகின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Congratulations Ameen
ReplyDeleteMansoor - 1988 Samanalawewa Project