Header Ads



ஊனமுற்ற மகளுடன், மரத்தில் வாழும் தந்தை - கண்ணீர்விட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி


மனைவி உயிரிழந்ததன் பின்னர் தனது ஐந்து வயது ஊனமுற்ற மகளுடன் மரத்தின் மேல் வாழ்க்கை நடாத்தும் தந்தை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தான புளியங்கடவல என்ற பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர் தொடர்பாகவே தகவல் வெளியாகி உள்ளது.

ஹொரவப்பொத்தான பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஷான் சன்ஜீவ உட்பட பொலிஸ் உத்தயோகத்தர் குழுவினர் கடந்த 30ம் திகதி பிற்பகல் புளியங்கடவல கிராமத்திற்குச் சென்று தேடிப் பார்த்தபோது குறித்த தந்தை மற்றும் மகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

ஹொரவப்பொத்தான புளியங்கடவல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான டப்ளியு. விஜேசிங்க என்ற நபரின் மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக, தலை நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து வயதாக நெத்மி காவிந்தியா என்ற சிறுமி அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு மகள். அச்சிறுமி பிறப்பிலிருந்து ஊனமுற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மனைவியின் திடீர் இழப்பால் விஜேசிங்க உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்துள்ளார்.

குறித்த இருவரும் அன்று முதல் இன்று வரை ஒரு கடினமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊனமுற்ற தனது மகளை தனிமையில் விட்டுச்செல்ல முடியாத காரணத்தினால் அவர் மகளை தூக்கிக் கொண்டே கூலி வேலைகளைச் செய்து மகளைப் பராமரித்து வருகிறார்.

கூலிக்கு கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் விஜேசிங்க தோட்டங்கள் மற்றும் வயல்களை இரவில் பாதுகாப்பதையே அதிகமாக செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறுசெய்யும் வேலைக்கு இரவொன்றிற்கு ரூபாய் 500 கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மரத்தில் மேல் கட்டப்பட்ட பரணில் தனது மகளுடனே தோட்டம் மற்றும் வயல்களை பாதுகாப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மலசல கூடத்திற்குச் செல்லும்போதும் தனது மகளை தூக்கிச்செல்ல வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தான பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஷான் சன்ஜீவ உட்பட பொலிஸ் உத்தயோகத்தர் குழுவினர் குறித்த நபரைத் தேடிச் சென்றபோது வயல் உரிமையாளரின் மரமொன்றின்மேல் கட்டப்பட்ட பரணில் தனது மகளுடன் இருந்த தந்தையை கண்டுபிடித்தனர்.

அவர்கள் இருவரின் நிலையைப் பார்த்த பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட அங்கு நின்ற உத்தயோகத்தர்களின் கண்களில் கண்ணீர் ததும்பியது.


பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைய மரத்திலிருந்து மகளுடன் கீழே இறங்கி வந்தார் விஜேசிங்க.

சிறுமி தன்கைகளில் தூக்கிய பொறுப்பதிகாரி “மகள் மீண்டும் ஒரு நாளும் இதைப்போல் உனக்கு வராது” என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், சேர் நான் உதவியற்றவன். சாப்பிட வழி இல்லை. அதனால் தான் நான் இதை செய்கிறேன். நான் என் குழந்தையை மிகவும்நேசிக்கறேன்.. குழந்தையின் வேலைகளைச் செய்ய பணம் இல்லை.

குழந்தயை விட்டு எங்கும் செல்ல முடியாது. அதனால் தான் பரண் கட்டி ஏறுகிறேன். முடியுமானால் எனக்கு உதவி செய்யுங்கள் என குறித்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற விசயங்ளை மீண்டும் செய்யக்கூடாது என தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அவருக்கு உதவிளை செய்ய நடவடிக்க எடுப்பதாக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.