Header Ads



தாடி வளர்க்கப்போவதாக, ஞானசாரர் சபதம் - புதிய புகைப்படமும் வெளியாகியது



தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை நிறைவடையும் வரை தாடி வளர்க்க ஞானசாரர் சபதமெடுத்துள்ளார்.

சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக் காரணமாக பல தடவைகள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக செல்லும் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் சிகிச்சைகளுக்காக, சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து  ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

இதன்போது, அவர் தாடியுடன் காணப்பட்ட நிலையில், இது குறித்து சிலர் அவரிடம் வினவியப் போதே, தனது தண்டனை காலம் நிறைவடையும் வரை தான் தாடி வளர்க்க முடிவெடுத்துள்ளதாக ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. Barring Presidential pardon, if he is allowed to complete his full sentence he will have a beard long enough to look like Bin Laden.

    ReplyDelete

Powered by Blogger.