Header Ads



வங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்


கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம் வாங்கப்படாமல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் வட்டியை வாங்காததற்கு காரணம் இஸ்லாம் வட்டியை தடை செய்துள்ளது என்ற ஒற்றை காரணம் மட்டுமே. மேலும் அந்த அறிக்கையின் படி கேரளாவில் தான் அதிக அளவாக 45,000 கோடிகள் அளவுக்கு முஸ்லிம்களின் வட்டிப்பணம் வாங்கப்படாமல் உள்ளது.

இது 2005 ஆம் ஆண்டு வரை உள்ள கணக்கு தான். இன்று 2014 ஆம் ஆண்டு எப்படியும் வாங்கப்படாமல் உள்ள வட்டிப் பணம் அதிகரித்திருக்கும் என்பதே உண்மை.

முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள்.

மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை ஙிலிகிசிரி லிமிஷிஜிணிஞி கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது. முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் நீண்ட நெடும் காலமாக முஸ்லிம்கள் வட்டி இல்லாத வங்கி முறையை நடை முறைப்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும் கூட இன்றுவரை ஒரு செயல்பாட்டுக்கும் வருவதாக இல்லை.

மேலும் முஸ்லிம்களின் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் பின் தங்கியுள்ள சூழலிலும் கூட அதற்கான முன்னேற்றத்திற்கும் எந்த ஒரு செயல்பாட்டுக்கும் மத்திய அரசு தயாராக இல்லை. ஒருவேளை வட்டி இல்லாத வங்கி என்ற ஒன்று செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நிட்சயம் முஸ்லிம்களின் வங்கி முதலீட்டுக்கும் உகந்ததாக இருக்கும்..மற்றபடி வட்டியோடு தொடர்புடைய்ய வங்கிகள் செயால்பாட்டில் இருக்கும் வரை முஸ்லிம்கள் நிச்சயம் அதில் முதலீடு செய்யப்போவதில்லை என்பது மட்டும் உண்மை..

நாட்டில் உள்ள 25 கோடி வாழும் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வை போக்காத வரை முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பொய் பிரட்சாரட்தின் மூலம் தனிமைப்படுத்தப்படுவது நிற்காத வரை வல்லரசு கனவு என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்பதே உண்மை..

வழக்கம் போலவே முஸ்லிம் தீவிரவாதம் என்ற பொய்யை பரப்பிவரும் எந்த ஒரு ஊடகமும் இந்த் செய்திகளுகெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை . இஸ்லாம் வட்டியை தடை செய்துள்ள ஒரே ஒரு காரணத்தினால் தான் முஸ்லிம்கள் வட்டியின் பக்கம் செல்வதில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துவதும் இல்லை....மாறாக வழக்கம் போலவே தொடர்சியான பொய்களின் மூலம் முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து பிரிக்கும் கேவலமான வேலையே தான் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. (தகவல் உதவி - samooganeethimurasu)

(தகவல் உதவி-- முஸ்லிம் முரசு, பிப்ரவரி 2016)

7 comments:

  1. Many Islamic scholars say that this money could be used for some public works ...such as building roads; bridge and toilets and so on ..
    While Saudi takes billions for its interest for its despots in western countries ..
    Most of saudi money is deposited in many western banks..
    There is no talk of interest about Saudi money which is trillions in western get a lot interest ?
    Salafi scholars do not talk about it ..yet; wahabi and Salafi groups talk about Indian Muslims..

    ReplyDelete
  2. Yes you are correct your are the right hand of ale-saud and we should take your word as proof !

    Theres another name for people like you which is "a barefaced liar"

    ReplyDelete
  3. நான் வங்கியில் கடமையாற்றுகின்ற காலத்தில் சில சகோதரர்கள் இவ்வாறு தமக்குரிய வைப்புக்கான வட்டியை பணமாக்காமல் விட்டு வைத்திருந்தார்கள்,அவர்களை அழைத்து நன்மையை எதிர்பார்க்காமல்,வேறு சகோதரர்களுக்கு,அல்லது பாடசாலை போன்ற பொது இடங்களுக்கு அப்பணத்தை கொடுத்து அதுவும் உணவு,உடை போன்றவற்றுக்கு அல்லாமல் மலசலகூட அமைப்புக்களுக்காக,கழிவு நீர் வெளியேற்றலுக்காக பயன்படுத்த வழங்குமாறு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன்.
    அவ்வாறு அப்பணம் வாடிக்கையாளர்களால் வட்டித்தொகை என விடப்பட்டு வைப்பு மட்டும் மீளெடுக்கப்பட்டு,அத்தகைய கணக்குகளும் தொடர்ச்சியாக பராமரிக்கப்படாத போது ,குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு அவை மீளக்கோரப்படாத கணக்கு மீதிகளாக(unclaimed account balances)கருதப்பட்டு சகல கிளைகளதும் கணக்கு மீதிகள் தலைமையக கணக்கிற்கு மாற்றப்படும். வேறு கலாசார அபிவிருத்திக்கும் அப்பணம் நன்கொடையாக மாற வாய்ப்பேற்படும்

    Ajmal Mohideen

    ReplyDelete
  4. It is not sin taking interest from the bank which was approved by the government. You are not deceiving anybody or stealing others money. My opinion is you can take your interest money.

    ReplyDelete
  5. Cruso..
    It is a greater sin of humanity to drink blood money of other people ..
    In other cultures; so many people make suicide due to unpaid interest ..
    Islam is very much clear about it .
    It is haram.
    It's a sin.
    It's immoral ..
    It's fighting with God.
    It's is a cheat ..

    ReplyDelete
  6. Atteeq Abu,
    This is not blood money. Can you proof it? If so, my opinion is Muslims can not work in the Government or any other banks other than Islamic Banks. These banks are doing business and we also part takers of it. If it is haram, then we also doing haram business with the bank. Conclusion will be Muslims can have account only in Islamic banks and only can work in Islamic banks.

    ReplyDelete
  7. You are right.Cruso real beleivers in islam never work in interest based banks. It is same sin as taking interest. Before you say this matter prophet Mohamed Sallallahualahiwasalam talk clearly that "who ever taking interest,helping to this and keep records of this all these 3 groups are same in sin which is doing as interest.

    ReplyDelete

Powered by Blogger.