Header Ads



முஸ்லிம்களிடம் பிளவு - ஜம்மியத்துல் உலமா நோக்கி, தலதா அடித்துள்ள பந்து

முஸ்லிம் தனியார் திருத்தச் சட்ட அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க முடி­யாமல் இருப்­ப­தற்கு திருத்தம் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட குழு­வினுள் ஏற்­பட்­டி­ருக்கும் பிளவே கார­ண­மாகும். இக் குழு இரண்­டாக பிள­வு­பட்­டுள்­ளது. அவர்­களை இணக்­கப்­பாட்­டுக்கு கொண்­டு­வர பல முயற்­சி­களை எடுத்தும் பய­ன­ளிக்­க­வில்லை.  இவர்­களின் பிளவால் நானே இக்­கட்­டான நிலைக்கு ஆளா­கி­யுள்ளேன் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

முஸ்லிம் தனியார் திருத்­தச்­சட்ட அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­காது தொடர்ந்து இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வது தொடர்­பாக 'விடிவெள்ளி' வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் பதி­ல­ளிக்­கையில், 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் முஸ்­லிம்­களின் விவாக மற்றும் விவா­க­ரத்து சம்­பந்­த­மாக திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளன. இதற்­காக 18 பேர் கொண்ட குழு­வொன்று அமைக்­கப்­பட்­டி­ருந்து. குறித்த குழு­வா­னது இற்­றைக்கு  9 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மிலிந்த மொர­கொட நீதி அமைச்­ச­ராக இருக்­கும்­போதே நிய­மிக்­கப்­பட்­டது. இதன் தலை­வ­ராக நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் செயற்­பட்டார்.

நான் நீதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் பின்னர் பெண்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை மகளிர் விவ­கார அமைச்­ச­ருடன் இணைந்து செயற்­ப­டும்­போது பெண்கள் குழு­வொன்று முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்­பாக கேள்­வி­யெ­ழுப்­பினர். அதனைத் தொடர்ந்து குறித்த குழுவின் தலை­வ­ருடன் கதைத்து, தொடர்ந்தும் காலம் கடத்­தாமல் குழுவின் அறிக்­கையை தரு­மாறு கேட்­டுக்­கொண்டேன். அதன் பிர­காரம் கடந்த ஜன­வரி 22 ஆம் திகதி குழுவின் அறிக்­கையை என்­னிடம் சமர்ப்­பித்­தனர்.

அத்­துடன் அறிக்­கையை சமர்ப்­பித்த பின்னர் தலைவர் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப், இந்த அறிக்­கையின் இறுதித் தீர்­மா­னத்தில் குழுவில் இருக்கும் 18 பேரும் ஒரு நிலைப்­பாட்டில் இல்லை என தெரி­வித்தார். அதா­வது குழுவில் தலைவர் மர்­சூ­புடன் 9 பேர் ஒரு நிலைப்­பாட்­டிலும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் உல­மாக்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் ஆகியோர் அடங்­கிய மற்றும் 9 பேர் வேறு நிலைப்­பாட்­டிலும் இருக்­கின்­றனர். ஆனால் குழுவின் தலைவர் சலீம் மர்சூப் குறித்த குழுவின் செய­லா­ள­ராக செயற்­பட்ட, எமது நீதி அமைச்சின் செய­லா­ள­ரையும் உள்­ள­டக்­கியே  9 பேர் என்ற குழுவை அறிக்­கையில் காட்­டி­யுள்ளார்.

இது தொடர்­பா­கவும் பாரிய எதிர்ப்பை மற்ற அணி­யினர் தெரி­வித்து வந்­தனர். அதனால் அந்த அணி­யி­ன­ரையும் நான் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினேன். இதன்­போது அவர்கள் அறிக்­கையின் இரண்டு அல்­லது மூன்று விட­யங்கள் தொடர்­பாக  இணக்கம் இல்லை.

அதில் ஒன்­றுதான் திரு­ம­ணத்தின் போதான வய­தெல்லை தொடர்­பா­ன­தாகும். அறிக்­கையில் முஸ்லிம் ஆண்­களின் வய­தெல்லை 18 எனவும் பெண்­களின் வய­தெல்லை 16 என்றும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் இந்த விட­யத்­துக்கு 16 வய­துக்கு ஒரு பிரி­வினர் இணக்கம் தெரி­விக்­கின்­ற­போதும் வயது தொடர்­பாக ஷரீஆ சட்­டமும் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். ஷரீஆ சட்­டத்­துக்கு எதி­ராக சட்டம் நிலை­நாட்ட முடி­யாது என்று தெரி­விக்­கின்­றனர்.

அடுத்த விட­யம்தான் பெண் காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­டலாம் என அறிக்­கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு பாயிஸ் முஸ்­தபா தரப்பில் இருக்கும் 9 உறுப்­பி­னர்கள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றனர். இது­போன்ற ஒரு­சில விட­யங்­க­ளா­லேயே குறித்த குழு­வுக்கு முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சட்­ட­மூலம் தொடர்­பாக ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டி­யாமல் இருக்­கின்­றது.

அத்­துடன் இந்த விட­யத்தில் நான் தொடர்­பு­ப­டாமல் இரண்டு பிரி­வி­ன­ரையும் ஒரே நேரத்தில் அழைத்து இதற்கு தீர்­மானம் ஒன்றை எடுக்க முயற்­சித்தேன். என்­றாலும் அதுவும் சாத்­தி­ய­மா­க­வில்லை. இவர்­களை ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு கொண்­டு­வர என்னால் எடுக்­க­வேண்­டிய அனைத்து முயற்­சி­க­ளையும் நான் எடுத்­துள்ளேன்.

அதனால் முஸ்லிம் தனியார் திருத்த சட்ட சிபா­ரிசு அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்து அங்­கீ­க­ரித்துக் கொள்­ளாமல் நாங்­கள்தான் தொடர்ந்து காலம் கடத்­தி­வ­ரு­வ­தாக சிலர் எங்­கள்­மீது குற்­றம்­சு­மத்தி வரு­கின்­றனர். இது தொடர்­பாக அமைக்­கப்­பட்ட குழு இரண்­டாக பிளவு பட்­டுள்­ளதால் நாங்­களே இக்­கட்­டான நிலை­மைக்கு ஆளா­கி­யுள்ளோம்.

அதனால் இந்த அறிக்­கையை பொது­வான அறிக்­கை­யாக இன்னும் சில தினங்­களில் இணை­யத்­த­ளத்தில் பிர­சு­ரிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இதன் பிர­தியை வழங்க தீர்­மா­னித்­துள்ளேன். அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் இதனை வழங்கி, இது­தொ­டர்­பாக அவர்­க­ளது ஆலோ­ச­னை­களை வழங்க குறித்த குழுவின் 18 பேரையும் அழைத்து அவர்­க­ளுடன் சந்­திப்­பொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்க தீர்­மா­னித்­துள்ளேன்.  அத்­துடன் நான் முஸ்லிம் அல்­லாதவர் என்ற கார­ணத்­தினால் அமைச்சர் என்ற ரீதியில் இது தொடர்­பாக எனக்கு தீர்­மானம் எடுக்க முடி­யாமல் இருக்­கின்­றது. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் தரப்­பி­லேயே இருக்­கின்­றது.

அத்­துடன் காதி நீதிவான் நிய­மனம் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்­க­மை­யவே வழங்­கப்­ப­டு­கின்­றது. அவ்வாறு இல்லாமல் அதனையும் திறமையின் அடிப்படையில் வழங்கும் முறையொன்றை ஏற்படுத்தவுள்ளேன். ஏனெனில் அதில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. எனவே முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன். என்றாலும் பிளவுபட்டிருக்கும் குழு உறுப்பினர்கள் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரும் வரைக்கும் என்னால் எதுவும் செய்யமுடியாது என்றார்.

9 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    முஸ்லிம் உம்மத்துக்களே தௌஹீத் ஜமாத்தையும் சேர்த்து ஆலோசனை பெறும் தருணம் இது.சிந்தியுங்கள்

    ReplyDelete
  2. Shariya rules from islam.
    We should act n follow that.
    Acju stayong on that point.insha allah everything will be fine

    ReplyDelete
  3. இதிலும் இயக்கம் வேண்டுமா சகோ.hameed

    ReplyDelete
  4. மார்க்க அறிஞர்கள் மத்தியில் ஒரு விடயத்தில் வித்தியாசமான கருத்துக்கள், அவைகள் கொண்ட பல்வேறு வித்தியாசமான இயக்கங்கள் இருப்பது இயல்பானதாகும்.

    தகுதியான ஒவ்வோர் மார்க்க அறிஞரும் தனிப்பட்ட முறையிலோ இயக்கங்களின் பிரதிநிதிகளாகவோ, ஆலோசனை அடிப்படையில் முடிவுகள் எடுத்து இயங்கும் அகில இலங்கை  உலமா சபையில் அங்கத்துவம் பெற்று உலமா சபையின் இருப்பைப் பலப்படுத்த வேண்டும்.  அதுவே  சமுதாயத்தின் பலமாகும்.

    பிற சமுதாயங்கள் மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயங்களை, மார்க்க அறிஞர்கள் தமக்குள் ஒன்றாய் இருந்து ஆலோசித்து ஒற்றுமையாக ஒரே முடிவாக வெளியிடுவதே நமக்கான பலமும் பாதுகாப்பும் ஆகும்.

    ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

    "நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்."
    (அல்குர்ஆன் : 4:59)
    www.tamililquran.com

    பிரிவினைகள் இன்னுமின்னும் பற்பல பிரிவினைகளுக்கு வித்திடும்.  இறுதியில் அனைவரையும் பலவீனர்களாக்கும்.

    ஒற்றுமை அனைவரதும் இலக்கான ஈருலக வெற்றிகளையும் எளிதாக்க இயலுமாக்கும் வலிமை கொண்டது.
    அதுவே, நம் அனைவரினதும் தேவை.

    ReplyDelete
  5. Take advice from tawhid jamath also, they will explain miss. Thalatha athhukorala with diplomatic and beautiful way

    ReplyDelete
  6. This is a Religious matter, must be consulted with SLTJ only and not strongly with ACJUS as they don't know about Islam.
    As it is related with religion, everything must be formed based on Quran and Strong Hadhees. In clarifying and dividing Hadhees from Strong to weak, ACJUS is not educated at all. They believe everything as Hadhees .

    ReplyDelete
  7. Islamic Law related matters mustn't be discussed and handed over to alcoholic Parliament people, even if they are Muslim Maps.

    ReplyDelete
  8. if cannot get advice from Thawheeth jamath , ask advice from Siya...... Why ACJU not Like Tawheeth ??
    We hope ACJU will be strong Organization this the time to Prof.
    Should be discuss with all jamath. jamathey Islmi, Tablik Jamath & Tawheeth Jamath. Don't be selfish. remand Allah is one The last Messenger Is prf Mohammed. we should Fallow His path. not for Politician side.

    ReplyDelete
  9. if cannot get advice from Thawheeth jamath , ask advice from Siya...... Why ACJU not Like Tawheeth ??
    We hope ACJU will be strong Organization this the time to Prof.
    Should be discuss with all jamath. jamathey Islmi, Tablik Jamath & Tawheeth Jamath. Don't be selfish. remand Allah is one The last Messenger Is prf Mohammed. we should Fallow His path. not for Politician side.

    ReplyDelete

Powered by Blogger.