Header Ads



பதற்ற நிலையை கட்டுப்படுத்த 24 மணி நேர விசேட சேவை - தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும்  முன்னெடுத்துள்ள போதும்   இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளை சில தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் ஆகையினாலேயே இந்த 24 மணி நேர விசேட சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதும் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுத்து மக்களை பாதுகாப்பதுமே தமது நோக்கம் எனவும் தெரிவிக்கும் அரசங்க தகவல் திணைக்களம், அது தொடர்பான தகவல்களை 0711261261 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது helpdesk@dgi.gov.lk , மின்னஞ்சல் மூலமாகவோ  தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.      

No comments

Powered by Blogger.