Header Ads



"நமது முஸ்லிம் சமூகத்தின், முக்கிய பிரச்சினை

(எம்.ஏ.றமீஸ்)

இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தத்தமது இனத்தை மையப்படுத்திய கோசத்தினைக் கைவிட்டு விட்டு நாம் இந்த நாட்டின் தேசிய பிரஜை என்ற கோதாவில் குரல் எழுப்புகின்றபோது எமது நாட்டிலுள்ள ஒவ்வொரு இனத்தவருக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து விடயங்களும் மிக எளிதாய்க் கிடைத்து விடும் என அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அமீர் அலி தெரிவித்தார்.

அறிஞர் சித்திலெவ்வை ஆராய்ச்சி யைத்தினால் ஏற்பாடு செய்யபட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்மான விஷேட கலந்துரையாடல் அக்கரைப்பற்று ரீ.எப்.சி.ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஆய்வு மையத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.என்.மர்சூம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடந்தும் அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டில் எமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிந்து நின்று பேசுவதில் நாம் பூரண பயன்பாட்டினை பெற்றுவிட முடியாது. நாம் அனைவரும் இந்நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் செயற்பட்டு குரல் கொடுக்கின்றபோது எமக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் உரிய முறையில் வந்து சேரும்.

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நம் நாட்டிலுள்ள மூவின சமூகத்தவர்களும் நமது இனம் இனம் என்றுதான் பேசியிருக்கின்றோமே தவிர நாட்டின் உறுதியான பிரஜை என்று பேசவில்லை. தற்போது அதுபற்றிப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மூவினத்தவர்களும் இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் ஒன்றுபடலாம். அவ்வாறு ஒன்றுபட்டு எமது கோரிக்கைகள் முன்வைக்கப்டுகின்றபோது நமக்கான அனைத்து விடயங்களையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். ஆளுக்கொரு கட்சி வைத்துக்கொண்டு பேசுவதெல்லாம் எதிர்காலத்திற்குப் பொருந்தாது. அனைவரும் நாட்டின் பிரஜை என்று ஒருமித்துக் குரல் கொடுப்போமேயானால் எம்மத்தியில் ஒற்றுமை மிளிர்வதுடன் நமக்கு வேண்டியவையினையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நாம் முஸ்லிம்கள் என்று பிரித்துப் பிரித்து பேசுவதால் எமக்கான தேசியமே கேள்விக்குறியாகி காணப்படுகின்றது. முஸ்லிம்கள் குறிப்பாக மற்ற சமூகத்தனை இணைக்கின்ற பாலமாக செயற்பட வேண்டியவர்கள். இந்த நாட்டிலுள்ள மூவின சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்றபோது பல்வேறான விடயங்களை நமது முஸ்லிம்கள் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். முஸ்லிம்களுக்கென்று தனிக் கட்சி என்ற தேவை இல்லை. 

கடந்த 1947ஆம் ஆண்டு முதல் இன்று வரை நமது முஸ்லிம்கள் அனைத்து விடயங்ளையும் பிரித்துப் பிரித்துத்தான் பேசி வருகின்றார்கள். தேசியம் என்ற பிரச்சினையை விட்டு தேசிய விடயங்களுக்காக இந்த நாட்டிலுள்ள எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவது தேசிய விடயத்திற்காக உருக்கமான ஓர் உரையை ஆற்றியிருக்கின்றார்களா என்றால் விடை பூச்சியமாகவே அமையும். நமது முஸ்லிம்கள் அவ்வாறு தேசிய விடயங்களுக்காக இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் பேசியிருந்தால் நமது பக்கம் அனைத்துச் சமூகத்தினரும் தலை சாய்த்திருப்பார்கள்.

நமது முஸ்லிம்கள் தேசத்தை இணைத்துப் பேசவில்லை. அனைத்தையும் நாம் பிரித்துப் பிரித்துத்தான் பேசி வருகின்றோம். முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை, தமிழர்களால் எமக்கு ஆபத்து என்றெல்லாம் பேசுவதால்தான் எமக்கு ஆபத்து நேர்ந்தது. பிரித்துப் பிரித்துப் பேசுவதால் எமக்கான தேசியம் இழக்கப்படுகின்றது. நூம் இந்த நாட்டின் முக்கிய பிரஜை. திடமான வரலாற்றினைக் கொண்டவர்களாக நாம் இருக்கின்றோம். நமது முஸ்லிம்கள் இளம் சமுதாயத்தினரை வைதீக அடிப்படையில் வளர்த்தக்கொண்டு வருகின்றோம். முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கியதாலேயே முன்னேற்றமடைந்தார்கள். தற்போது நாம் சிந்திக்கமால் இருப்பதால்தான் சில விடயங்களைபக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளோம். நமது இளைஞர்கள் சுயமாக சிந்தித்து செயற்படும் வகையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எதைச் செய்ய வேண்டுமாக இருந்தாலும் எமக்கான தகவல் தேவையாக உள்ளது. எம்மிடம் எந்தத் தகவல்களும் புள்ளிவிபர அடிப்படையில் ஆவணமாக இல்லை. இதனை தொகுக்கும் பணியில் யாருமே செயற்படவில்லை. முஸ்லிம்கள் பற்றிய புராணங்களும், இதிகாசங்களும், கதைகளும் பல உள்ளன. அவை ஒன்றும் சட்டத்தின் முன் ஆதாரமாக முடியாது. நமது வரலாறுகள் உடனடியாக ஆவணமாக்கப்பட வேண்டும். அது பக்கச் சார்பற்ற விதத்தில் தொகுக்கப்படவேண்டும்;. அப்போதுதான் உறுதியாக நம்மைப்பற்றி பேசமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நமது முஸ்லிம் சமூகத்தினர் 30 சதவீதத்தினராக வாழ்கின்றனர். இந்த 30 சதவீத முஸ்லிம்கள் மூன்று சதவீத நிலத்தினைக் கொண்டவர்களாகவே உள்ளோம். இவ்விடயத்தினைப் பற்றி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராவது பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார்களா? இவ்வாறான விடயத்தினை தமிழர்கள் நன்குணர்ந்திருக்கின்றார்கள். கடந்த 1956ஆம் ஆண்டு முதல் அமரர் செல்வநாயகம் கேட்டு வந்திருக்கின்றார். நமது முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக நிலம் உள்ளது. நிலம் இல்லை என்றால் எமது இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் 30 சதவீதமானவர்கள் மூன்று சதவீத நிலத்தில் வாழ்ந்தாலும் அதனை விஸ்தரிக்காவிட்டாலும் அதனை தொடர்ச்சியாக காப்பாற்றக்கூடிய மாற்று வழிபற்றி நாம் ஏதாவது நடவடிக்கைள் மேற்கொண்டிருக்கின்றோமா? அரசியல் சீர்திருத்த சட்டங்கள் வருகின்றபோது எமக்கான முக்கிய பிரச்சினைகளை எப்படி முன்வைக்கலாம் என்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளது என்றார்.

4 comments:

  1. First of all please deal with problems of overcrowding in some villages in East... Hizbulalh does not have long term projects to sort this out...
    Unless and until this problem over overpopulated and over crowding is solved the Future of Muslim will look bleak in East.. Some idiots want more Arabic colleges and but this issue of land problems is more important for future servival than opening Arabic colleges...

    ReplyDelete
  2. Dr.Ameer Ali seems to b out of touch with ground realities.
    Easier said than done.Recent developments speaks volumes for Muslim's tolerance n extreme patience in the face of Tamil n Sinhale extremists .

    ReplyDelete
  3. T.P Jaya.Bathiudeen Mahmooth.sir Razeek Fareed.M.HM. Ashraff(3hours speach in parliment) naaddin nalanukkaha Kural kodukkavillaya? yennae pechchu ithu.

    ReplyDelete
  4. Its simplistic to deliver sermons for peaceful coexistence by the people visiting on sabbatical leave from safe heaven West .

    ReplyDelete

Powered by Blogger.