Header Ads



பொதுபல சேனா, சிங்கள ராவய, ரவாணா பலய அமைப்புக்களை தடை செய்யுங்கள்


பொதுபல சேனா அமைப்பைத் தடை செய்யுமாறு ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இனவாத மதவாத நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் கடும்போக்குவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுக்க உள்ளார்.

பொதுபல சேனா, சிங்கள ராவய மற்றும் ரவாணா பலய போன்ற அமைப்புக்களை தடை செய்யுமாறு கோரி அமைச்சர் நாணயக்கார விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அமைப்பை தடை செய்யக் கூடிய வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

பகிரங்கமாக இன மத குரோதக் கருத்துக்களை வெளியிட்டு குழப்பங்களில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் குரோதப் பிரச்சாரங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற முடியும் ஏதேனும் அச்சறுத்தல்கள் ஏற்பட்டால் அது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. உண்மையான தலைவன் .

    ReplyDelete
  2. the best leader for this country, we always salute for for your opinion sir

    ReplyDelete
  3. The best and suitable leader for all communities.

    ReplyDelete

Powered by Blogger.