Header Ads



இலங்கை முஸ்லிம் உம்மாவின் அவசர கவனத்திற்கு..! (தயவுசெய்து வாசியுங்கள்)




அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்

ஒன்றுபட்டு எதிர் கொள்வோமா…?
பிரிந்திருந்து தொலைந்து போவோமா…..?? 

கன்னியமிக்க உலமாக்களே ! பேரண்புமிக்க முஸ்லிம் சமூகத் தலைவர்களே !!  பொறுப்புதாரிகளே !!!

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவர்களுடன் கன்னியமிக்கதோர் உறவு முறையில் இன்று வரை வாழ்ந்து வரும் நாம், இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும்  இறைமைக்காகவும்   மட்டிட முடியா சேவைகளையும் உழைப்பையும்  வழங்கி இந்நாட்டிள் தனித்துவத்தை பாதுகாக்க பல உயிர் தியாகங்களை மற்றும் சொத்து இழப்புகளை சந்தித்து, பல இக்கட்டான நிலைகளிலும் சகிப்புத் தன்மையை கை கொண்டு இன்றளவு இந்நாட்டிள் பகுதி பங்குகளை பிரித்து கேட்காமல் ஒற்றுமையுடன் ஒத்துழைத்து வாழ்ந்து வருககின்றோம்.

ஆனால் அண்மை கால இந்நாட்டின் நிகழ்வுகளை கூர்ந்து அவதானிககும் போது இந்நாட்டு முஸ்லிம்களை இந்நாட்டுக்குள்ளேயே அந்நியப்படுத்தும் ஓர் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்ததொரு நிகழ்ச்சி நிரல் தான் எமது அன்டை நாடான இந்தியாவிலும் கடந்த காலங்களில் நடை முறைப்படுத்தப்பட்டது.
800 வருடங்களுக்கு மேல் இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம்களை இந்நதியாவிற்குள்ளேயே அந்நியப்படுத்தப்படார்கள். இந்நிகழ்ச்சி நிரலின் கருப்பொருளாக "கலாசார தேசியத்திற்கு" பதிலாக "இந்திய தேசியம்" என்றதோரணையில் "இந்து தேசியம்" என்ற சிந்தனையை முன்வைத்தார்கள். "இந்து தேசியத்திற்கு" எதிரானவர்கள் முஸ்லிம்கள் என்றுகூறி முஸ்லிம்களை இஸ்லாமிய பயங்கரவாதிகளாகவும், கர்வதேச பயங்கரவாதிகளாகவும் சித்தரித்ததுடன் இந்த பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் தான் காரணம் என்றும் கூறி இதற்கெதிரான "நிரந்தரம் போர்", "முடிவில்லா போர்" என்ற இயக்க ரீதியாக பிரகடனம் செய்தார்கள். இதன் அடிப்படையில் உதித்தது தான் இந்துத்துவ இயக்கங்களான விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்டிய சுயம் சேவக் சங்கம், சிவ சேனா,  சங்பரிவார் போன்ற இயக்கங்கள். இந்திய முஸ்லிம்களை "முசல்மான்கள்" என்று அடையாளபடுத்துவார்கள். முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடாத்துவார்கள் (உதா:- பாபர் மசூதி தகர்ப்பு, மகாராஷ்டிராவில், குஜராத்தில் தகர்த்து எரிக்கப்பட்ட பல மஸ்ஜிதுகள்).

அதேபோல் இவர்களே சில அநியாயங்களை செய்து விட்டு அதன் பலியை முஸ்லிம்கள் மீது சுமத்துவார்கள். (கோத்ராவில் நடைபெற்ற ரயில் எரிப்பு) இதனால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 2500 முஸ்லிம்கள் வெட்டப்பட்டும் எரியுட்டியும் கொல்லப்பட்டார்கள். தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் அஸ்ஸாம் மாநில முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைகள் வரை குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் பாரிமாணத்தை அறியலாம்.
இந்தியாவில் பாபர் மஸ்ஜிது தகர்ப்புக்கு எதிராகவோ,  இணச்சுத்திகரிப்பு, எதிராகவோ முஸ்லிம்களுக்கு இதுவரை நியாயம் பெற்று தரப்படாததில் இருந்தும் இந் நிகழ்ச்சி நிரல்களுக்கு இந்திய அரச அனுசரணை உள்ளது என்பதை அறியலாம்.

இன்று நம் நாட்டிலும் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளை மேற்சொன்ன விடயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எத்தகையதொரு எதிர்காலம்  காத்திருக்கின்றது என்பதை ஊகிக்கலாம்.

இந்நாட்டின் பல்லின, கலாசார தேசியத்தை பௌத்த தேசியமாக பிரகடனப்படுத்தி அதனடிப்படையில் செயற்படுகிறார்கள். (தர்ம ராஜ்ஜியாம் - இந்தியாவின் இந்துபாரதம்)

இலங்கையில் முஸ்லிம் வணக்கஸ்தளங்கள் மீதான தாக்குதல்கள் பகிரங்கமாக நடத்தப்பட்டும் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலை. இந்தியாவில் பாபர் மசூதி பகிரங்கமாக தகர்ப்பட்டும் இது வரை எவரும் கைது செய்யப்படாத நிலை.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் ஹிந்தி, உருது மொழிகளில் முஸ்லிம்களை "முஸல்மான்கள்" என்று அடையாளப் படுத்தினா ர்கள். இலங்கையிலும் முஸல்மான்கள் என்றே சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை அடையாளப்படுத்துகிறார்கள்.

ஆகவே இதுபோன்று மேலும் பல விடயங்களை குறிப்பிட்டுக் காட்டலாம்.

இதுபோன்ற மிக பாரிய ஆழமான சதி சூழ்ச்சிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் எம்மிடையே இதுகால வரை நிலவி வந்த குறுகிய வேறுபாடுகளை மறந்து நாம் மிக நிதானத்துடன் எதிர்காலத்தை அனுக வேண்டிய தேவையுடையவர்களாகவுள்ளோம்.
ஏனைய சமூகத்தவர்களை கோபம் கொள்ளச் செய்யும், பொறாமை கொள்ளச் செய்யும், வெறுப்படைய செய்யும் எமது செயற்பாடுகளை மாற்றியமைத்து எமக்குள்ளே சில ஒழுக்க முறைகளை நாம் கையாள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இக்கருத்தை நோக்கமாக கொண்டு எமது சமுதாயத்தின் கவன ஈர்ப்பை பெறுவதற்காக அண்மையில் பதுளை நகர பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களின் மத்தியில் சிங்கள இனவாதிகளால்  விநியோகிக்கப்பட்ட சிங்கள மொழியிலான துண்டுப் பிரசுரமொன்றின் தமிழாக்கத்தினை இத்துடன் வெளியிடுகின்றோம். பெரும்பான்மை இனத்தவரின் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நச்சுக் கருத்துகள் பரப்பப்படுகின்றன என்பதையும், இதுபோன்றவர்களின் செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை எமது சமூகம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை முன்கூட்டி அறிந்து நாம் எம்மில் எத்தகைய மாற்றங்களை எற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை எமது சமூகத் தலைமைகள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இந்த முயற்சி என்று கூறி குறிப்பிட் துண்டுப் பிரசுரத்தின் நேரடியான மொழிபெயர்ப்பை இத்துடன் அறியத்தருகின்றோம்.

 -----------------------------------------------------------------------------------------------------------------------

சிங்களவர்களே !

சிங்களவர்களை இல்லாதொழிக்க உடன்படாதிருப்போம் !!

உங்களுக்குத் தெரியுமா.... ?

சிங்கள இனம் இப்பூமியிலிருந்து வேகமாக அழிந்து போகும் இனமாக இருப்பதுடன் ஏனைய இனங்கள் தாரளமாக தமது இனத்தை பெருக்குவதுடன் இந்நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

காரணம் !

பிள்ளைகள் பலரை வளர்த்தெடுக்க போதுமான பொருளாரார பலமில்லாத காரணத்தாலும் "நாமிருவர் நமக்கிருவர்" என்ற வக்ககிரமான சிந்தனையின் மூலமும் சிங்கள இனத்தை இல்லாதொலிக்க எடுக்கப்ட்ட முயற்சியின் காரணமாகவும், சிங்கள குடும்பங்கள் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுடன் கட்டுப்படுத்தபட்டதும், அத்துடன் அந்நியர்களின் இனம் பெருகுவதற்காக தெரிந்தோ தெரியாமலோ பொருளாதார வளத்தை தாரைவார்த்து கொடுத்ததும் எமது இனத்தின் துர்பாக்கியமே.

இதற்கான தீர்வூ என்ன ?

எங்களின் தாய் நாட்டையும் எங்களின் இனத்தையும் நாமே பாதுகாக்க வேண்டும்.

எங்களின் பொருளாதாரத்தை சக்திவாய்ந்ததாக கட்டியெளுப்பப்படும் போது எங்களின் சிங்கள இனப் பெருக்கத்தையும் சக்திமிக்கதாக கட்டியெளுப்ப முடியும். அப்போது ஏனைய சவால்கள் சற்று குறைவடையும் வாய்ப்புள்ளது.

நாங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?

சிங்களர்களாகிய நாம் சிங்கள கடைகளில் மாத்திரம் பொருட்கள், சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இது உண்மையில் இனவாதமல்ல. எங்கள் இனம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பயங்கரமான சவால்களுக்கு முன்கொடுக்கக்கூடிய ஆரம்ப வேலைத் திட்டமாகும். சிங்களவர்கள் என்ற வகையில் இநநாட்டின் ஏனைய இன குழுக்களுக்கு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமையை நாம் உத்தரவாதம் அளித்தாலும். சந்தேகத்திற்கிடமின்றி சிங்கள இனத்தை அழிக்கும் நோக்கில் சூட்சுமமாக செயற்படும் தந்திரோபாயங்களை தாமதமின்றி தோல்வியுறச் செய்யவேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

மீண்டும் நாம் ஆணித்தரமாக சொல்வது யாதெனில் சிங்கவர்களான நாம் அந்நியவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அதே வேளை அடிப்படைவாத பங்கரவாதிகளுக்கு நாம் எதிரானவர்கள் என்பதாகும்.

மிகவும் முக்கியமான விடயம்!

இலங்கை நாட்டிக்குள் வியாபார நடவடிக்கையின் ஏகாதிபத்தியம் முஸ்லிம் இனத்தவர்களின் கையில் உள்ளது என்பதை நீங்கள் தற்போதைக்கும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.

உணவூ பொருட்கள், மருந்து வகைகள், ஆடை அணிகள் போனறவற்றுக்கு மேலதிகமாக, கணனிகள், கணனி பாகங்கள், இரசாயன பொருட்கள், தளபாடங்கள், மின்சார உபகரணங்கள், கைஅடக்க தொலைபேசிகள் மற்றும் சேவை வழங்குனர்கள் துரையிலும் முஸ்லிம்கள் தற்போதைக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளதுடன் பெரும்பான்மை சிங்களவர்களை பின்தள்ளிவிட்டு இந்நாட்டின் மொத்த வருமானத்தில் 80% க்கு அதிகமானதை தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். அப்பாவி சிங்களவர்களின் கஷ்டப்பட்டுழைத்த பணத்தை தமது  அறியாமையினால் முஸ்லிம்களுக்கு தாரை வார்க்கின்றார்கள். இந்த பெரும்பணம் குறுகிய எதிர்காலத்தில் தங்களின் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் பரம்பரையின் அழிவின் அடித்தளமாகும். இந்தப் பணத்தால் செல்வாக்குப் பெற்று தமது இனத்தை வகைதொகையின்றி பெருக்கிக் கொண்டும் முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பான்மை இனமாக மாறுவர். (இதற்கு 20, 30 வருடகாலம் போதுமானதாகும்.) 

மனிதர்களை மிருகங்களாக கொன்றொழிக்க அனுமதி வழங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஷரீயா சட்டதிட்டங்களை இந்நாட்டின் சட்டதிட்டமாக மாற்றுவார்கள். அப்பொழுது உங்களது பேரப்பிள்ளைகளின் தலையை பகிரங்கமாக  வெட்டி எறிவார்கள். அத்துடன் நிறுத்தாமல் உங்களின் சமயத் தளங்களை தீ வைத்து எரிப்பார்கள். சமயத்தலைவர்களை வெட்டியும். கொத்தியும் கொன்றொழிப்பார்கள். உங்களின் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அரச நிர்வாக துறைகளில் எவ்வித உயர் வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும். அதற்கான உரிமையும் மறுக்கப்படும். இவை சில பேருக்கு பகல் கனவாக தென்படலாம். ஆனால் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் வாழும் சிறுபான்மை இனங்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத இனத்தாவர்களின் நிலையை சற்று தேடிப்பாருங்கள். உண்மை புலப்படும்.

முஸ்லிம்களின் கைகளிருக்கும் ஏனைய வர்த்தக/ வியாபார நிலையங்களின் விபரம் வருமாறு,

Harcourts நிறுவனம்:- இந்நாடடின் பிரதான மருந்து வகையினை கொள்வனவூ செய்யும் பிரதான நிறுவனம்.

NoLimit, Glitz, Cool Planet, Fashion Bug, Hemas  நிறுவனம்
வைத்தியசாலை மருந்து வகைகள், சுற்றுழா துறை, பேபி ஷெரமி .......... மேலும் அதிகமானவை.

PC House, Alli Group,  கந்துரட்ட குடைகள், ரேண்கோ குடைகள், பைரஹா தயாரிப்புகள், அமானா வங்கி, Etisalat  தொலைபேசி சேவைகள், அப்துல் ரஹீம்ஸ்,          French Woods, Hameedias, Hotel de Pillawoods.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றை உதாரணமாக உங்கள் முன் வைக்கின்றோம். முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் போதை பொருட் கடத்தலில் ஈடுபட்டதற்காக குற்றஞ் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் இன்றுவரை குறிப்பிட்ட போதை பொருட் பாவனையால் முழுமையாக பாதிக்ப்பட்டிருப்பது சிங்கள இளைஞர்களே.

இவர்களின் நிறுவனங்களின் (கடைகளில்) சேவை செய்வதற்காக முஸ்லிம் இளைஞர்களை சேர்த்துக்கொள்ளும் அதேவேளை சிங்கள யுவதிகளையும் இணைத்து கொள்வார்கள். இந்த சிங்கள யுவதிகள் முஸ்லிம் முகாமையாளர்கள் மற்றும் தொழிலார்களால் பாலியல் வல்லுரவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின் தந்திரமாக சிக்கலுக்குள்ளாக்கப்ட்டு இறுதியில் இப்பெண்கள் முஸ்லிம் ஆண்களின் மணைவிமார்களில் இன்னொரு மனைவியாக ஆக்கப்படுவார்கள்.

இந் நாட்டின் பிரதான மொழி சிங்களமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு இவர்களால் வழங்கப்படும் கலண்டர்களில் ஒரு சிங்கள எழுத்தைக் கூட காணமுடியாது. ஆனால் குறிப்பிட்ட கலண்டர்களில் அவர்களின் தொழுகை நேர அட்டவணையையும் அறபி மொழியையும் உற்படுத்தியுள்ளார்கள். இவர்கள் முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அடிக்கடி ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.

 அண்மையில் “கிரீஸ் பேய்” என்ற நிகழ்வின் பின்னணியில் இருந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் நிராயுத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட அப்பாவிகள் அனேகரை கொன்றொழித்தார்கள். அபம்பலங்கொடை பாடசாலை மாணவர்கள் இருவரை எந்தக் காரணமுமின்றி மனிதாபமின்றி கொடூரமாக கைகால்களை வெட்டியும் கொத்தியும் காயப்படுத்தினார்கள். அம்மாணவர்கள் இன்று வரை நடமாட முடியாது ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கின்றார்கள்.

இவர்கள் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புரம்பாகச் சென்று இவர்களின் (முஸ்லிம்களின்) மிலேச்சத்தனமான சட்டமான  இஸ்லாமிய மார்கக “ஷரீஆ”சட்டத்தை அமுல் நடத்துவதற்கு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளாகள்.

இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் இருந்தாலும் இவற்றை நாம் நோக்கும் போது எங்களின் பொறுப்பாக நாம் செய்ய வேண்டியது யாதெனில் நாம் ஏனைய இனங்களுக்கு துன்புறுத்துவதல்ல. மாறாக நாம் நமது இனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். ஆகவே இப்பணிவான வேண்டுதல் யாருக்கெனில் சிங்களவர்களான உங்களுக்குத்தான்.

நீங்கள் உண்மையான “சிங்களவன்” ஆவீர்களானால் சிங்களவர்களின் எதிர்காலத்திற்காக நீங்கள் செய்யவேண்டிய கடமைகள் யாதென்று கவனம் செலுத்துங்கள். உடனடியாக சிங்கள வர்த்தக சங்கங்களை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எல்லா இனங்களுக்குமான பொதுவான வர்த்தக சங்கங்களால் சிங்களவர்களின் பொருளாதாரம் சீரழிக்கப்படுகின்றது. உடனடியாக செயற்படுங்கள். உங்கள் பிரதேசங்களில் உள்ள பன்சலைகளை மையமாகவைத்து ஒன்று கூடுங்கள். உங்களின் வியாபார தளங்களை சற்று முடிவிட்டாகிலும் ஒன்று கூடி செயற்படுங்கள். உங்களின் எதிரிகள் வெள்ளிக் கிழமை தினங்களில் பல மணித்தியாலங்கள் தமது வியாபார ஸ்தளங்களை மூடிவிட்டு பல நஷ்டங்களை ஏற்றுக்கொண்டு தமது எதிர்காலத்திற்காக பள்ளிகளில் ஒன்று கூடுகின்றாகள். முஸ்லிம் வியாபார ஸ்தாபனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள சிங்கள பிள்ளைகளை விலக்கி விடுவதற்காக செயற்படுங்கள். மேலும் எமது பௌத்த பிக்குகளின் கௌரவித்திற்கெதிராக தேசிய ரீதியில் செயற்திட்டங்கள் செயற்படுகின்றதால் அதில் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.

உங்களின் அறியாமையினால் அல்லது எதிர்காலம் பற்றிய சிந்தனையின்றி அந்நியவர்களின் பணப்பொதியை நிரப்பும் நீங்கள் உங்களின் நடவடிக்கைகளினால், உங்களுக்கு முன் வாழ்ந்த உங்களின் முன்னோர்களினதும் உங்களுக்கு பின் இந்நாட்டிள் தலைமைத்துவத்தை ஏற்க இருக்கும் எங்கள் அதிர்கால சந்ததியினதும் “அலுகோசுகளாக” கழுத்தறுப்பவர்களாக ஆகப்போகின்றீர்களா...?

“அனைத்து சிங்களவர்களும் அறிந்து கொள்வதற்காக இதை மேலாலேயே வைத்துக் கொள்ள உதவி செய்யுங்கள்”

“சிங்களவர்களே ! விழித்தெழுங்கள்” புத்த தர்மத்தை பாதுகாருங்கள்.

இலங்கையை இன்னும் 20-30 வருடகாலத்தில் இஸ்லாமியமாக்குவதற்காக “முஸல்மான்கள்” செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

1996ல் மாலைதீவில் ஒன்று சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் 2020ம் ஆண்டாகும் போது கிழக்கு மாகாணத்தில் “நபரிஸ்தான்” என்ற பெயரில் தனியானதொரு முஸ்லிம் இராஜ்ஜியத்தை உருவாக்கவும், அதன் பிறகு முழு இலங்கையையும் முஸ்லிம் நாடாக மாற்றுவிதற்கு திட்டங்களை வகுத்துள்ளனர்.

சமகால கிளப்பரம்பயின் புள்ளி விபரங்களை இதுவரை அரசாங்கம் வெளியிடாமல் இருப்பதற்கான காரணம், குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் முஸ்லிம்களின் இனப் பெருக்க வீதம் 100% த்தால் அதிகரித்துள்ளதையும், முஸ்லிம் நாடுகளின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் நன்கொடைகளினாலும் ஆகும்.

முஸ்லிம் இனப் பெருக்கம் அமைதியானதாக இருந்தாலும், மிகவும் கொடூரமானதாகும்.

அந்நாட்டின் முஸ்லிம்களின் விகிதாசாரம் 50% ஆனவூடன் “ஷரியா” சட்டங்களை இங்கு அமுல் நடத்தி இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைபற்றவார்கள்.

இனப்பெருக்கம் 2001   2011         2021             2031
சிங்களவர்கள்     72%     68%        60%              50%
முஸ்லிம்               7%    14%        25-30%        50-60%
இவர்களின் அமைதியான இனப்பெருக்கத்தை எவ்வாறு நடைமுறை படுத்துகிறார்கள்?

* சிங்களவர்களின் காணிகளை கூடுதல் விலைக்கு வாங்குவார்கள்

* சிங்களவர்களின் வியாபார ஸ்தலங்களை கூடிய விலைக்கு அல்லது குத்தகைக்கு வாங்குவார்கள்,

* சிங்கள பெண்களையும், சிறுமிகளையும் காதலின் பெயரால் வேட்டையாடுவார்கள்,

* சிங்கள இளைஞர்களுக்கு போதை வஸ்துக்களை உபயோகிக்கச் செய்து அவர்களை வலையில் சிக்க வைப்பார்கள்,

* குரகல (ஜெய்லானி), கடற்கர விகாரை, தெவனகல, வடினாகல, புத்தங்கல, தீகவாபி போன்ற சமய ஸ்தளங்களை கொடுரமான முறையில் ஆக்கிரமித்து அவ்விடங்களில் பள்ளிவாச்களை நிர்மாணித்தல்,

* சிங்கள இனத்தவரின் இன விருத்தியை கட்டுபடுத்த அரபு நாடுகளின் பணத்தை பயன்படுத்தல்,

* முஸ்லிம்களின் குடும்பக் கட்டுப்பட்டை தடை செய்தல்,

* சிங்கள நகரங்களை ஆக்கிரமித்து அவற்றுக்கு முஸ்லிம் பெயர்களை சூட்டுதல். (உதாரனம் - தர்கா நகர்)

* தம்புள்ள பள்ளி 60 வருடங்கள் பழமையானது என்று கூறுதல். ஆனால் 2003 ம் ஆண்டின் "கூகல் வின்வெளி படங்களின்" (Google Map) அவ்விடத்தில் ஒரு தகர மடுவம் கூட இருக்கவிலை. எமது புத்த பிக்குகளை கொல்வதும் கொல்ல முயற்சிப்பதும். (DVD யை பார்க்கவூம்)

எமது இனத்தையும், மதத்தையும் நாமே பாதுகாக்க வேண்டும் (இதை இரகசியமாக மேற்கொள்ளுங்கள்).

அவர்கள் (முஸ்லிம்கள்) இவ்வாறு தமது இனத்தை பெருக்குவற்கு வாய்ப்பாக உள்ளது, 80% மான சிங்களவர்களின் பணம் அவர்களின் (முஸ்லிம்களின்) கையில் போவதாலாகும். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கிடைக்கும் இலாபத்தில் 5% பள்ளிவாயல்களுக்கு வழங்குகிறார்கள். பள்ளிவாயல்கள் மூலம் அப்பணத்தை ஏழை முஸ்லிம்களுக்கு வழங்குகிறார்கள். அதன் மூலம் ஏழை முஸ்லிம்கள் ஆறு (06) குழந்தைகளைப் பெற்று இலங்கையை கூடிய விரைவில் ஒரு முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கே இவ்வாறு செயல்படுகிறார்கள்.

* ஆகையினால் நாம் நமது பொருளாதார மூலங்கள் (கேந்திரங்கள்) அனைத்தையும் பாதுகாக்க வேண்டும்.

* முஸ்லிம் கடைகள் அனைத்தையும் பகிஷ்கரிக்க வேண்டும்.

* முஸ்லிம் ஹோட்டல்களில் உணவில் இனவிருத்தியை கட்டுப்படுத்தக்கூடிய (மலட்டுதன்மையை ஏற்படுத்தக்கூடிய) இரசாயன மூலங்களை கலக்கியுள்ளார்கள்.

* சிங்கள கடைகளில் மட்டுமே பொருட்கள் கொள்வனவு செய்ய (வாங்க) வேண்டும். முடியாத பட்சத்தில் தமிழ் கடைகளில் வாங்குங்கள்.

* குத்தகைக்கு அல்லது வாடகைக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வியாபபார ஸ்தானங்களை மீளப் பெற்று சிங்களவர்களுக்கு வழங்குங்கள்.

* னுஏனு யில் உள்ள விடயங்களை பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரப்பச் செய்யுங்கள்.

* பௌத்த வர்தக சங்கங்களை ஸ்தாபித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரையும் அறிவூட்டுங்கள்.

* எந்தவொரு பெண்ணையும், சிறுமியையும் முஸ்லிம்களால் கொள்ளையிடப்பட இடமளிக்காதீர்கள்.

* சிங்கள பெயர்களில் நடாத்தப்படும் முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மீது அவதானம் செலுத்துங்கள். அநேகமாக இவர்கள் குறும் பெயர்களையே உபயோகிக்கின்றார்கள்.

* ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது நான்கு அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற்றெடுங்கள்.

* சமய பாடசாலை (தஹம் பாசல்) மாணவர்களை அறிவூட்டுங்கள்.

* முஸ்லிம் வியாபார ஸ்தாபனங்களில் சேவை செய்யும் சிங்கள இளைஞர் யுவதிகளை விலக்கிக் கொள்ளுங்கள்.

* அவர்களுக்கு சிங்கள வியாபார ஸ்தளகங்களில் வேலை வாய்ப்புகளை ஏட்படுத்திக் கொடுங்கள்.

** “ஹலால்” மார்க் உள்ள எல்லா பொருட்களையும் பகிஷ்கரியுங்கள்.

** “ஹலால்” சின்னத்தை பெற்றுக்கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு வருடமும் “குர்பான் வரி”யொன்று அறவிடப்பட்டு அவ்வரிப்பணத்தை ஹஜ் காலத்திலும் ரமழான் காலத்திலும் “மிருக வதை செய்ய” உபயோகிக்கப்படுகிறது.

** எல்லா நேரங்களிலும் சிங்கள உற்பத்தியை மாத்திரமே கொள்வனவு செய்யுங்கள்.

** “முஸல்மான்கள்” எந்தளவூ இனவாதிகள் என்றால் ஹலால் இலட்சினை இல்லாத பொருட்களை கொள்வளவு செய்வதை பள்ளிகளால் தடை செய்துள்ளார்கள்.

அவ்வாராயின் அவர்கள் சிங்கள உற்பத்திகளை வாங்க மாட்டார்கள்.

** மன்சி, மெலிபன் போன்ற சிங்கள உற்பத்திகளை இவர்கள் பகிஷ்கரிக்காவிட்டாலும் இவ் உற்பத்தியில் உள்ள ஹலால் சின்னத்தை அப்புறபடுத்தும்படி உற்பத்தியாளர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.

சகல ஹலால உற்பத்திப் பொருட்கள் பற்றிய மேலதிக விபரங்களை Dharmadeshaye Iranama Blog இல் காணலாம்.

நாங்கள் இன்னும் தாமதமாகவில்லை!

உங்கள் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் பன்சலைள் ஆகியவற்றின் விலாசம் மற்றும் தொலை பேசி இலக்கங்கள் இத்துடன் இனைக்பபட்டுள்ள வூநஅpடந டுளைவ இல் அடங்கியுள்ளது.

இப்புனித மதத்திற்கு நீங்கள் செய்யும் சேவை மிகவூம் புன்னியமிக்கதும் நன்மை பயற்ககூடியதுமாகும்.

உடனடியாக செயற்படுங்கள்.

நாங்கள் தாமதிககும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு எங்கள் தாய் நாட்டை இல்லாமல் செய்வதை வேகமாக்கும்.
..........................................................................................................

குறிப்பு:- குறிப்பிட்ட துண்டு பிரசுரத்துடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ள இவ்வொழுக்க விதிகள் அடங்கிய பிரசுரத்தில் குறிப்பிட்டவர்களின் தொலைபேசி இலக்கங்களும் அடங்கியுள்ளது குறிப்பிடததக்கதாகும்.

                          “ஊவ கொயும் மெத் சங்விதானய” வோடு இணையுங்கள்

நித்தமும் பின்பற்றவேண்டிய பழக்கவழக்கங்களும் ஒழுங்குவிதிகளும்

1.      பௌத்தர்களை சந்திக்கும் போது “நமோ புத்தாய-தெருவன் சரணய்” என்று கூறுங்கள். (குட் மோர்நிங்இ குட் நயிட் ஆகிய சொற்கள் பாவனையிலிருந்து நூறு வீதம் தவிர்ந்திருங்கள்)

2.      தேசிய கீதம் பாடும் போது கம்பீரமாக எழுந்திருங்கள்.

3.      முதியோருக்கு மரியாதை கொடுங்கள் (ஆசனத்தலிருந்து எழுந்து நின்று கும்பிடுங்கள்)

4.      பஸ் வண்டியில், புகையிரதத்தில் பயணம் செல்லும் போது முதியவர்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளை சுமந்து வரும் பெண்களுக்கும், முதியோருக்கும் ஆசனத்தை வழங்குங்கள்.

“ஊவா கொயும் மெத் சங்விதானய” வோடு கூட்டினையுங்கள்

1.       பௌத்தர்களை ஒற்றுமை படுத்தல்.

2.      ஏழை பௌத்தர்களுக்கு உதவூதல்.

3.      மத மாற்றத்திற்குள்ளாகும் பௌத்தர்களை மீட்பதற்காக வேண்டி செயற்படல்.

4.      பௌத்த வியாபாரிகளை பலமிக்கவர்களாக்குவதற்கு செயற் திட்டங்களை அமுல் நடத்தல்.

5.      பௌத்த உரிமையை பாதுகாப்பதற்காக செயற்படல்.

6.      தெளிவான புத்தர்மதத்தை விளங்குவதற்காக செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.

7.      பௌத்த பெண்களை பாதுகாப்பதற்காக திட்டங்களை வகுத்து செயற்படுத்தல்.

8.      பௌத்த பெண்களின் ஆடை அணிகள் விடயமாக அறிவூறுத்தல்.

9.      சிங்கள பௌத்தர்களின் பிறப்பு வீதம் குறைவதை பற்றி விளங்கப்படுத்தி பிறப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக வேண்டிய அறிவூறுத்தல்களை வழங்குதல்.

10. நன்மையான புன்னிய கருமங்கள் பற்றி தெளிவுபடுத்தல்.

11. பௌத்த “நிகாயா” உற்பிரிவூகள் பேதங்களை துறந்து பௌத்த பிக்குகளை ஒன்றிணையுமாறு வலியுறுத்துதல்.

12. பௌத்த விகாரைகளை மையமாக வைத்து ஒவ்வொரு ஊரிலும் “ஊவ கொயும் மெத் சங்விதானய” இயக்கத்தை ஸ்தாபித்தல்.

13. பௌத்த இளைஞர் யுவதிகளுக்கு புத்த தர்மத்தின் மகிமையை உணர்த்திடுதல்.

14. பௌத்த பெண்மணிகளை மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியச் செய்வதில் ஏற்படும் பாதிப்புகளை விளங்கப்படுத்துதல்.

15. பௌத்த பெண்கள் அந்நிய மதத்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதால் ஏற்படக்கூடிய நிலையை விளங்கப்படுத்துதல்.

16. மாடு அறுத்தல் உட்பட மிருக வதைகள் விடயமாக தெளிவை ஏற்படுத்தல்.

17. இளைஞர்களை போதை வஸ்து பாவனையால் மீட்டெடுத்தல்.

18. குறை வருமானமுள்ள பௌத்தர்களுக்கு வீடு கட்டுவதற்காக உதவூதல்.

19. திறமையான பௌத்த மாணவாகளுக்கு “புலமை பரிசில்” திட்டமொன்றை அறிமுகம் செய்தல்.

தலைவர் (பௌத்த மத குரு)      -
பிரதான அமைப்பாளர் (பௌத்த மத குரு)
 செயளாலர் (பௌத்த மத குரு)
பொருளாலர்
 பிரதான அமைப்பாளர்

குறிப்பு - வெளியிடப்பட்டுள்ள இந்த துண்டுப்பிரசுரங்ளில் அதனை வெளியிட்ட பௌத்த குருமாருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளபோதும் சில காரணங்களினால் நாம் அந்த தொலைபேசி இலக்கங்களை இங்கு அனுமதியளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது)




37 comments:

  1. அன்பர்களே! நாம் என்ன செய்யலாம்?
    இந்த நாட்டுக்கு எதிரானவர்கள் முஸ்லிம்கள் அல்ல ஆங்கிலேயர்களும் அவர்களின் கூட்டாளிகளும் தான் என்பதை ஆணித்தரமாக இலங்கையர்களிடம் (சிங்கள,முஸ்லிம்,தமிழர்கள்)எடுத்து வைப்பதுடன் இம்மூன்று சமூகமும் சேர்ந்துதான் நாட்டைக்கட்டியெழுப்ப முடியும் என்பதையும்,பிளவுகள் நாட்டுக்கும் நமக்கும் கேடு என்பதையும்,ஆங்கிலேயர்களும் அவர்களின் கூட்டுக்குழுக்களும் அன்று முதல் இன்று வரை பிரத்தாழும் தந்திரத்தின் மூலம் எமது பொருளாதாரத்தை சுரண்டுவதில் தான் எங்களுக்குள் பிளவுகளுக்கு தூபமிடுகிறார்கள் என்பதையும், மக்கள் மத்தியில் பரவச்செய்ய வேண்டும். இக்கருத்துக்கள் மக்களைப்போய்ச்சேர மீடியா ரொம்ப உதவியாக இருக்கும். ஆகவே ஆட்சியில் உள்ளவர்களின் உதவி மூலம் எடுத்துச்செல்வது சாலச்சிறந்தது என்பது எனது கருத்தாகும்.

    ReplyDelete
  2. Sinhala communities population discreation one of reason past ten years much mans monks percentage grew up,so monks are not allowed to married so sinhala population went down!

    This article so good but no need to take very serious because of sinhalaya modaya!

    ReplyDelete
    Replies
    1. Brother,
      You have a good point but the last sentence manifests a really bad opinion about Muslims, please refrain from hurting other community's feelings.

      Delete
  3. Jaffna Muslim.. your pride of Muslim and your publishing very important things to the community.. but our community doesn't have time to read this all.. because their very busy people in the world... And this kind of thing must be consider very seriously and must need reaction officially as soon as possible.. we have to report against this to our Muslim minister and they must speak the truth to the media.. but our minister never do that... what shall we do? Allah must save our Muslims from entire world.

    ReplyDelete
  4. இதில் இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றி பல தப்பான விடயங்கள் பரப்பட்டு உள்ளன இது பற்றி நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முடியும் என்றால் சிங்கள மொழி இல் சரியான விளக்கட்டுடடன் துண்டு பிரசுரம் ஒன்றை வேலிடள்ளலாம்

    ReplyDelete
  5. இதில் அதிக அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தூன்டப்பட்டுள்ளது எனவே முஸ்லிம்கள் கவணமாக நடந்து கோள்ள வேண்டும். எங்கேயாவது கேல்விப்பட்டதுண்டா? முஸ்லிம்களாள் பிற மதஸ்த்தலங்கள் அழிக்கப்பட்டது என்றும் கல் வீசப்பட்டது என்றும்.

    ReplyDelete
  6. இவர்களது செயற்பாடுகாளும் பின்னனியும்


    சில பெரும்பாண்மையின அடிப்படைவாதிகள் இன்று மேற்கத்தேயம் தொட்டு உலகம் முழுவ‌திலும் இஸ்லாத்தின் வளர்ச்சியின் மீது கொண்ட காழ்புணர்ச்சியின் காரணமாக இலங்கையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை கிளரி விடுவதன் ஊடாக, இனரீதியான பாரியதொரு பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருகின்றனர். இதன் பின்னயில் எனது தேடல்களின் ஒரு சில துளிகள் உங்கள் பார்வைக்கு

    அண்மைக்காலமாக சில அடிப்படைவாதிகள் இணையத்தளங்கள் ஊடாக முஸ்லிகளுக்கு எதிராக முன்வைக்கும் மிக பிரதான குற்றச்சாட்டு பௌத்தர்களது வரலாற்று சின்னங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்க படுவதாகும். இதற்காக இவர்கள் முன்வைக்கும் மிக முக்கிய சான்றுகள் பொத்துவில் முகுது விஹார, தெவனகல விஹார, குரகல விஹார போன்றவை முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுள்ளன என்பதேயாகும். இதன் பின்னனி பற்றிய எந்தவித‌ தெளிவுமின்றி திருவுபடுத்தப்பட்ட செய்திகள் மற்றும் இனவெறிவை தூண்டும் வார்தைகளின் ஊடாகவும் சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக‌ திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருகின்றனர். இதன் பின்னியில் நியாயங்கள் இருப்பின் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, இவர்கள் முஸ்லிம்களை பற்றிய தவரானதொரு க‌ண்ணோட்டத்தை சிங்களவர்கள் மத்தியில் தோற்றுவிப்பதற்கு காரணம் என்ன?

    ReplyDelete
  7. இது மாத்திரமன்றி தற்போது எம்மை சுற்றி நிகழும் மோசமான நிகழ்கவுகளை கூட மதங்களுடன் சம்பந்தம் செய்து, பெருமாண்மையின மக்களை முஸ்லிம்கள் மீது ஏவி விடுதவதற்காக‌ தகவல்களை திரிவு செய்து பரவவிடும் இழி செயல்களை இவர்கள் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் ஊடாக செய்து வருகின்றமையை காண முடிகின்றது. இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலரே அன்றி முழு முஸ்லிம் சமூகமும் அல்ல. இதற்காக வேண்டி இன்று அனைத்து முஸ்லிம்களையும் எதிரிகளாகப் பார்க்கும் விடயம் வேதனைக்குரியது. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் கொலை, பஸ்ஸர மற்றும் பலபிடிய சம்பவங்களை மதங்களுடன் தொடர்பு செய்து முஸ்லிம் அல்லாதோரை இஸ்லாம் கொலை செய்யத் தூண்டுவதாகவும், இவை அதன் ஆரம்பம் எனவும் ஒரு குழு பாரியதொரு பிரச்சார நடவடிக்கைகளை முஸ்லிம்களுக்கு எதிராக இன்றும் மேற்கொள்கின்றது. இதனூடாக இவர்களின் பெருமான்மையின மக்களை முஸ்லிகளுக்கு எதிராக தூண்டிவிடும் எண்ணம் நன்கு புலணாகின்றது.

    ReplyDelete
  8. அண்மைக் காலமாக இலங்கையின் பிரதான ஊடகங்க‌ளான திவயின, மவ்பிம, லங்கா சீ நிவ்ஸ், மற்றும் ராவய இணையத்தளங்களில் முஸ்லிககளை மிக மோசமாக சித்தரிக்கும் செய்திகளை தொடந்து வெளியீடு செய்துவருவதை நாம் காணலாம். இது போன்ற‌ மோசமான சித்தரிப்புகள் மூலம் பெருமாணமையின மக்களை அச்சம் கொள்ளசெய்வதுடன், முஸ்லிம்களது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு மீண்டுமொரு பதட்ட‌ நிலையை இலங்கையில் உருவாக்குவத்ற்கு இந்ந ஊடகங்களும் துணைபோவது கவலைக்குறிய விடயமாகும்.

    ReplyDelete
  9. இன்று இவர்கள் பல இணையத்தளங்களை இஸ்லாத்தை தவறாக சித்தரிப்பதற்கும், முஸ்லிம்களை இழிவு செய்வதற்காக‌வும் முஸ்லிகளது பெயர்களிளே நடாத்தி வருகின்றனர். அவைளினூடாக அல்லாஹ், அல்-குர்ஆன் மற்றும் நபி அவர்களை மிகவும் தாழ்வாகவும் மோசமாக சித்தரிப்பதன் ஊடாக முஸ்லிம்களை தூண்டிவிடுவது மாத்திரமன்றி சிங்கள மக்களிடம் தவரானதொரு கண்ணோட்டத்தை தோற்றுவிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    ReplyDelete
  10. இவர்களது முக்கிய குறிக்கோள்களில் ஒன்று முஸ்லிகளை பொருளாதார ரீதியாக வீழ்த்தி மிகவும் பலவீனமானதொரு சமுகமாக மாற்றுவதாகும் . இதற்காக அண்மைக் காலங்களில் முஸ்லிம்களது வியாபார, பொருளாதார நடவடிக்கைகளை சீர்குளைக்கும் முகமாக பல போலியான குற்றச்சாட்டுகள், இனவாதத்தை தூண்டும் பிரசாரங்கள் என‌ நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்திக் கொண்டிருப்பதை எம்மால் காண முடிகின்றது.

    ReplyDelete
  11. முஸ்லிகள் மிகவும் அவதனமாக இருக்க‌ வேண்டிய முக்கிய‌ காலகட்டம் இதுவாகும். இவர்களாவே சில போலியான நாடகங்களை திட்டமிட்டு முஸ்லிம்களின் பெயர்களில் அரகேற்றி வருகின்றனர். அண்மையில் முஸ்லிகளின் ஜிஹாத் அமைப்பு மூலம் சுமன ஹிமி அவர்களுக்கு கொலை மிரட்டல் என்ற செய்தியை அனைத்து ஊடகங்களிலும் எம்மால் காணமுடிந்தது. இத‌னூடாக பாரதூரமான விளைவுளை, தவரான எண்ணங்களை தோற்றுவிப்பதுடன் அதன் பிரதிகூலங்களை முஸ்லிம்கள் மீது தினிபதற்கு முயற்சி செய்து வருகின்றனர். வருந்தத் தக்க விடயம் என்னவெனில் இது போன்ற செயற்பாடுகளுக்கு பிரதான ஊடகங்களும் துணை செல்வதாகும்.

    ReplyDelete
  12. இவைகளினுடாக ஒரு திட்டமிட்ட குழு அரசியல், ஊடகங்கள் என பலமான பின்னனியுடன் முஸ்லிகளுக்கு எதிராக செயற்படுவதனை எவ்வித ஐயமுமின்றி உறுதி செய்யலாலம். இவர்களது இவ்வாறான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் மிகவும் சிறிதாக எண்ணும் விடயங்கள் கூட இனிவரும் காலங்களில் மிகப் பெரிய கலவரங்களாகக் மாறலாம். இவர்களது செயற்பாடுகளை பற்றி கூறுவதென்றால் இலங்கையில் பல்கலைகழகம், தகம் பாசல், பிரதேச ரிதியாக விளிப்புணர்வு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் பிரசாரங்ளை செய்து வருகின்றனர். அவையாவன நாம் மேலே கூறியது போன்று இஸ்லாம் தீவிரமானது, முஸ்லிம் அல்லாதோரை கொலை செய்யத் தூண்டுகிறது. முஸ்லிம்கள் பௌத்தர்களது வரலாற்று பிரதேசங்களை ஆக்கிரமிக்கிறனர் போன்றனவே ஆகும்.

    இன்னும் முஸ்லிகளுக்கு எதிராக காணப்படும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை மேற்கொள்வது, அவர்களது உதவிகளை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது, முஸ்லிகளுக்கு எதிராக இணையத்தளங்களில் காணப்படும் தவரான தகவல்களை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து பிரச்சாரம் செய்வது என தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருகின்றனர்.

    இன்று முஸ்லிகளுக்கு எதிராக ஊடகங்களால் வெளியிடப்படும் ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். குரகல, தெவனகல, மற்றும் முகுது விஹார பற்றிய விடயங்கள் ஆராயப்படுவதுடன் இனவாத‌த்தை தூண்டும் பிரசாரங்ளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள‌ வேண்டும். இது போன்ற விடயங்களில் ஒரு சில முஸ்லிம்கள் தவறு செய்திருப்பின் அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் தயாராக வேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறுகளை மதங்களுடன் தொடர்பு செய்து பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் இலங்கையில் மீண்டுமொரு பதட்ட நிலை வெகுவிரைவில் உருவாகலாம்

    ReplyDelete
  13. சகோ.ஹசன் உங்கள் கருத்து ஒவ்வொரு இஸ்லாமியனிடமும் போய்ச்சேர வேண்டிய விடயம்.அத்துடன் இந்த விடயத்திலாவது எல்லா ஜமாத்துகளும் ஒன்று படுமா?இந்த விடயத்திலாவது எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஒன்று படுவார்களா? இந்த விடயத்திலாவது எல்லா பள்ளிவாசல் நிர்வாகங்களும் ஒன்று படுமா? ஒரு கலவரம் அல்லது ஹசன் சொல்வது போன்று பொருளாதாரத்தை சீரழிக்கும் முயற்சி நடக்கும் போது எந்த ஜமாத் என்று விசாரித்து தாக்கப்படப்போவதில்லை, ஒரே பார்வை, முஸ்லிமா? இஸ்லாமியனா?(பர்மா நல்ல உதாரணம் இன்னும் சில காலம் பர்மிய முஸ்லிம்கள் எங்களுக்கல்ல எனும் போக்கு தொடருமாயின் பர்மாவில் ஒரே ஒரு முஸ்லிமைக்கூட காப்பாத்திக்கொள்ள முடியாமல் போகும்)ஆக சகோதரர்களே சிந்திப்போம்.,குர்ஆன் ஹதீஸ் இவைகளை மாத்திரம் ஏற்று தீர்வுகளையும்,முடிவுகளையும் குர்ஆன் ஹதீஸிக்கு உட்பட்டு எடுக்கும்போது அல்லாஹ் எம்மணைவரையும் காப்பான்.,பாதுகப்பான்.

    ReplyDelete
  14. முஸ்லிம்களின் வியாபாரங்களை புறக்கணிக்கச் சொல்லிவிட்டு தமிழர்களிடம் வியாபாரம் செய்யுங்கள் என
    எழுதியிருப்பதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது நம்மை அழிப்பதற்கு, 30 வருடங்களாக நாட்டை
    பயங்கரவாத பிடியில் வைத்து இருந்தவர்களுடன் ,தங்கள் இனத்தை அழித்தவர்களுடன் கூட சேருவோம்
    என்று சொல்கிறார்கள்.
    பள்ளிவாசல்களுக்கு வியாபாரிகள் காசு கொடுத்து அது ஏழைகளின் வாழ்வுக்கு பங்களிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் .
    அப்படி ஒரு சம்பவம் நடக்குமானால் முஸ்லிம்களில் ஏழைகளே இருக்கமாட்டார்களே.
    உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக அனைத்து மத வெறியர்களும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்று
    முஸ்லிம்களாகிய நாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம்.அல்லாஹ்
    சூழ்ச்சி செய்பவர்களின் செயைல்களை நன்கறிந்தவன்,ஒருசில சோதனைகளை தந்தாலும் நம்மை பாதுகாப்பான்.
    எதிர் கட்சி ,ஆளும் கட்சி யின் ஆசியில்லாமல் இலங்கையில் எதுவும் நடக்காது.முஸ்லிம் அரசியல்வாதிகள்
    அரசியல் மட்டும் தான் செய்வார்கள் அவர்களுக்கு நாட்டில் நடப்பது எதுவும் தெரியாது.இது நமது சாபக்கேடு.

    ReplyDelete
  15. Another important point is "the increment of muslim population" shown in the latest census.

    ReplyDelete
  16. மிக இறுக்கமான கட்டத்தில் இருக்கிறோம். முஸ்லீம்கள் நிதானமாக சிந்தித்து செய்லபடாவிட்டால் பாரிய பிரச்சினைகளை ஆங்காங்கே சந்திக்க நேரிடும். ஆட்சி அதிகாரம் மற்றும் மார்க்கம் போசுபவர்கள் குறிப்பாக இந்த விடயங்களை கவன்த்தில் கொள்வது அவசியமாகும். நன்றி

    ReplyDelete
  17. இயக்க , பொருளாதார பேதங்களை மறந்து, ஒன்றுபட்டு முஸ்லிம்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.... முஸ்லிம்களுக்கு இடையில் ஒற்றுமை தேவை என்பதை இபோதவதோ புரிந்துகொண்டால் சரி... திரும்பவும் சின்ன சின்ன விடயங்களுக்கு பிரிந்து விடாமல் இருந்தால் சரி ......

    ReplyDelete
  18. allah will protect us from bad thoughts

    ReplyDelete
  19. அஷ்புனல்லாஹ்

    ReplyDelete
  20. அஷ்புனல்லாஹ், எங்களை படைத்தவன் அல்லாஹ்
    நன்மை தீமைகளை அவன் அறிவான்
    அவன் எது நடக்கவேண்டும் என்று திட்டமிட்டுருக்கின்றானோ
    அதுவே நடக்கும். அல்ஹம்துலில்லாஹ்
    நாங்கள் உண்மையான முஸ்லிமாக அவன் சொன்னது போல்
    நடந்தால் போதும்,

    ReplyDelete
  21. அஷ்புனல்லாஹ்,
    அன்பர்களே,
    கடைசியில் குறிப்பிட்டு இருக்கும் "நித்தமும் பின்பற்றவேண்டிய பழக்கவழக்கங்க"வாசகத்தை வாசித்தீர்களா ?
    அது ஒன்றே போதும் அவர்களும் ஒரு நாள் இஸ்லாத்தை மதிப்பார்கள், மாறுவார்கள்,
    ஒரு சமயம் ( 2030 ) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுகொள்வார்கள்.
    இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  22. Alhamdu Lillah, Allahu Akber, Laa Ilaha Illallah

    ReplyDelete
  23. மரணப்போராட்டம்

    இதில் வரும் யாவும் பொய்யே இதற்கு பின்னல் பெரும் சதி இறக்கிறது இதனால் நம் நாடுதான் பின்தள்ளப்படும் இங்கு குறிப்பிட்டுள்ளார்கள் மற்றைய நாடுகளில் மற்ற இனத்தவர்களுக்கு அதாவது பௌத்த மதத்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லையாம் இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம் இன்றைக்க் அரபு நாடுகளில் எத்தினையோ பௌத்தர்கள் தங்கள் நாட்டில் அதாவது ஸ்ரீ லங்காவில் அடைய முடியாத நிலைகளில் இருக்கிறார்கள் இது இவர்கள் கண்ணுக்கு தென்படவில்லையா? ஏன் இந்த இன வெறி வாழும் காலம் கொஞ்சமே நல்ல காரியங்களை செய்து நன்மைகளை கொள்ளையடிப்போம் ஏன் இந்த இஸ்லாம் மார்க்கம் மீது இவ்வளவு பொறாமை அது சரி வளர்ந்துவருவது நம் இனம்தானே அந்த பொறாமை உண்மையான மார்க்கம் இதுதானே சிலரின் வறட்டு கெளரவம் தான் மதம் மாற தடையாக உள்ளது இவர்களுக்கு பயம் வந்துவிட்டது அதுதான் இவர்கள் இப்படியெல்லாம் நடக்க காரணம் விளைவுகள் வெகுதூரமில்லை நண்பா நாமும் தயார். எங்களுக்கு இதெல்லாம் பலக்கபட்டதுதானே

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலைக்கும் !

    சிங்களவர்கள் மோடயர்கள் (முட்டாள்கள்) கேவ்ன் சாப்பிடுவதற்கு யோதயர்கள் என்பது அன்றைய கூற்று !

    சிங்களவர்கள் சதிக்காரர்கள் கொடுமை செய்ய வல்லவர்கள் என்பது இன்றைய கூற்று !

    எனவே
    சகோதரர்களே!
    விழித்திடுங்கள்
    ஐக்கியத்தை வலத்தெடுங்கள்
    பேதங்களை விட்டொழியுங்கள்
    இயக்கங்களை ஓன்று சேருங்கள்
    குர் ஆனை, ஹதீஸை மதியுங்கள்
    மார்க்க அறிஞ்சர்களுக்கு மதிப்பளியுங்கள்
    ஏழை முஸ்லிம்களுக்கு வாரி கொடுங்கள்
    பிற மதத்தவர்களை புறக்கணிக்காதீர்
    பொய், களவு, வட்டி, சினா, மோசடிகை தவிர்ப்போம்
    மது, மாதுகளை மறப்போம்
    குழந்தைகளை அதிகமாக பெறுவோம்
    பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்
    அதில் ஏலைகளுக்கு பங்கு கொடுப்போம்
    பள்ளிகளை வலுவாக்குவோம்
    முஸ்லிம் என்பதை மறைக்காமல் வாழ்வோம்
    பெண்களை சஹாபா பெண்களாக வாழ வலிகாட்டுவோம்
    அன்னிய ஆண்கள் நம் பெண்களை மணக்க மறுப்போம்
    அல்லாஹ் விடம் என்றும் உதவி தேடி பொறுத்திருப்போம்
    அன்னியர்கள் நம் மதத்தை அறிய வழி வகுப்போம்
    நன்றி

    ReplyDelete
  25. உலமாசபை மக்களுடன் நெருக்கமான தொடர்பை பேணவேண்டும்.
    இப்போ மக்களில் பலருக்கு உலமாசபை என்று ஒன்று இருப்பதே தெரியாது.

    ReplyDelete
  26. இவர்களுக்கு நோன்பு வந்தால் ஈச்சம்பழமும் பெருநாள் வந்தால் வட்டிலப்பமும் கொடுப்போம்.
    எல்லாம் சரியாகவிடும்......?

    ReplyDelete
  27. regarding this issues i have to say some thing about this.sinhalist community leaders and mungs expressing their ethnic issues against the Muslim community in this country,do you know ho gave the influence to them?do you think only Sinhalese are braking our mosques? no my dear friends our community guide them to do so. resonantly we speaks about thambulla mosque do you know what append in mahagoda,wammana,and resonantly in kurunegela? in mahagodda six Innocent muslin were killed in side the mosque are thy killed by the sinhalist? in wammane mosque was burnt by a group of people from the certain jamath call tablik.kurunegala mosque was broken by the influence of the same jamath by recently.they are not sihalist or non Muslims they are Muslims.why thy doing this? because thy using there influence to control all mosques in this country for establish their suffisum.resontlly one of the ulama of particular jamath,by the name call yoosuf mufthi issued a fathwa,in a certain please is their a mosques performing with out the guidance of particular jamaath, it should be broken.thous kind of fathwa should not release by the ulamas of this country it will molest the enemies of Islam in this country.my dear Islamic friends don't show the path to animist of islam.

    ReplyDelete
  28. insah alla.allah will save us.

    ReplyDelete
  29. ,J ,t;thwpUf;f fle;j 15/12/2012 jpdf;Fuy; gj;jpupifapy; jpU fe;ijah rHNt];tud; vd;gtH 1990Mk; Mz;L ntspNaw;wg;gl;l tlf;F K];ypk;fs; njhlHghf nfhr;irahf vOjpAs;shH. vq;fis ,dr;Rj;jpfupg;Gf;Fl;gLj;jp vkJ epyq;fisAk; clikisAk; #iuahba mtHfs; vkJ gpuNjrq;fspy; Aj;jk; eilngwtpy;iy vd;Wk; vkf;F xU ghjpg;Gk; ,y;iy vd;Wk; mtHfSf;F tUfpd;w cjtpia ehk; jl;bg; gwpf;f ghHf;fpd;Nwhk; vd;Wk; nfhr;irahf vOjp ,Ug;gij ehk; td;ikahf vjpHg;Nghk;.

    ReplyDelete
  30. Jaffna Muslim..Jazak Allah hair for sharing important message to us.

    ReplyDelete
  31. All muslims has join together as one Jamath to achieve & protect our rights.

    ReplyDelete
  32. oh allah .... plz save us

    ReplyDelete
  33. Eppadi Ellam Tittam Wahukkurarhal.Namathu Muslim Makkal Than Otrumay Enri Bayanthu Madayerhalahavum Mooda Nambikkailum Walnthu Kondirukkirarhal.Ethay Parthawathu Emathu Muslim Ummatthukku Padippinay Waratha?Enimalawathu Muslim Arasiyal Thalaywarhal Otrmai Pada Mattarhala?

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லஹி வாபரகதுஹு .

    நாம் ஆத்திரப் படுவதிலோ அல்லது கோபம் கொள்வதிலோ அர்த்தம் இல்லை. நான் இந்த நாட்டில் உண்மையான ஒழுங்கான தாவா பணியை செய்ய தவறிவிட்டோம். எனதும் உங்களதும் உள்ளங்களில் ஹுப்புத் துன்யா ( உலஹ ஆசை) கராஹிய்யதுல் மௌத் (மரண பயம் ) என்பவை நிறைந்து விட்டது.

    ஒரு சமூகம் தாவா பணியை கைவிட்டால் இறைவன் அந்த சமூகத்தை அழித்து விட்டு அப் பணியை சிறப்பஹா செய்ய கூடிய வேறு ஒரு சமுகத்தை உருவாக்குவான்.

    இறைவன் கூறியதை நான் ஒழுங்கஹா செய்தால், நம்மை இறைவன் பாதுகாப்பான். இன்றே எமது பாவங்களுகாக தௌபா செய்து அவன் பக்கம் மீண்டு, தொளுஹை பொறுமையை கொண்டு உதவி கூறுவோம்.

    நிச்சயம் இறை உதவி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் .

    பத்ரிலே உதவிய , இப்ராகிம் (அலை) அவர்களை நெருப்பில் பாதுகாத்த , மூஸா (அலை) கு கடலை பிழந்த, சர்வ வல்லமை உள்ள அதே அதே இறைவன் இன்றும் உயிருடன் உள்ளான். நாம்தான் தொடர்பிழந்து அலைஹிறோம்.

    வெள்ளத்தில் செல்லும் நுரை போல இல்லாமல், உணவு தட்டை நோக்கி மிருகம் பாய்வது போல எம்மை நோக்கி எதிரிகல் பாயும் முன்னர், நாம் இறைவனை நெருங்க முயற்சிப்போமாஹ.
    இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை இறை அச்சம், துஆ,ஒற்றுமை

    ReplyDelete
  35. هداكم الله تعالى

    ReplyDelete
  36. Assalamualaikum ......
    அன்பார்ந்த முஸ்லிம் பெருமக்களே !!!
    நாங்கள் பிரசினைஹல் எழும்போது மட்டும்தான் இவற்றைப் பற்றி பேசுகிறோம் ......
    பின் அவைஹல் மங்கிப்போஹும் பொது இவை அனைத்தையும் மர்ந்து விடுஹிறோம் .

    இனியும் இவ்வாறு இதை ஓர் அல்ட்சியமாஹ விட்டு விடாமல் இதற்குரிய நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புடன் வேண்டிக்கொல்ஹிறேன் ......

    ReplyDelete

Powered by Blogger.