Header Ads



சிறந்த ஊடகவியலாளராக பாத்திமா ஹுஸ்னா தெரிவு

இலங்கை பத்திரிகை ஆசிரியா சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து சிறந்த ஊடகவியலாளர்களைத் தெரிவுசெய்து வருடந்தோறும் வழங்கி வரும் விருதுக்கு இம்முறை தினக்குரல் ஊடகவியலாளர்  மொஹமட் ஹுஸைன் பாத்திமா ஹுஸ்னாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு மீராணிய வீதியைச் சேர்ந்த இஹ்ஸானியா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.இஸட்.எம்.ஹுஸைன் மற்றும் ஜெனீக்கா தம்பதியினரின் மகளாவார்.

பாத்திமா ஹுஸ்னா 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருதையும், 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவக் கட்டுரையாளருக்கான விருதையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கிருபாகரன் மற்றும் பாலேந்திரன் பிரதீபன் ஆகியோரும் இம்முறை விருதுகளைப் பெறவுள்ளனர்.

இவர்களுக்கான விருது இன்று செவ்வாய்கிழமை, 31 ஆம் திகதி மவுன்லேவனிய்யா ஹோட்டலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.