Header Ads



வேங்கை சு சே இப்ராஹீம் கவனத்திற்கு..!

சுவைர் மீரான்

வேங்கை சு சே இப்ராஹீம் என்பவர் எழுதியுள்ள கட்டுரை முற்றாக நிராகரிக்கப் பட வேண்டியதும், மறுக்கப் பட வேண்டியதாகும்.

தம்புள்ளையில் பிரச்சினை இருப்பது உண்மைதான், அதற்காக நர மாமிசம் உண்ணும் முதலைகளின் நீலிக் கண்ணீர் எமக்குத் தேவையில்லை. இவர் போன்றவர்களின் ஆர்ப்பாட்ட  செயல்பாடுகளும்,தேசியக் கோடி, ஜனாதிபதி உருவப் பொம்மை எரிப்புகளும்,அனல் பறக்கும் அறிக்கைகளும் நமக்கு ஒருபொழுதும் உதவப் போவதில்லை, நமது நிலையை மேலும் சிக்கலாக்கி,  நமது நிலைப்பாட்டை ஆதரிக்கும் பெரும்பான்மயான  சிங்களவர்களையும்  நமக்கு எதிராகத் திருப்பி விடவே பயன்படப் போகின்றன.

வேங்கை சு சே இப்ராஹீம் என்கின்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த இந்த பெயர் தாங்கி முஸ்லிம் திருமாவளவனை தலைவனாக ஏற்று  அதற்காகவே வாழ்பவர்.

இவரைப் போலவே இன்னும் சில பெயர் தாங்கிகள் உள்ளனர். தமிழக முஸ்லிம்களில் இணைய,  ஊடகத் தொடர்பு உள்ள பலர் இவர்களைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். இலங்கை முஸ்லீம்களுக்கு வேண்டுமானால் இவரின் பெயர் புதிதாக இருக்கலாம்.  வேங்கை என்பது இவரின் தகப்பன், தாய் வைத்த பெயரில் இல்லாத ஒன்று, இவர் சுயமாக சூடிக் கொண்ட  ஒன்று.

வேங்கை என்று இவர் தனது பெயருக்கு முன்னால் சூட்டிக் கொண்டுள்ளதே  இவர் முஸ்லிம் தோல் போர்த்திய புலி என்பதனை தெளிவாக இனம் காட்டுகின்றது.

இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், புலிகள் குறித்தும் நிறைய பொய்களை தனது கட்டுரையில் பதிந்துள்ளார். புலிகளின் இயக்கப் பெயர் குறித்த உண்மைகளை மறைத்து, அவர்களை முஸ்லீம் என நம்மை நம்ப வைக்க முயல்கின்றாரா?  அல்லது  விஷயமே தெரியாமல் வெறுமனே உளறிக் கொட்டுகின்றாரா?

உணவில்  சயனைட் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு குமரப்பா, புலேந்திரனுடன் கொலை செய்யப்பட  பன்னிரண்டு பேரில் ஒருவரின் புலி இயக்கப் பெயர் ரஹீம், இவர் முஸ்லிமா? இல்லவே இல்லை.

புலிகள் தங்களின் இயக்கப் பெயராக பல முஸ்லிம் பெயர்களை வைத்திருந்தனர் என்ற உண்மை தெரியாமல் இருக்கின்றார் வேங்கையார், பரிதாபம்தான். நசீர், ரிபான், காதர் போன்ற இயக்கப் பெயர்களில் இருந்தவர்கள் யாரும் முஸ்லிம்கள் கிடையாது. இம்ரான் படையணி முஸ்லிமின் பெயரால் உருவாக்கப் பட்டதாம்? யார் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கின்றார் இதனை எழுதியவர்?

(கடாபி என்ற இயக்கப் பெயர் கொண்ட ஆரம்பகாலப் போராளி முஸ்லிமா இல்லையா  என்பதனை யாராவது உறுதிப் படுத்த முடியுமா?)

புலிகள் முஸ்லீம்களை தாக்கியதற்கு புதுக் கற்பனைக் காரணம் சொல்கின்றார் சொங்கி வேங்கை. முஸ்லிம் ஊர்காவல்  படைதான் பிரச்சினைக்குக் காரணம் என்றால் குறித்த படையை தாக்கி இருக்க வேண்டும்.

பள்ளியில் தொழுபவர்களையும், தாயின் வயிற்றில் இருந்த சிசுக்களையும் தாக்குவது என்ன நியாயம். இப்படியான பொய்க் காரணத்தை கூச்சமில்லாமல் எப்படி இவரால் எழுத முடிகின்றது? . ஈபிடீபி, ராசிக் குழு  போன்ற தமிழ் படைகள்  புலிகளுக்கு எதிராக இயங்கினவே, அப்படியானால், ஏன் புலிகள்

தமிழர்களைத் தாக்கவில்லை? தமிழருக்கு ஒரு நீதி, முஸ்லிம்களுக்கு இன்னொரு நீதியா? பார்த்தாலே புரிகின்றது இவர் எழுதியுள்ளது பச்சைப் பொய் என்பது.

குறிப்பு : இங்கே ''ராசிக் குழு'' எனக் குறிப்பிடப் பட்டுள்ளதையும் இந்த வேங்கையார் முஸ்லீம் என்று சொல்லிவிடுவாரோ தெரியவில்லை!

(பிரேமதாச) அமைச்சரவையில் இருந்த முஸ்லீம்களை அரபு நாடுகளுக்கு அனுப்பியதாக சொல்லி தொடர்ந்து சொல்லப்படும் கருத்தில் எந்த உண்மையும் இல்லை. அப்படி நடைபெற்றிருந்தால் சரியான தகவல்களை பெயர் விவரங்களுடன் தர வேண்டும்.

முஸ்லீம்களை தாக்கியதட்கும், வெளியேற்றியதட்கும் புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்கள் என்பதில் என்ன பயன்? அது ஒரு தற்காலிக நாடகம் மட்டுமே.முஸ்லீம்கள் எல்லாவற்றையும் இழந்த பின்னர் ஒரு தற்காலிக நாடகத்தால் முஸ்லீம்களுக்கு நல்லது எதுவும் நடந்து விட்டிருக்கவில்லை என்பது வேங்கயாருக்கு தெரியுமா? மன்னிப்பு கேட்கும் நாடகத்தை நடித்து முடித்த பின்னர்தானே . மீண்டும் ஒரு தடவை  புலிகள் மூதூரில் முஸ்லீம்களை கொன்று குவித்தார்கள்! (அடுத்த தடவை முஸ்லீம்களை இன்னொரு இடத்தில் கொல்ல, இலங்கை ராணுவம் புலிகளை விட்டு வைத்திருக்கவில்லை)

இதற்கு என்ன சொல்லப் போகின்றார் வேங்கையார்?

வேங்கையார் வேண்டுமென்றால் விஷயம் தெரியாத தமிழ்நாட்டு அப்பாவி முஸ்லீம்களை ஏமாற்றலாம் என நினைத்துக் கொண்டு எதையாவது எழுதட்டும், ஆனால் இலங்கையில் இவர் பருப்பு வேகாது..!!

5 comments:

  1. வேங்கையாருக்கு நல்ல செருப்படி கொடுத்திருக்கிறார் கட்டுரையாளர் .Well done
    Meeraan

    ReplyDelete
  2. இலங்கை முஸ்லிம்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளினால் பட்ட இன்னல்கள், உயிரிழப்புகள் போன்றவற்றை தமிழக முஸ்லிம்கள் இன்றுவரை அறியாமல் இருப்பது, மிகவும் வேதனை.

    தமிழ்ப் பயங்கரவாதிகளின் இருட்டடிப்பு ஊடகங்கள், உண்மை நிலைய அறிய விடாது கச்சிதமாக செயல்பட்டிருக்கின்றன.

    தமிழக முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள். ஜனாதிபதி கொடும்பாவி எரிப்பு, இலங்கைத் தேசிய கொடி எரிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

    தமிழ்ப் பயங்கரவாதிகள் முஸ்லிம்களுக்குச் செய்த அட்டூழியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள தமிழக முஸ்லிம்கள் விரும்பினால், TNTJ விடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. புலி இப்ராஹீமுக்கு எதிராக இத்தனை குறிப்புகள் பதியப்பட்டிருப்பது, மக்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்கின்றார்கள் என்பதனைக் காட்டுகின்றது.
    தூய இஸ்லாமிய மார்க்கம் உட்பட எல்லா விடயங்களிலும் மக்கள் விழிப்புடன் இருந்தால் எவ்வளவு நல்லது.

    புலிகளின் காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகளின் பின்னர்தான் முஸ்லிம் ஊர்காவல் படை அமைக்கப் பட்டது என்ற
    விடயத்தையும் சுவைர் மீரானின் பதிலடி கட்டுரையில் சேர்த்து பிரசுரித்தால் அது முழுமையாக இருக்கும்.



    புலிகள் தொடர்பான சரியான நிலைப்பாட்டை எடுத்து, அதனை பகிரங்கமாக அறிவித்த பெருமை P ஜெய்னுலாப்தீன் TNTJ இற்கு சாரும்.
    அவர்களுக்கு பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லீம்கள் சார்பில் நன்றிகளும், பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  4. கட்டுரையாசிரியர் சுவைர் மீரான் கவனத்திற்கு,

    அற்புதன் என்ற அற்புதராஜா அவர்கள் தினமுரசு பத்திரிகையில் எழுதிய
    ''துரையப்பா முதல் காமினி திசாநாயக்க வரை'' என்ற ஈழப் போராட்ட வரலாற்றுத் தொடரில்
    கடாபி குறித்தும் எழுதியிருந்தார். கடாபி ஒரு முஸ்லிம் அல்ல. ஆரம்ப கால போராளிகளுக்கு 1970 - 80 களின்
    (பாலஸ்தீன் உட்பட) முஸ்லிம் போராட்ட, புரட்ச்சி குழுக்களுடன் தொடர்புகள் இருந்தன. இதன் ஒரு விளைவாகவே
    கடாபி என்ற பெயர் சூட்டப் பட்டது. கடாபி முஸ்லிம் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.