தேசத்தின் மனச்சாட்சிக்கான நீடித்த குரல் இம்தியாஸ் - பேராசிரியர் GL பீரிஸ்
அவரது அரசியல் வாழ்க்கையின் கணிசமான காலகட்டத்தில் நான் அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். அவரது அசைக்க முடியாத நேர்மையை நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். பாராட்டுக்கள் அவரை ஒருபோதும் தலைக்கனம் கொள்ளச் செய்ததில்லை. தனது கொள்கைகளை விட்டுக் கொடுப்பதை விட> மிகவும் கவர்ச்சிகரமான சன்மானங்களை பல சந்தர்ப்பங்களில் அவர் நிராகரித்திருக்கிறார். தற்காலிக ஆசைகள் மற்றும் சலுகைகளுக்கு அடிபணியாமல்> அவரது மனசாட்சியே அவருக்கு வழிகாட்டியாக எப்போதும் இருந்திருக்கிறது.
அவர் நம்பும் கொள்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு முழுமையானது மற்றும் மாறாதது. இதற்கு ஒரு உதாரணம் பலஸ்தீன தேசம். விசித்திரமான உலகில் நீதி மற்றும் சமத்துவத்திற்கான பலஸ்தீனர்களின் உரிமையை> தனது முழு ஆளுமையின் பலத்துடன் அவர் ஆதரித்து வந்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அவரது உரைகள் மூலம் அவரது சிந்தனையின் பல பரிமாணங்கள் பிரகாசிக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள உரைகள்> அரசியல் மற்றும் சமூக ரீதியாக பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன. கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த உரைகள்> அவரது ஆளுமையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கின்றன. இந்தத் தலைப்புகளில் பலவும் தற்போதைய காலகட்டத்தில் இலங்கை சமூகத்தின் முன்னுரிமைகளுடன் உடனடித் தொடர்பைக் கொண்டுள்ளன.
நமது நாட்டில் அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் ஜனநாயகமின்மை குறித்து அவர் நுண்ணறிவுடன் எடுத்துரைக்கிறார். இது ஒரு துடிப்பான பங்கேற்பு கலாச்சாரம் எதிர்நோக்கும் முக்கியமான சவால்களில் ஒன்றாகும். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் விதிகள் மற்றும் அவை அடிப்படை சிவில் உரிமைகளை எவ்வாறு இல்லாதொழிக்கின்றன என்பதையும் அவர் உணர்வுபூர்வமாகவும்> கூர்மையாகவும் ஆராய்ந்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒரு விடயம் கல்வி முறைமை சீர்திருத்தம் மற்றும் கல்விக்கும் வாழ்வாதாரங்களுக்கும் இடையே அதிக தொடர்பை ஏற்படுத்துவதன் அவசியம் ஆகும். இம்தியாஸ் இந்தப் பகுதியில் உள்ள சிக்கல்களை உறுதியாக எடுத்துரைக்கிறார்.
கல்வி நியாயமான முறையில் எதிர்பார்ப்புகளின் எல்லையை விரிவுபடுத்துகிறது. இதில் ஏற்படும் ஆழ்ந்த அதிருப்தி> நமது தேசிய அனுபவம் தெளிவாகக் காட்டுவது போல> சமூக அமைப்பின் அடித்தளத்தை அச்சுறுத்தும் அளவுக்கு அமைதியின்மைக்கு வழிவகுக்கிறது.
ஜனநாயக நிறுவனங்களின் அடிப்படையாகப் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை இம்தியாஸ் விளக்கும்போது> சமூகத்திலுள்ள கூர்மையான பார்வையாளர்கள் அனைவரின் மனதிலும் அவர் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார். உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளைத் தாண்டி இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்குவதன் அவசியத்தை அவர் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார்.
அவரது ஒரு உரை> இன மற்றும் மத சமூகங்களுக்கிடையேயான துருவப்படுத்தல் மற்றும் பிரிவினைக்கு ஒரு மாற்று மருந்தாக 'அரகலய' வின் அசாதாரண சக்தியைப் பற்றி பேசுகிறது. இந்த உரை நெகிழ்ச்சியான வார்த்தைகளில் அமையப் பெற்றுள்ளது.
மொத்தத்தில்> இது நமது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பன்முக ஆளுமையின்> நாட்டின் உயரிய சட்டமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் ஒரு தொகுப்பாகும். ஆனந்தா கல்லூரியில் மாணவராக இருந்த காலத்தில் சிங்களப் பேச்சுக்கலைக்காக மதிப்புமிக்க விருதுகளை வென்ற> விதிவிலக்கான திறமை வாய்ந்த பேச்சாளரான இம்தியாஸ்> நமது தேசத்தின் கூட்டு மனசாட்சியைத் தட்டியெழுப்புவதில் நீடித்த பங்களிப்பைச் செய்துள்ளார்.
இந்த நூல்> குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்தில் ஒரு பயனுள்ள நோக்கத்திற்காக வெளி வருகிறது. இந்த வெளியீடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
- பேராசிரியர் GL பீரிஸ் -
Post a Comment