Header Ads



உலகம் எப்படி பார்க்கும்..?

 
- Ash-Sheikh Agar Muhammed -


ஒரு கசப்பான உண்மை!


✍உங்களது மரணத்திற்குப் பிறகு உலகம் உங்களை எப்படி பார்க்கும்; உங்கள் விஷயத்தில் உலகத்தார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிய ஆசைப்பட்டால் மற்றொருவர் மரணமான பின் அவர் தொடர்பில் உலகத்தார் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதைப் பாருங்கள்.  


✍மரணித்தவரை அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கூட  காலப் போக்கில் எப்படி மறந்துவிடுகின்றார்கள்; அவர்களின் உலக சோலிகள் அவர்களை எப்படி அவரது நினவை மறக்கடிக்கச் செய்கின்றன என்பதை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள்.


✍இதே நிலைதான் உங்ளுக்கும் ஏற்படும். நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்தோரும் அப்படி உங்களை நேசிதோரும் கூட உங்களை சிறிது காலத்தில் மறந்துவிடுவார்கள்; உங்களை நினைவு கூரவோ உங்களை நினைத்து கவலைப்படவோ அவர்களுக்கு நேரமிருக்காது.


✍இந்த உண்மையை உணர்ந்து உங்களது முழு வாழ்வையும் அல்லாஹ்வுக்காக அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது; பொருத்தமானது. 


💗 ஏனென்றால் அவன் உங்களை மறக்கப் போவதில்லை; கைவிடப் போவதுமில்லை; அவனுடனான உறவை பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அவன் நிலையானவன்; நித்திய ஜீவன். எனவே அவனது அன்பும் அருளும் அறுபடாமல் என்றும் நிலைத்திருக்கும்.

No comments

Powered by Blogger.