Header Ads



ஜாமிஆ நளீ­மிய்யாவின் பொன்­விழா - முதல்வர் அகார் முஹம்மத் கூறும் முக்கிய விடயங்கள்


ஜாமிஆ நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­நி­லை­யத்தின் பொன்­விழா மற்றும் 11ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா எதிர்­வரும் 24.06.2023 சனிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள பண்­டா­ர­நா­யக்கா ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்­நி­கழ்வை முன்­னிட்டு ஜாமிஆ நளீ­மிய்­யாவின் முதல்­வ­ரும்­ இஸ்­லா­மிய அறி­ஞ­ரு­மான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்­க­ளுடன் மேற்­கொண்ட நேர்­கா­ணலை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­கின்றோம்.


Q: ஜாமிஆ நளீ­மிய்யா பொன்­விழாக் காணும் இந்த சந்­தர்ப்­பத்தில் பொன் விழா மற்றும் 11ஆவது பட்­ட­ம­ளிப்பு நிகழ்வின் முக்­கி­யத்­துவம் குறித்து சுருக்­க­மாக கூற முடி­யுமா?


முதல்வர்: இது ஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த நிகழ்­வாகும். ஏனெனில், ஜாமிஆ நளீ­மிய்­யா­வின்­ கல்விப் பய­ணத்தில் அரை நூற்­றாண்டு காலத்தை பூர்த்தி செய்­கின்ற சந்­தர்ப்பம் இது. அதனைக் கொண்­டா­டு­வதில் பேரு­வகை அடை­கின்றோம். அவ்­வாறே கடந்த 50 வரு­டங்­களில் எமது நிறு­வ­னத்தில் பட்டம் பெற்று பொது­வாக பொதுக் கல்வித் துறை­யிலும், ஏனைய துறை­க­ளிலும் குறிப்­பாக இஸ்­லா­மிய கல்வித் துறை­யிலும் பட்­ட­தா­ரிகள் நிகழ்த்­திய சாத­னைகள், அடை­வுகள் பல. அவற்­றுக்கு அடித்­த­ள­மிட்ட கல்வி நிறு­வனம் என்ற வகையில் ஜாமிஆ நளீ­மிய்யா 50ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்­டா­டு­வதில் பெருமை கொள்­கி­றது. இச்­சந்­தர்ப்­பத்தில் ஏழு தொகுதி பட்­ட­தா­ரி­க­ளுக்­கான பட்­ட­ம­ளிப்பு விழா இடம்­பெ­ற­வுள்­ள­மை­யி­னாலும் இந்த நிகழ்வு முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.


இவ்­வா­றா­ன­தொரு பாரிய நிகழ்வை கல்­லூரி வளா­கத்­திற்கு வெளியில் குறிப்­பாக பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் (BMICH) நடத்­து­வது இதுவே முதல் தட­வை­யாகும். இதுவும் நிகழ்வின் முக்­கி­யத்­து­வத்தை பிர­தி­ப­லிக்­கி­றது. இதற்கு முன்னர் 1986ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் “Muslims of Sri Lanka: Avenues to Antiquity” எனும் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு குறித்த நூல் வெளி­யீட்டு நிகழ்வை நடத்­தி­யி­ருந்தோம். குறித்த அந்த நிகழ்வு அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன அவர்­களின் பங்­கேற்­புடன் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.


Q: பொன்­வி­ழாவை மைய­மாகக் கொண்டு வேறு சிறப்பு நிகழ்ச்­சி­களை நடத்த திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றீர்­களா?


முதல்வர்: எமது உயர் கல்வி நிறு­வனம் நிலை­நி­றுத்­தி­யுள்ள கல்விப் பாரம்­ப­ரி­யத்தை (Legacy) மேலும் மேம்­ப­டுத்தும் வகை­யிலும் குறிப்­பாக இஸ்­லா­மியக் கல்­வியை மேம்­ப­டுத்தும் வகை­யிலும் விஷேட நிகழ்ச்­சிகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. பொன்­விழா நிகழ்­வு­களைத் தொடர்ந்து, பழைய மாண­வர்­களின் (ராபி­ததுந் நளீ­மிய்யீன்) ஒன்­று­கூ­டலும் கல்­லூரி வளா­கத்தில் நடை­பெறும். இது பழைய மாண­வர்கள் மீண்டும் இணை­வ­தற்கும் தமது அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்கும் நிறு­வ­னத்தின் பழைய மாணவர் வலை­ய­மைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான சந்­தர்ப்­ப­மாக அமையும் என எதிர்­பார்க்­கின்றோம்.


மேலும், ஜாமி­ஆவின் முன்னாள் பணிப்­பா­ளரும் நாட­றிந்த புத்­தி­ஜீ­வி­யா­கவும் திகழ்ந்த கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்­களின் “கல்வித் துறைப் பங்­க­ளிப்பும் ஆய்வுப் பணி­களும்” என்­ற­ நூலும் வெளி­யிட்டு வைக்­கப்­ப­ட­வுள்­ளது.


பொன் விழா­வை­யொட்டி ஜாமிஆ நளீ­மிய்­யாவின் ஐந்து தசாப்த கல்விப் பய­ணத்தை மையப்­ப­டுத்தி காலம் வேண்டி நிற்கும் பல கருப்­பொ­ருள்­களில் தொடர் ஆய்­வ­ரங்­குகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. ஆய்வுக் கட்­டு­ரை­களும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன.


Q: பொன்­விழா நிகழ்ச்சி நிரல் பற்றி சுருக்­க­மாக கூற முடி­யுமா?


முதல்வர்: பொன்­விழா மற்றும் பட்­ட­ம­ளிப்பு விழாவின் சாரத்தைப் பிர­தி­ப­லிக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் அமையும்.


அதி­தி­களின் உரைகள், சிறப்­பு­ரை­களுடன் ஜாமிஆ நளீ­மிய்யா கடந்து வந்த பாதை, அதன் அடை­வு­கள் ­கு­றித்த ஆவணப் படம் (Video Documentary) திரை­யி­டப்­படும். 50 ஆண்டு நிறை­வை­யிட்டு நினைவு மலரின் வெளி­யீட்டு நிகழ்வும் அதன்­போது இடம்­பெறும். சமூ­கத்தில் முக்­கிய பிர­மு­கர்கள் சில­ரி­ட­மி­ருந்து நாம் பெற்­றுக்­கொண்ட வீடியோ பதிவுகள் சில நிமி­டங்கள் கொண்ட சுருக்­க­மான காணொளித் தொகுப்­பாக திரை­யி­டப்­படும். குறித்த பிர­மு­கர்கள் வழங்­கிய முழு­மை­யான காணொ­ளிகள் நளீ­மிய்­யாவின் உத்­தி­யோ­க­பூர்வ Face Book, YOUTUBE தளங்­களில் பதி­வேற்­றப்­படும் என்­ப­தையும் இங்கு குறிப்­பிட விரும்­பு­கிறேன்.


Q: ஜாமிஆ நளீ­மிய்யா, அடிப்­ப­டையில் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்­கான ஒரு கலா­பீடம் என்­பது அனை­வரும் அறிந்த ஓர் உண்மை. கடந்த காலங்­களில் நளீ­மிய்­யாவின் முக்­கிய நிகழ்­வு­களில் சர்­வ­தேச மட்ட இஸ்­லா­மிய அறி­ஞர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக பங்­கேற்­றனர் என்­பதை நாம் அறிவோம். ஆயினும் இம்­முறை நிகழ்ச்சி நிரலில் குறிப்­பி­டத்­தக்க இஸ்­லா­மிய அறி­ஞர்கள் எவரும் இடம்­பெ­ற­வில்லை என்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்­பு­கி­றீர்கள்?


முதல்வர்: உண்­மைதான். கடந்த காலங்­களில் ஜாமி­ஆவின் நிகழ்­வு­களில் சர்­வ­தேச மட்ட இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் பங்­கேற்பு அதி­க­மாக இருந்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆயினும் பிற்­பட்ட காலங்­களில் சம­கால சூழ­மை­வு­களை கவ­னத்­திற்­கொண்டு உள்­நாட்டு அறி­ஞர்­க­ளையும் புத்­தி­ஜீ­வி­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்தி நிகழ்ச்­சி­களை ஒழுங்­கு­செய்து வரு­கின்றோம். எமது சமூ­கத்­திற்கு செய்­திகள் சொல்­லப்­ப­ட­வேண்­டிய தேவை இருப்­ப­து­போ­லவே தேசிய மட்­டத்­திலும் நாட்டு மக்­க­ளுக்கு நம்மைப் பற்­றிய உண்­மை­யான செய்­தி­களை சொல்ல வேண்­டி­யது காலத்தின் தேவை­யாக மாறி­யி­ருக்­கி­றது என்­பதை நீங்கள் அறி­வீர்கள். அந்த வகை­யில்தான் உல­மாக்கள், சமூகத் தலை­மைகள், முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் முத­லா­னோரின் பங்­கேற்­போடு தேசிய பல்­க­லைக்­க­ழக மட்ட பேரா­சி­ரி­யர்­க­ளையும் அர­சியல் தலை­வர்­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்தி இம்­முறை நிகழ்ச்­சிகள் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.


ஜாமிஆ ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் நாட்­டி­னதும் சமூ­கத்­தி­னதும் எல்லா மட்ட பிர­தி­நி­தித்­து­வங்­களும் உள்­வாங்­கப்­பட்டே எமது நிகழ்­வுகள் நடை­பெற்­றுள்­ளன என்­ப­தையும் இங்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். ஏனெனில் ஜாமிஆ என்­பது இஸ்­லா­மிய கலை­களைப் போதிக்­கின்ற ஒரு கலா­பீ­ட­மாக இருப்­பது போலவே மானி­ட­வியல் கலை­க­ளையும் கற்­பித்து நாட்­டுக்கு தேவை­யான துறைசார் நிபு­ணர்­க­ளையும் வள­வா­ளர்­க­ளையும் உரு­வாக்­கு­கின்ற ஒரு கலா­பீ­ட­மா­கவும் இருக்­கின்­றது. மேலும், பாகு­பா­டு­க­ளுக்கும் வேறு­பா­டு­க­ளுக்கும் அப்பால் வேற்­று­மையில் ஒற்­றுமை கண்டு அனைத்து தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைத்து பய­ணிக்கும் ஒரு நிறு­வ­ன­மா­கவும் விளங்­கு­கின்­றது என்­பதை எல்­லோரும் அறிவர்.


Q: நிகழ்ச்சி நிர­லுக்­கான அதி­திகள் தெரிவு பற்றி…


முதல்வர்: ஜாமி­ஆவின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் கண்­டிப்­பாக முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய அறி­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள், சமூகத் தலை­வர்கள் தேசிய மட்­டத்­திலும் சமூக மட்­டத்­திலும் பெருந்­தொ­கை­யானோர் இருக்­கி­றார்கள். ஆயினும் குறிப்­பிட்ட நேரத்தில் நிகழ்ச்­சி­களை நிறைவு செய்யும் வகையில் செறி­வான நிகழ்ச்சி நிரலை வகுப்­ப­தற்கு நாம் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ளோம். இதன்­கா­ர­ண­மா­கவே முக்­கி­யத்­துவம் வாய்ந்த பலரை அழைப்­பி­த­ழிலும் நிகழ்ச்சி நிரலிலும் உள்வாங்க முடியாமல் போனது. இதனையிட்டு நாம் பெரிதும் கவலைப்படுவதோடு அதற்காக எமது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Q: பொன்விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளுக்கு நேரடியாக சமுகமளிக்க முடியாதவர்கள் அதனை ஒன்லைன் நேரலை மூலமாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் உள்ளனவா?


முதல்வர்: வரையறுக்கப்பட்ட ஆசன வசதி மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக எல்லோரையும் நிகழ்வுக்கு நேரடியாக அழைக்க முடியாது என்பது யதார்த்தம்.இருப்பினும், நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள அனைவரது பங்கேற்பையும் ஆதரவையும் நாம் மதிக்கிறோம். எமது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் விழா நிகழ்ச்சிகளை நேரலையாக (Live Streaming) காண்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலிருந்தபடியே பொன்விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளைப் பார்வையிட முடியும். – Vidivelli

No comments

Powered by Blogger.