Header Ads



பாத்திமாக்களின் படுகொலைகளை நிறுத்த இனியாவது முன்வாருங்கள்


- எம்.எம்.எம். ரம்ஸீன் -


பாத்­திமா முனவ்­வரா (22 வயது) மூன்று சகோ­த­ரர்­களைக் கொண்ட குடும்­பத்தில் இளை­ய­வ­ராவார். இவரின் குடும்பம் உடு­நு­வர – மீவ­ல­தெ­னிய பகு­தியில் வசித்து, கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்பு இப்­ப­கு­தியில் குடி­யே­றி­யுள்­ளது.


பாத்­திமா முனவ்­வரா சிங்­கள மொழி­மூலம் கண்டி லும்­பிணி மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயின்றார். இவர் சிங்­கள மொழியில் நன்கு தேர்ச்சி பெற்­றி­ருந்தார். இவரின் தந்தை முச்­சக்­க­ர­வண்டிச் சார­தி­யாவார். இவரின் சகோ­த­ரர்கள் வாகனம் திருத்­துதல் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களில் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர்.


பாட­சாலைக் கல்­வியை நிறைவு செய்த முனவ்­வ­ரா­வுக்கு தாதியர் பணி மீது அதீத ஆர்வம் காணப்­பட்­டது. அவரின் தாயார் நீண்டகா­ல­மாக பாரி­ச­வாத நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதும் இதற்­கொரு கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம். இவர் தாதியர் பயிற்­சியை பெற்­றுக்­கொண்­ட­துடன் வீட்டில் தனது அன்புத் தாயாரை கவ­னித்து வந்தார்.


இதற்­கி­டையில் தாதியர் சேவை­யுடன் தொடர்­பு­டைய பார்­ம­ஸியில் பணி­யாற்றும் வாய்ப்­பொன்று கிடைத்­த­மையை முனவ்­வரா விரும்பி ஏற்றுக் கொண்டார். இதனால் கடந்த நான்கு மாதங்­க­ளாக அவர் கெலி­ஓ­யாவில் அமைந்­துள்ள குறித்த பார்­ம­ஸியில் பணி­யாற்றி வந்தார்.


அதிர்ச்சி

களுத்­துறையில் 16 வயது மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்­பவம் நாட்டு மக்கள் மத்­தியில் அதிர்ச்­சி­யையும் கவ­லை­யையும் எற்­ப­டுத்­தி­யி­ருந்த தருணம். இச்­சம்­பவம் நடை­பெற்று சில தினங்கள் மட்டும் கடந்து விட்ட நிலையில், கண்டி மாவட்­டத்தில் அமைந்­துள்ள வெலி­கல்ல, எல்­பி­டிய கிரா­மத்தில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தான் பணி­பு­ரியும் பார்­ம­ஸிக்கு வேலைக்குச் செல்­வ­தாக அன்புத் தாயா­ரிடம் விடை­பெற்றுச் சென்ற பாத்­திமா முனவ்­வரா பார்­ம­ஸியை சென்­ற­டை­ய­வில்லை. இது தான் முனவ்­வ­ராவின் சோக கதையின் ஆரம்பம். இது நாட்­டுக்கு மற்­று­மொரு அதிர்ச்­சி­யையும் சோகத்­தையும் கொண்டு வரும் என்று யாரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.


12 ஆம் திகதி சம்­பவ தினம்

சம்­பவ தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் அதி­காலை 4 மணி முதல் கடும் மழை பெய்து கொண்­டி­ருந்­தது. இம்­ம­ழை­யினால் கம்­பளை, வெலி­கல்ல, எல்­பி­டிய, கலு­க­முவ, உடு­நு­வர உட்­பட பல பகு­தி­க­ளிலும் இருள் சூழ்ந்த கால­நிலை நிலவிக் கொண்­டி­ருந்­தது.


அன்­றைய தினமும் வழமை போல் அதி­கா­லையில் தூக்கம் கலைந்து எழும்­பிய முனவ்­வரா தொழுது விட்டு குளி­ரையும் பொருட்­ப­டுத்­தாமல் தனது தாயா­ருக்கு செய்ய வேண்­டிய பணி­வி­டை­களை செய்தார். அதன் பின்னர் சோறு மற்றும் கீரைக் கறியை சமைத்து எடுத்துக் கொண்டு வேலைக்குப் புறப்­படத் தயா­ரா­கிறார்.


மழை விடாமல் பெய்து கொண்­டி­ருப்­பதால் குடை­யொன்றை பிடித்துக் கொண்டு காலை 8.15 அளவில் தன்னை நிழலாய்த் தொடரும் ஆபத்தை அறி­யாத நிலையில் வெலி­கல்ல நகரம் வரை செல்லும் சுமார் 2 கிலோ­மீற்றா தூரப் பாதையில் முனவ்­வரா நடக்க ஆரம்­பிக்­கின்றாள். மழைக்கு மத்­தியில் வேக­மாக முனவ்­வ­ராவின் நடை தொடர்­கின்­றது.

இக்­காட்சி முனவ்­வ­ராவின் வீட்டில் இருந்து சுமர் 100 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் சீ.சீ.டி.வி கெம­ராவில் தெளி­வாகப் பதி­வா­கி­யுள்­ளது. ஆனால் அதிர்ச்­சிக்­கு­ரிய விடயம், பள்­ளி­வா­ச­லுக்கு அடுத்­த­தாக சுமார் 600 மீற்றர் தொலைவில் வீடொன்றில் பொருத்­தப்­பட்­டுள்ள சீ.சீ.டி.வி கெம­ராவில் முனவ்­வரா நடந்து செல்லும் காட்சி பதி­வா­காமல் முன்­னவ்­வரா மறைந்து போகின்றாள்.


கெலி­ஓயா நகரில் அமைந்­துள்ள முனவ்­வரா பணி­பு­ரியும் பார்­ம­ஸியின் உரி­மை­யாளர் ஆர்.எம். சியாத் மட­வளை பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­டவர். அவர் வழ­மை­யாக ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தாம­த­மாகி பார்­ம­ஸிக்கு வரு­வதால் முன்ை­னய தினம் பார்­மஸி சாவியை முனவ்­வ­ரா­விடம் ஒப்­ப­டைத்து விட்டுச் செல்­வது வழக்கம். சம்­பவம் இடம்­பெற்ற தினமும் பார்­ம­ஸியின் சாவி முனவ்­வ­ரா­விடம் கைவசம் இருந்­தது.


சம்­பவ தினம் முனவ்­வரா காலை 11 மணி வரை பார்­ம­ஸியை வந்து சேரவில்லை என்ற தகவல் பார்­ம­ஸியின் உரி­மை­யா­ளரால் முனவ்­வ­ராவின் சகோ­தரன் எம்.ஜே.எம். இம்­ரா­னுக்கு தொலை­பே­சியில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கொழும்பில் இருந்த இம்ரான் உட­ன­டி­யாக தனது தாயா­ருடன் தொடர்பு கொண்­டுள்ளார். எனினும், அவரின் தாயா­ருக்கு அப்­போது எதுவும் தெரிந்­தி­ருக்­க­வில்லை.


இந்­நி­லையில், முனவ்­வ­ராவின் தொலை­பே­சிக்கு அழைப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அவரின் தொலை­பேசி செய­லி­ழந்து காணப்­பட்­டதால் பதில் எதுவும் கிடைக்­க­வில்லை. இதனால் முனவ்­வரா பற்­றிய எது­வித தக­வல்­க­ளையும் சம்­பவ தினம் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. முனவ்­வ­ரா­வுக்கு என்ன நடந்­தது? முனவ்­வரா எங்கே போனாள்? என்­ப­தெல்லாம் சம்­பவ தினம் முதல் விடை­தெ­ரி­யாத கேள்­வி­க­ளாக மாறின.


முனவ்­வரா மீது எது­வித குற்­றச்­சாட்­டுக்­களும் சந்தேகமும் இருந்­த­தில்லை. அமை­தியும் ஒழுக்­கமும் கொண்­டவர். பிறரைப் பற்றி கதைப்­ப­வ­ரல்லர். எப்­போதும் தனது கரு­மங்­களில் கருத்தாய் இருப்­பவர் என்று முனவ்­வ­ராவைப் பற்றி பிர­தேச மக்கள் மத்­தியில் மிகுந்த மிக நல்­ல­பிப்­பி­ராயமே காணப்­ப­ட்டது.

முனவ்­வரா பணி­யாற்­றிய பார்­மஸி உரி­மை­யாளர்

முனவ்­வரா கெலி­ஓயா நகரில் அமைந்­துள்ள பிர­பல பார்­ம­ஸி­யொன்றில் பணி­யாற்றி வந்தார். இதனால், கெலி­ஓயா நகரில் பலரும் அவரை நன்­க­றிந்­தி­ருந்­தனர்.

“முனவ்­வரா மிகவும் அமை­தி­யா­னவர். அவர் மார்க்­கப்­பற்று நிரம்­பிய யுவ­தி­யாவார். அவர் யாரு­டனும் நேருக்கு நேர் நின்று கதைக்க மாட்டார். அவர் நேரத்­திற்குத் தொழு­கைக்கு செல்வார். தொழு­வ­தற்குத் தேவை­யான காலு­றை­க­ளையும் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வருவார். சம்­பவ தினமும் எடுத்துக் கொண்டு வந்­தி­ருந்தார் என்­பதை அவரின் சட­லத்­துடன் மீட்­கப்­பட்ட பொருட்­களை நோக்கும் போது அறிந்து கொள்ள முடி­கின்­றது” என்று பார்­மஸி உரி­மை­யாளர் ஆர்.எம். சியாத் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார்.


முனவ்­வரா வாழ்க்­கையின் மேடு, பள்­ளங்­களில் பய­ணித்துக் கொண்­டி­ருந்­தவர். இம்­மேடு பள்­ளங்கள் மீதான அவரின் பயணம் முனவ்­வ­ராவை பிழை­யான முடி­வு­களின் பக்கம் இட்டுச் செல்­ல­வில்லை. காரணம் முனவ்­வரா சிறு வயது முதல் வாழ்­வியல் மற்றும் சமூக யதார்த்­தங்கள் மீது ஆழ­மான புரி­தலைக் கொண்­டி­ருந்தார். அவர் தனது வாழ்வின் சிக்கல்களில் இருந்து வெளி­வர துடித்தார். இதற்­காக கடும் முயற்சி எடுத்தார். ஆனால், அவரை சமூகம் கண்டு கொள்­ள­வில்லை என்­பது மிகக் கவ­லைக்­கு­ரி­யது. இது போன்ற எத்­த­னையோ முனவ்­வ­ராக்கள் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சமூக நிறுவனங்களின் பார்வை இவர்களின் பக்கம் திரும்ப வேண்டும்.


உயர்ந்த மினாராக்களை கட்டி அழகு பார்த்துக் கொண்டிருப்பவர்களும் வேறுபல துறைகளில் கோடிக்கணக்கில் கொட்டிக் கொண்டிருப்பவர்களும் முனவ்வராக்கள் பக்கம் சிந்திக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என்ற உண்மையை சொல்லியாக வேண்டும்.


எமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிக்கும் முனவ்வராக்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த உலமாக்கள், சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகங்கள் முன்வர வேண்டும். சமூகப் பிரச்சினைகளை வாரத்திற்கொரு முறை நடைபெறும் உணர்ச்சியூட்டும் குத்பா பிரசங்கங்களால் மட்டும் தீர்த்து விட முடியாது. சமூகப் பிரச்சினைகள் மக்கள் மயப்படுத்தப்படுவது போல் தீர்வுகளும் இனங்காணப்பட்டு செயலுருவாக்கம் பெற வேண்டும்.


முனவ்வராவின் சம்பவம் முஸ்லிம் சமூகத்திற்கு பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இது வெறுமனே ஒரு படுகொலைச் சம்பவமாக மாத்திரம் மாறிவிடக்கூடாது. இதில் இருந்து சமூகத்தில் திருப்புமுனைகள் ஏற்பட வேண்டும்.


இச்சம்பவத்தின் சந்தேக நபர் தனது ஓடியோவில் வெளியிட்ட போதைப்பொருள் விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் சிந்தித்து செயற்படாத வரை முஸ்லிம் சமூகம் இப்பிரச்சினைகளில் இருந்து ஒருபோதும் வெளிவர போவதில்லை.


முஸ்லிம் சமூகம் எம்மில் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை புனருத்தாரணம் செய்வதற்கான ஒரு நிலையத்தையாவது நிறுவிக் கொள்வதற்கு முடியாத நிலையில் உள்ளது என்ற உண்மையை உணர்வோமாக.


இந்த யதார்த்தத்தை உணர்ந்து சமூக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உரிய திட்டமிடல்களை முன்னெடுத்து இப்புனருத்தாரண நிலையங்களை முஸ்லிம் பிரதேசங்களில் விரைவில் உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்.- Vidivelli

No comments

Powered by Blogger.