Header Ads



500 ஜனாஸாக்களையும், அதன் காணியையும் பாதுகாப்போம் - அபகரிக்க முயலும் பிக்குவின் சதியை முறியடிப்போம்


- ஏ.ஆர்.ஏ. பரீல் -

நாட்டில் சர்­வ­மதத் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எத்­தனை முயற்­சிகள் மேற்­கொண்­டாலும் இன­வா­தத்தில் ஊறிப்­போ­யுள்ள சில பெளத்த மதத் தேரர்கள் நாட்டின் பல பகு­தி­களில் முஸ்­லிம்­களின் காணி­களை அப­க­ரிக்கும் முயற்­சி­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அப்­ப­கு­தி­களை சிங்­கள மய­மாக்கும் முயற்­சியே இது. திடீ­ரென புத்தர் சிலைகள் ஆங்­காங்கே தோற்­றம் பெறு­கின்­றன. பாது­காப்பு பிரி­வி­னரும் அரச அதி­கா­ரி­களும் இதற்குத் துணை நிற்­கின்­றனர்.


இவ்­வா­றான சூழ்­நி­லையில் முஸ்­லிம்­களின் மைய­வா­டி­க­ளையும் சொந்தம் கொண்­டாடி ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எமது நாட்டில் இன­வாதம் அந்­த­ள­வுக்கு மலி­ந்து போயுள்­ளது. பத­வியில் இருக்கும் அர­சாங்கம் பெளத்த தேரர்கள் சில­ரது அடா­வடித் தனங்­களை கண்டு கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

வர­லாற்றுப் புகழ் மிக்க தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் அமைந்­துள்ள கூர­க­லயில் பள்­ளி­வாசல் இது­வரை காலம் அமைந்திருந்த காணி தொல்­பொருள் பிர­தேசம் எனக் கூறி அப்­ப­குதி பெளத்த தேரர் ஒரு­வரால் அப­க­ரிக்­கப்­பட்டு இன்று அவ்­வி­டத்தில் பிர­மாண்­ட­மான தாது கோபுரம் அமைக்­கப்­பட்டு அப்­பி­ர­தேசம் பெளத்­தர்­களின் புனித பிர­தே­ச­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அதி­கா­ரத்தில் இருந்த அர­சி­யல்­வா­தி­களின் ஒத்­து­ழைப்பு இதற்குத் துணை போயி­ருக்­கி­றது. இந் நிலையில்தான் தென் மாகாணத்திலும் இவ்வாறு முஸ்லிம்களின் காணி ஒன்றினை அபகரிப்பதற்கான சூழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


திஸ்ஸ மகா­ராம – கிரிந்த முஸ்லிம்

மைய­வா­டிக்கு ஆபத்து

இன­வா­தத்தில் ஊறிப் போயுள்ள கிரிந்த பன்­ச­லையின் தேர­ரினால் கிரிந்த முஸ்லிம் மைய­வா­டிக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. இந்தப் பன்­சலை கிரிந்த முஸ்லிம் மைய­வா­டி­யி­லி­ருந்து 500 மீட்டர் தூரத்­திலே அமைந்­துள்­ளது. பன்­ச­லையின் தலைமை குரு யட­கல சப்தா மங்­கள தேரர் ஆவார். இவர் தற்­போது சுக­யீ­ன­முற்­றி­ருப்­பதால் அவ­ருக்கு அடுத்­த­வ­ரான யட­கல வினித தேரர் பன்­ச­லையை நிர்­வ­கித்து வரு­கிறார். இந்த தேரரே முஸ்லிம் மைய­வாடிக் காணியில் 30 பேர்ச்­சஸை சட்­ட­வி­ரோ­த­மாக பிடித்துக் கொண்டு சொந்தம் கொண்­டாடி வரு­கிறார்.


கிரிந்த கிராமம்

அம்­பாந்­தோட்டை மாவட்டம் திஸ்­ஸ­ம­கா­ராம தேர்தல் தொகு­தியில் கிரிந்த கிராமம் அமைந்­துள்­ளது. இங்கு 645 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன. இங்கு வாழ்­வோரில் 99%மான­வர்கள் மலே சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். ஒரு ஜும்ஆ பள்­ளி­வா­சலும் மேலும் மூன்று பள்­ளி­வா­சல்­களும் இங்கு இயங்கி வரு­கின்­றன. முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­ய­மொன்­றும் இயங்கி வரு­கி­றது.


ஒல்­லாந்தர் இலங்­கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்­க­ளுக்கு சிங்­க­ளவர் மீது நம்­பிக்­கை­யில்­லா­ததால் இந்­தோ­னே­சி­யாவில் பட்டேவி­யா­வி­லி­ருந்து மலே சமூ­கத்­தி­ன­ருக்கு பயிற்சி வழங்கி இலங்­கைக்கு அழைத்து வந்­தனர். ஆங்­கி­லே­ய­ரினால் ஒல்­லாந்தர் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்பு அவர்கள் மலே இரா­ணு­வத்­தி­னரை வைத்துக் கொண்­டார்கள். அம்­பாந்­தோட்டை உப்பு உற்­பத்­திக்கும், யால வன ஜீவ­ரா­சிகள் சர­ணா­ல­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் பட்டே­வி­யா­வி­லி­ருந்து அழைத்து வரப்­பட்ட மலே சமூ­கத்­தி­னரே பயன்­ப­டுத்­தப்­பட்­டனர். இந்தத் தொழி­லா­ளர்கள் தங்­கு­மி­ட­மா­கவே கிரிந்த கிராமம் உரு­வாக்­கப்­பட்­டது என கிரிந்த ஜும்ஆ பள்­ளி­வாசல் முன்னாள் செய­லா­ளரும் முன்னாள் உதவி கல்விப் பணிப்­பா­ள­ரு­மான பி.ஜலால்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.


மைய­வா­டியின் வர­லாறு

கிரிந்த முஸ்லிம் மைய­வாடி காணி பல தசாப்­தங்­க­ளுக்கு முன்பு அப்துல் சலாம் எனும் ஒரு­வரின் பயன்­பாட்டில் இருந்து வந்­துள்­ளது. அவர் இக்­கா­ணியில் சேைனப் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட்டு வந்­துள்ளார். இக்­காணி அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான காணி­யாகும். இப்­ப­குதி முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­காக அவர் பயிர்ச்­செய்­கையை நிறுத்தி காணி­யை வழங்­கினார். அக்­கா­லத்தில் தேசியப் பட்­டியல் எம்.பி.யாக பதவி வகித்த மலே சமூ­கத்தைச் சேர்ந்த ஆமித் எம்.பி. அங்கு சென்று மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி காணிக்கு உறு­திப்­பத்­திரம் இருக்­கி­றதா? என்று வின­வினார். இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மாவட்ட செய­லா­ள­ருடன் கலந்­து­ரை­யாடி காணியை நில அளவை செய்­வ­தற்கு ஏற்­பாடு செய்தார். நில அளவை செய்து எல்லைக் கற்­களும் நடப்­பட்­டன. என்­றாலும் காணி உறு­தியில் மைய­வாடி எனக் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.


அத்­தோடு இக்­கா­ணியில் புசானா எனும் மலே இனத்­தவர் 15 பேர்ச் நிலத்­துக்கு மதில் கட்­டி­யி­ருந்தார். இக்­கா­ணியில் ஆங்­கி­லேயர் 1932இல் துறை­முக பங்­களா, வள்­ளங்கள் தரித்து வைக்கும் கட்­டிடம், களஞ்­சி­ய­சாலை என்­ப­ன­வற்றை நிர்­மா­ணித்­தி­ருந்­தனர். இவை அனைத்தும் சுனாமி அனர்த்­தத்தின் போது அழி­வுக்­குள்­ளா­யின.

ஒரு குளமும் இருந்­தது. சுனாமி கார­ண­மாக அக்­கு­ளமும் மணலால் நிரம்­பி­யது. குளம் மணலால் நிரம்­பி­யதால் கிரிந்த கிராம மக்­களின் வீடு­க­ளுக்கு வெள்ளம் ஏற்­படும் காலத்தில் ஆபத்து ஏற்­ப­டு­கி­றது. குளத்தின் மணலை அகற்­று­வ­தற்கும் சம்­பந்­தப்­பட்ட தேரர் அனு­மதி வழங்­கு­வ­தில்லை. குளமும் தமக்குச் சொந்­த­மா­ன­து என தேரர் வாதிக்­கிறார்.


மைய­வாடி பெகோ இயந்­திரம்

மூலம் துப்­பு­ரவு

மைய­வாடி காணி பன்­ச­லைக்கு சொந்­த­மா­னது என கூறி யட­கல வினித தேரர் கடந்த நோன்பு பெருநாள் தினத்­தன்று பெகோ இயந்­திரம் மற்றும் தனது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் ஸ்தலத்­துக்கு வந்தார். இவர் ஏற்­க­னவே மைய­வா­டியில் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­படும் போது பல தட­வைகள் எதிர்ப்­பினை வெளி­யிட்­ட­வ­ராவார்.


‘‘2022 ஆம் ஆண்டு அப்­போ­தி­ருந்த திஸ்­ஸ­ம­கா­ராம பிர­தேச செய­லாளர் மற்றும் கிரிந்த கிராம சேவை­யா­ளர்­களின் ஒத்­து­ழைப்­புடன் குறிப்­பிட்ட தேரர் போலி காணி உறு­தி­யொன்­றினை தயா­ரித்து உரிமை கொண்­டா­டியே காணியை டோசர் பண்­ணு­வ­தற்கு வருகை தந்­த­தாக’’ பள்­ளி­வாசல் பரி­பா­லன சபையின் முன்னாள் செய­லாளர் பி.ஜலால்தீன் தெரி­வித்தார்.


மைய­வாடி காணியில் 30 பேர்ச்சஸ் காணிக்கு அவர் உரிமை கொண்­டா­டி­யுள்ளார். இக்­கா­ணியில் ஜனா­ஸாக்­களும் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன என்றும் அவர் கூறினார்.

கடந்த நோன்பு பெருநாள் தினத்­தன்று மைய­வாடி காணியை டோசர் பண்­ணு­வ­தற்கு தனது சகாக்­க­ளுடன் வருகை தந்த தேரரை கிரிந்த முஸ்­லிம்கள் தடுத்து நிறுத்­தினர். பொலி­ஸாரின் தலை­யீட்­டினால் அது நடை­பெ­ற­வில்லை.


பின்பு பெரு­நா­ளை­ய­டுத்து திஸ்­ஸ­ம­கா­ராம உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் இரு தரப்­பி­ன­ரையும் அழைத்து கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடாத்­தினார். குறிப்­பிட்ட தேரர் தனது பன்­சலை நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளுடன் சமு­க­ம­ளித்­தி­ருந்தார். பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யி­னரும் ஊர் பிர­மு­கர்­களும் கூட்­டத்தில் கலந்­து­ கொண்­டி­ருந்­தனர். கைக­லப்பில் ஈடு­ப­ட­வேண்டாம் அப்­படி நடந்தால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்க வேண்­டி­யேற்­படும் என்று உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எச்­ச­ரித்தார்.

இரு தினங்­களின் பின்பு குறிப்­பிட்ட தேரர் பெகோ இயந்­திரத்தைக் கொண்­டு­வந்து பலாத்கா­ர­மாக மைய­வா­டியை துப்­பு­ரவு செய்யும் பணி­களை மேற்­கொண்டார். மைய­வா­டியில் மரங்கள் இருக்கும் பகுதி டோசர் பண்­ணப்­பட்­டது.


உட­ன­டி­யாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஊர் மக்­க­ளுக்கு அவ­சர அறி­விப்­பொன்­றினை ஒலிபெருக்கி ஊடாக விடுத்­தது. மைய­வா­டிக்கு ஆபத்து என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து முழு ஊர் மக்­களும் ஒன்று திரண்­டார்கள். இதனை தடுத்து நிறுத்­தும்­படி கோரி­னார்கள். காணிக்கு உரிமை கோரு­வ­தற்கு பொலிஸார் அத்­தாட்சி கேட்­டார்கள். ஆங்­கி­லேயர் காலத்து காணியின் வரை­படம் எம்­மி­ட­மி­ருந்­தது. நாம் பொலி­ஸா­ரிடம் முறை­யிட்டோம். எம்­மிடம் வரை­படம் இருந்­ததால் பொலிஸார் காணி டோசர் பண்­ணப்­ப­டு­வதை நிறுத்­தும்­படி உத்­த­ர­விட்­டார்கள். இத­னை­ய­டுத்து டோசர் பணி நிறுத்­தப்­பட்­டது எனவும் ஜலால்தீன் தெரி­வித்தார்.


இதே­வேளை சம்­பந்­தப்­பட்ட தரப்பு நீதி­மன்ற உத்­த­ர­வொன்­றினைப் பெற்று கிரிந்த மைய­வா­டியை டோசர் பண்­ணு­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் இறங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.


திலிப் வெத ஆரச்சி எம்.பி.

விஜயம்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலிப் வெத ஆரச்சி கிரிந்த முஸ்லிம் மைய­வா­டிக்கு கள­வி­ஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டார். பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளையும் அப்­ப­குதி முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­தித்து மைய­வாடி விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார். சம்­பந்­தப்­பட்ட தேர­ரையும் சந்­தித்துப் பேசினார். மாவட்ட செய­லாளர் மூலம் பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்றுத் தரு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்தார். அத்­தோடு பாரா­ளு­மன்­றத்தில் இவ்­வி­வ­கா­ரத்தை முன்­வைப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.


பள்­ளி­வாசல் தலைவர் எல்.எம்.அரீஸ்

கிரிந்த முஸ்லிம் மைய­வாடி அப­க­ரிக்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அரை நூற்­றாண்­டுக்கு மேற்­பட்ட வர­லாற்­றினைக் கொண்ட மைய­வா­டியை ஒரு போதும் விட்­டுக்­கொ­டுக்க முடி­யா­தெ­னவும் கிரிந்த ஜும் ஆ பள்­ளி­வாசல் தலைவர் எல்.எம்.அரீஸ் தெரி­வித்தார்.

இம்­மை­ய­வா­டியில் சுமார் 500க்கும் மேற்­பட்ட ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.


இதே­வேளை மைய­வாடி காணியை பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக நீதி­மன்றில் மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­ன்றன.


மைய­வா­டியில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள ஜனா­ஸாக்­களின் இறப்புச் சான்­றிதழ் பத்­தி­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு மைய­வாடி காணியை அப­க­ரிக்கும் முயற்­சிக்கு எதி­ராக நீதி­மன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக மையவாடியின் பயன்பாடு இடம்பெற்றுள்ளமை பற்றி நீதிமன்றில் சுட்டிக்காட்டப்படவுள்ளது.


மேலும் மணலால் நிரம்பியுள்ள குளத்தைப் புனரமைப்பதற்கு நீதிமன்றின் உத்தரவு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.


சமூகத் தலைமைகளின் கடமை

50 வருட காலத்துக்கும் மேலான வரலாற்றினைக் கொண்ட, 500க்கும் மேற்பட்ட ஜனாஸாக்களை உள்ளடக்கியுள்ள கிரிந்த முஸ்லிம் மையவாடியை பாதுகாப்பதற்கு சமூகத் தலைமைகள் முன்வர வேண்டும். இது அவர்களது கடமையாகும்.

சமூகத்தின் அரசியல் தலைமைகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சிவில் சமூக அமைப்புகள் என்பன மையவாடியின் இருப்புக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

இதேவேளை மாத்தறை, அம்பாந்தோட்டை பிரதி பொலிஸ் மாஅதிபர் சம்பந்தப்பட்ட பெளத்த தேரர்கள் நீதிமன்ற உத்தரவின்றி முஸ்லிம் மையவாடி மீது எவ்வித ஆக்கிரமிப்புகளையும் முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தேரர்களை அறிவுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.- Vidivelli

No comments

Powered by Blogger.