Header Ads



சவூதியில் தலை வெட்டப்படுவதிலிருந்து தப்பிய, இலங்கைப் பெண்ணின் கண்ணீரை வரவழைக்கும் வாக்குமூலம்


- ஏ.ஆர்.ஏ. பரீல் -

சவூதி அரே­பி­யாவில் கொலைக்­குற்றம் சுமத்­தப்­பட்டு மரண தண்­ட­னைக்கு உள்­ளாகி சிறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த இலங்கைப் பெண்­ ஒரு­வர் 7 வரு­டங்­களின் பின்பு அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் அண்­மையில் விடு­த­லை­யாகி இலங்கை திரும்­பி­யுள்ளார்.


சவூதி அரே­பி­யாவில் வீடொன்றில் பணிப்­பெண்­ணாக வேலை செய்து கொண்­டி­ருந்­த­போது, எஜ­மா­னரின் பிள்­ளை­யொன்­றினை சூனியம் செய்து கொலை செய்­த­தாக குறிப்­பிட்ட இலங்கைப் பெண்­மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் நீதி­மன்றம் அப்­பெண்ணை குற்­ற­வா­ளி­யாக இனங்­கண்டு மரண தண்­டனை விதித்­தி­ருந்­தது. வழக்கு நடை­பெற்­றி­ருந்த 7 வருட கால­மாக இலங்­கைப் ­பெண்­மணி சிறை வைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­­தக்­க­தாகும்.


சூனியம் செய்து கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்ட குழந்­தையின் பிரேத பரி­சோ­த­னையில் குழந்தை நோய்­வாய்ப்­பட்­டி­ருந்­தமை அறி­யப்­பட்­ட­த­னை­ய­டுத்தே மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த குறிப்­பிட்ட பெண்­மணி நீதிமன்­றினால் அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்.


இந்த நிலை­மை­யினை எதிர்­கொண்ட பெண்­மணி பாத்­திமா சம­ருத்தி என்­ப­வ­ராவார். 48 வய­தான திரு­ம­ண­மா­காத இவர் அவிஸ்­ஸா­வலை தல்­துவ எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார்.


தனது குழந்­தையை சூனியம் செய்து கொடூ­ர­மான முறையில் கொலை செய்­து­விட்­ட­தாக பாத்­திமா சம­ருத்தி பணிப்­பெண்­ணாக வேலை செய்த வீட்டார் அவருக்­கெ­தி­ராக நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து சவூதி அரே­பி­யா­வி­லி­ருக்கும் இலங்கைத் தூது­வ­ரா­லய அதி­கா­ரிகள் முன்­வந்து அனைத்து சட்ட பிரி­வு­க­ளி­னதும் ஒத்­து­ழைப்­புடன் இவ்­வி­வ­காரம் தொடர்பில் மேல­திக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். இறந்த குழந்­தையின் உடற்­பா­கங்கள் பரி­சோ­த­னைக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டன.


ரியாத், அமெ­ரிக்கா மற்றும் தம்­மாமில் நடத்­தப்­பட்ட உடற்­பா­கங்­களின் வைத்­திய பரி­சோ­த­னை­களில் குழந்தை புற்று நோயின் தாக்­கத்­தி­னாலே இறந்­தி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. குழந்தை இறந்­த­மைக்­கான உண்­மைக்­கா­ரணம் நீதி­மன்­றத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்பு பாத்­திமா சம­ருத்தி கடந்த ஒக்­டோபர் மாதம் 16ஆம் திகதி நீதி­மன்­றத்­தினால் விடு­தலை செய்­யப்­பட்டார்.


வறுமை நிலை­யி­லி­ருந்தும் மீள்­வ­தற்கு பணம் தேடு­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்கு பணிப்­பெண்­ணாகச் சென்ற குறிப்­பிட்ட பெண்­மணி தான் எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்ட துக்­க­க­ர­மான நிலை­மையை அழுது கொண்டே ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்தார்.


“நான் கடந்த மாதம் 2 ஆம் திகதி வந்து சேர்ந்தேன். மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த நான் தாய்நாட்­டுக்குத் திரும்பி வருவேன் என்று கன­விலும் எதிர்­பார்க்­க­வில்லை. சிறையில் கடந்த 7 வரு­டங்­க­ளாக நான் அனு­ப­வித்த வேத­னைகள் பற்றி என்னால் விப­ரிக்க முடி­யாது. நான் இறந்து பிழைத்து வந்­துள்ளேன் என்றே எண்ணத் தோன்­று­கி­றது.


எனக்கு ஏற்­பட்ட நிலை­மையை நினைத்து வேத­னைப்­பட்டு எந்­நே­ரமும் கண்ணீர் சிந்­திக்­கொண்­டி­ருந்த எனது பெற்றோர் நோய்­வாய்ப்­பட்டு கால­மாகி விட்­டார்கள். நான் மாத்­தி­ரமே அவர்­க­ளுக்­கி­ருந்த ஒரே பிள்ளை. இன்று எனக்கு ஒரு­வ­ரு­மில்லை. இன்று நான் எனது தூரத்து உற­வி­ன­ரான சகோ­தரி ஒரு­வரின் வீட்­டிலே காலத்தைக் கடத்­து­கிறேன்.


நான் பணிப்­பெண்­ணாக பாடு­பட்டு உழைத்­ததில் எனக்கு எதுவும் மிஞ்­ச­வில்லை. நான் குற்­ற­மற்­றவள். நிர­ப­ராதி, கொலை­கா­ரி­யல்ல என நீதி­மன்றம் விடு­தலை செய்­துள்­ளது. 7 வரு­டங்கள் சிறையில் தனி­மையில் மரண தண்­ட­னைக்­காக காத்­தி­ருந்தேன். எனக்கு எந்­த­வித நஷ்­ட­ஈடும் வழங்­கப்­ப­ட­வில்லை. விடு­தலை மாத்­தி­ரமே கிடைத்­துள்­ளது.


இப்­போது என்­னிடம் எதுவும் இல்லை. நான் அநா­தை­யா­கி­விட்டேன். எனது பெற்றோர் வேத­னையால் நோய்­வாய்ப்­பட்டு கால­மா­ன­தற்கும் என்­மீது பொய்க் குற்றம் சுமத்­தி­ய­வர்­களே பொறுப்­புக்­கூற வேண்டும்.


சவூதி அரே­பியா மனித நேய­மில்­லாத மோச­மான நாடு. அவர்­க­ளிடம் மனி­தா­பி­மானம் இல்லை. சவூதி அரே­பி­யா­வுக்கு வேலை­வாய்ப்பு பெற்றுச் செல்ல வேண்­டா­மென நான் என் நாட்டு மக்­களை வேண்­டிக்­கொள்­கிறேன். சவூதி அரே­பி­யாவில் எனக்­கேற்­பட்ட அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இலங்கை அர­சாங்கம் எனக்கு சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நஷ்ட ஈடு­ பெற்­றுத்­தர ஏற்­பாடு செய்ய வேண்டும் என்­பது எனது கோரிக்­கை­யாகும்.


நான் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பணிப்­பெண்­ணாக வேலை வாய்ப்பு பெற்று சவூதி அரே­பி­யா­வுக்குச் சென்றேன். சவூ­தியில் அந்­நாட்டு பிரஜை ஒரு­வ­ரது வீட்டில் பணிப்­பெண்­ணாக இரண்டு வரு­டங்­களும் 3 மாதங்­களும் வேலை செய்து இலங்­கைக்கு திரும்­பி­வர ஆயத்­த­மாக இருந்த நிலையில் எஜ­மா­னரின் மகள் திடீ­ரென சுக­வீ­ன­முற்றார். எஜ­மா­னரின் பிள்­ளைக்கு நான் சூனியம் செய்­ததால் அவர் கடு­மை­யாக பாதிக்­க­ப்பட்டு நோய்­வாய்ப்­பட்­ட­தாக எஜமான் பொலிஸில் புகார் செய்தார். இத­னை­ய­டுத்து நான் சவூதி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டேன். நீதி­மன்றம் என்னை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டது. நான் சிறையில் இருக்­கும்­போது எஜ­மா­னரின் மகள் நோயி­னா­லேயே கால­மானார். இதன்­பின்பே எனக்கு மரண தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் முன்னெடுத்தது.


நான் 7 வருடகாலம் சிறையில் இருந்தேன். இந்நிலையில் இலங்கை தூதரக அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு அவ்விடயம் தொடர்பில் பேசினார்கள். மீண்டும் இந்த வழக்கை நீதிமன்றில் விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.


நீதிமன்றம் காலமான பிள்ளையின் வைத்திய அறிக்கை மூன்றினை சமர்ப்பிக்கும்படி கோரியது. அதற்கிணங்க வைத்திய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வைத்திய அறிக்கைகளே பிள்ளை புற்று நோயினால் பாதிக்கப்பட்டே மர­ணித்­தது என்பதை உறுதி செய்­தன என்றார். – Vidivelli

1 comment:

  1. இந்த அப்பாவிப் பெண்ணின் அவலத்தைப் பாருங்கள். வெறுமனே ஒருவர் அப்பாவியான பணிப் பெண் மீது கொண்ட சந்தேகம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையே பெரும் இழப்புக்கும் நஷ்டத்துக்கும் ஆளாக்கிவிட்டது.இந்தப் பெண்ணுக்கு இலங்கை வௌிநாட்டுப்பணியகம் அவருடைய ஏழு வருடத்தின் சம்பளத்தையாவது நட்டஈடாக வழங்கவேண்டும். ஏனெனில் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதியின் பேரில்தான் பெண்கள் ஊழியம் செய்ய வௌிநாடு செல்கின்றனர். அவர்களின் நலன்களைப் பேணும் நோக்கில் தான் இந்த வௌிநாட்டு வேலைவாய்ய்புப் பணியகம் உருவாக்கப்பட்டது. எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளுக்கும் முன்னர் இந்தப் பெண்ணின் வாழ்க்கையை ஒரளவுக்காவது சீர் அமைத்துக் கொள்ள பணியகம் உடனடியாக உதவி செய்வது அதன் கடமையாகும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.