Header Ads



ஜாமிஆ நளீமிய்யா மறக்கக்கூடாத ஓர் ஆளுமை AMA அஸீஸ்


இஸட். ஏ. ஸன்ஹிர்

உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை)


இலங்கை சிவில் சேவையில் (CCS) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெரு­மைக்­கு­ரிய அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் 04.10.1911 இல் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்தார். அன்­னாரின் தந்தை அபூ­பக்கர் அவர்கள் யாழ்ப்­பா­ணத்தின் புகழ்­பெற்ற வழக்­க­றி­ஞரும் காதி நீதி­ப­தி­யு­மாவார். தாயார் சுல்தான் முஹிதீன் நாச்­சியா. யாழ் வைதீஸ்­வரா வித்­தி­யா­லயம், யாழ்ப்­பாணக் கல்­லூரி, கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, இலங்கைப் பல்­க­லைக்­க­ழகம், என்­ப­ன­வற்றில் பயின்ற எ. எம். எ. அஸீஸ், லத்தீன் மொழியைக் கற்­ற­துடன் தமிழ், ஆங்­கிலம் என்­ப­ன­வற்றில் பாண்­டித்­தியம் பெற்­றி­ருந்தார்.


கொழும்பு ஸாஹி­றாவின் அதி­ப­ராக (1948 – 1961) இருந்த அஸீஸ் அவர்கள், செனற் சபை உறுப்­பி­ன­ரா­கவும் (1952) பொதுச் சேவை ஆணை­யா­ள­ரா­கவும் (1963) சேவை­யாற்­றி­யுள்ளார். 19.05.1945 இல் அகில இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி­யத்தைத் (The Ceylon Muslim Scholarship Fund) தாபித்த அவர், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்­கத்தின் (Y.M.M.A) தந்­தை­யு­மாவார்.


அரச சாகித்ய மண்­டலப் பரிசு பெற்ற நூலான இலங்­கையில் இஸ்லாம், மிஸ்ரின் வசியம், தமிழ் யாத்­திரை, கிழக்­கா­பி­ரிக்கக் காட்­சிகள், ஆபி­ரிக்க அனு­ப­வங்கள், அற­புத்­தமிழ் எங்கள் அன்புத் தமிழ் உட்­படப் பல நூல்­களின் ஆசி­ரி­ய­ரான அஸீஸ், தமி­ழிலும் ஆங்­கி­லத்­திலும் பல ஆய்வுக் கட்­டு­ரை­க­ளையும் எழு­தி­யுள்ளார். யாழ் பல்­க­லைக்­க­ழகம் அன்­னா­ருக்கு 1980 இல் கெள­ரவ இலக்­கியக் கலா­நிதிப் பட்­டத்தை வழங்­கி­யது.


இஸ்­லா­மியப் புரட்­சி­கர சிந்­த­னை­யா­ளர்­களால் பெரிதும் கவ­ரப்­பட்ட அஸீஸ், மேலைத்­தேய நாடு­க­ளு­டனும் தொடர்­பு­க­ளைக்­கொண்­டி­ருந்தார். கீழைத்­தேயத் தத்­து­வங்கள், மர­புகள் போன்­ற­வற்­றுடன் ஒப்­பிட்டு ஆராயும் சந்­தர்ப்­பத்தை அது அவ­ருக்கு வழங்­கி­யது. உலமாப் பெரு­மக்­க­ளுக்கும் மேற்­கத்­தேய கல்­வி­மு­றையில் பயின்­றோ­ருக்கும் இடையில் நில­விய இடை­வெ­ளியைக் குறைப்­ப­தற்கும் பழைமை, புதுமை என்­ப­ன­வற்றை இணைப்­ப­தற்கும் தாம் ஒரு பால­மாக இருக்­க­வேண்டும் என அறிஞர் அஸீஸ் விரும்­பினார்.


ஜாமிஆ நளீ­மிய்­யாவின் தோற்­றத்­துக்கும் அதன் ஆரம்­ப­கால செயற்­பா­டு­க­ளுக்கும் பங்­க­ளிப்பு செய்­த­வர்­களுள் பிர­தா­ன­மா­னவர் எ. எம். எ. அஸீஸ். 1941 இல் ‘முஸ்லிம் மித்­தி­ரனில்’ அவர் எழு­திய, ‘மத அறிவைப் புகட்­டக்­கூ­டிய ஒரு மத்­திய முஸ்லிம் கலா­சாலை’ என்ற கட்­டுரை 1963 இல் வெளி­யி­டப்­பட்ட ‘இலங்­கையில் இஸ்லாம்’ என்ற நூலில் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தலைப்பில் மீண்டும் இடம்­பெற்­றது. ‘ இலங்­கையில் ஒறா­பி­பாஷா’, ஜாமிஉல் அஸ்ஹர்’ ‘எமக்­கொரு ஜாமியாஹ்’ ஆகிய கட்­டு­ரைகள் அவ­ரது நூலில் அடுத்­த­டுத்து இடம்­பெற்­றுள்­ளன. உலகின் முதன்­மை­யான பல்­க­லைக்­க­ழகம் என்று பெயர்­பெற்­றது எகிப்­திய அல் அஸ்ஹர் ஆகும்.


அக்­கட்­டு­ரையில், ஒரு ‘ஜாமிஆ’ எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது பற்றி அவர் விளக்­கு­கிறார். நவீன சவால்­க­ளுக்கு முகம் கொடுக்­கக்­கூ­டிய, சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு தரக்­கூ­டி­ய­வர்­களை உரு­வாக்கும் ஒரு கலா­நி­லையம் அமைக்­கப்­படல் வேண்டும். மொழி, கணிதம், விஞ்­ஞானம் உள்­ள­டங்­கிய பாடங்­களில் நுழைவுத் தேர்வு மூலம் மாண­வர்கள் இக் ­கலா­நி­லை­யத்தில் உள்­வாங்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு மார்க்கக் கல்­வி­யுடன், உலகக் கல்­வியும் போதிக்­கப்­படல் வேண்டும். கற்­பிக்கும் ஆசி­ரி­யர்கள் தகு­தி­யு­டை­யோ­ரா­யி­ருப்­ப­துடன் அவர்­களில் சிலர் வெளி­நாட்­ட­வ­ரா­கவும் இருக்க வேண்டும்.


இத்­த­கைய ஒரு கலா­சாலை தொடங்­கப்­ப­டும்­வரை விருப்­ப­முள்ள மாண­வர்கள், இவ்­வா­றான கல்­வியைப் போதிக்கும் மிஸ்று (எகிப்து) போன்ற இடங்­க­ளுக்குச் சென்று கற்­ப­தற்­கான பண உத­வி­க­ளை­யா­வது நாம் செய்­ய­வேண்டும் என்ற கருத்­துக்­களைத் தனது கட்­டு­ரையில் தெரி­விக்கும் அவர், “மத அறிவைப் புகட்­டக்­கூ­டிய ஒரு மத்­திய முஸ்லிம் கலா­சாலை, ஒரு யோச­னை­யாக மாத்­திரம் முடிந்­து­வி­டாமல் ஒரு நல்ல காலம் அதை எதிர்­பார்த்து நிற்­கின்­றது என நாம் நம்பிப் பிரார்த்­திப்­போ­மாக!” என அக் கட்­டு­ரையை நிறை­வு­ செய்­கின்றார்.


இலங்­கையில், செல்­வந்­த­ராக மட்­டு­மன்றி கொடை­வள்­ள­லா­கவும் அன்று அனை­வ­ராலும் அறி­யப்­பெற்­றி­ருந்­தவர் பேரு­வளை, சீனன்­கோட்­டையைச் சேர்ந்த நளீம் ஹாஜி­யா­ராவார். மார்க்கக் கல்­வி­யுடன், உலகக் கல்­வி­யையும் போதிக்கும் கலா­நி­லையம் ஒன்று உரு­வாக்­கப்­படல் வேண்டும் என்ற எண்ணம் அன்னார் மன­திலும் உதித்­தது. தனது சொத்து, செல்வம் முழு­வ­த­னையும் அதற்­காக அர்ப்­ப­ணிக்க ஹாஜியார் தயா­ராக இருந்தார். படித்த, பட்டம் பெற்ற அறி­ஞர்­க­ளி­னதும் சிந்­த­னை­யா­ளர்­க­ளி­னதும் தொடர்பும் நளீம் ஹாஜி­யா­ருக்­குக் ­கி­டைத்­தது.


எ. எம். எ. அஸீஸ் மரு­தானை ஸாஹி­றாவின் அதி­ப­ராக இருந்து, வெளி­யா­கிய பின்னர் நளீம் ஹாஜி­யா­ரு­ட­னான தொடர்பு வலுப்­பெற்­றது. இப்­பின்­ன­ணியே ஜாமிஆ நளீ­மிய்­யாவின் தோற்­றத்­துக்கும் வழி­வ­குத்­தது. சிந்­த­னைக்கு செயல் வடிவம் கொடுத்­தவர் வள்ளல் நளீம் ஹாஜி­யா­ராவார்.


ஜாமிஆ நளீ­மிய்யா 1973 இல் தொடங்­கப்­பட்­ட­போது வெளி­யி­டப்­பட்ட ஜாமிஆ பற்­றிய கையேட்டில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. “…………….. இஸ்­லாத்­தையும் அதன் தத்­துவம், கோட்­பாடு, கொள்­கை­க­ளையும் ஆழ்ந்து கற்று, அதே நேரத்தில் நல்ல சிந்­த­னைகள், தத்­து­வங்கள் என்­ப­ன­வற்­றிலும் சிறந்த அறிவு படைத்த உல­மாக்­களை உரு­வாக்க வேண்­டிய ஓர் அவ­சரத் தேவை இன்று தோன்­றி­யுள்­ளது. இத்­த­கைய உலமாப் பெரு­மக்­களின் வழி­காட்­டு­தலும் தலை­மை­யுமே மிக அவ­சி­ய­மாகத் தேவைப்­ப­டு­கின்­றன…………’’ இத்­த­கைய உல­மாக்­களை உரு­வாக்­கு­வதன் மூலம் சமு­தா­யத்தின் இன்­றைய ஒரு முக்­கிய தேவையைப் பூர்த்­தி­செய்யும் அடிப்­படை நோக்­கத்­து­ட­னேயே ஜாமிஆ நளீ­மிய்யா (நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­நி­லையம்) ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.


ஜாமிஆ நளீ­மிய்­யாவின் பாடத்­திட்டம் பற்­றியும் அக்­கை­யேட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இஸ்­லா­மியக் கல்­வி­யோடு பொதுக் கல்­வி­யையும் பயி­லக்­கூ­டிய விதத்தில் பாடத்­திட்டம் அமை­யு­மென்றும் குர்ஆன், ஹதீது, இஸ்­லா­மிய சட்­டக்­கலை, இஸ்­லா­மியப் பண்­பாடு, தத்­து­வ­ஞானம், நாக­ரீகம், மதங்கள், நவீன சிந்­த­னைகள் தத்­து­வங்கள் பற்­றிய ஒப்­பீட்டு ஆய்வு என்­பன பாடத்­திட்­டத்தில் இடம்­பெ­று­மெ­னவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் பாடத்­திட்­டத்தை அமைப்­ப­திலும் காலத்­துக்குக் காலம் அதனைப் புதுப்­பிப்­ப­திலும் இஸ்­லா­மிய உலகின் புகழ்­பெற்ற ஜாமி­ஆக்­களின் படிப்­பி­னை­களும் அனு­ப­வங்­களும் கருத்­திற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


எ.எம்.எ. அஸீஸ் மஸ்­ஜி­து­களால் கவ­ரப்­பட்­டி­ருந்தார். பள்­ளி­வா­சல்­களின் கட்­டிடக் கலை­யம்­சங்கள் மட்­டு­மல்­லாது, அதன் சமூகப் பங்­க­ளிப்­புக்கள் பற்­றியும் உலக நாடு­களில் தாம் சென்ற இடங்­க­ளி­லெல்லாம் அவர் ஆய்ந்து அறிந்தார். ‘மிஸ்றின் வசியம்’ என்ற நூலில் ‘மிஸ்றின் மசூ­திகள்’ என்ற ஒரு கட்­டு­ரையும் இடம்­பெற்­றுள்­ளது.


ஜாமிஆ நளீ­மிய்­யாவின் கையேடு பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்­றது. “வளா­கத்தின் மத்­தியில் கண்ணைக் கவரும் வகையில், இஸ்­லா­மியக் கட்­டிடக் கலைச் சிறப்பை உண­ரத்­தக்க கூடிய வகையில் ஒரு மஸ்ஜித் கட்­டப்­ப­டு­கின்­றது. அமைப்­பிலும் வனப்­பிலும் ஜாமி­ஆவின் சிறப்­பம்­ச­மாக இப்­பள்­ளி­வாசல் அமையும். இந்த ஜாமி­ஆவில் பயிலும் மாண­வர்­க­ளுக்குப் பரந்த இஸ்­லா­மிய அறிவைப் புகட்­டு­வ­தோடு இஸ்­லா­மிய வாழ்க்­கை­முறை பழக்­க­வ­ழக்­கங்கள் என்­ப­ன­வற்றில் பயிற்­சி­ய­ளிக்கும் நோக்­கத்­து­ட­னேயே இம்­மஸ்ஜித் எழுப்­பப்­ப­டு­கின்­றது. ……. இஸ்­லா­மிய அறிவின் சின்­ன­மாக ஜாமி­ஆவும் இஸ்­லா­மிய வாழ்க்கை முறைப் பயிற்­சியின் சின்­ன­மாக மஸ்­ஜிதும் அமையும்”.


ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்­துக்­கான, முதல் தொகுதி மாண­வர்­களைத் தெரி­வு­ செய்­வ­தற்­காக, 16.07.1973 இல் மரு­தானை ஸாஹிறாக் கல்­லூ­ரியில் நுழை­வுத்­தேர்­வொன்று மொழி, கணிதம், இஸ்லாம், பொது அறிவு ஆகிய பாடங்­களில் நடை­பெற்­றது. ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் அதற்குத் தோற்­றினர். அதில் சித்­தி­பெற்ற நூற்­றுக்கும் மேற்­பட்­டோ­ருக்­கான நேர்­முகப் பரீட்சை, வெள்­ள­வத்தை நளீம் ஹாஜி­யாரின் இல்­லத்தில் 1973 ஜூலை மாதம் 9, 10, 11,16,17,18 ஆகிய ஆறு நாட்கள் இடம்­பெற்­றன.


நேர்­முகப் பரீட்­சையை நடத்­தி­யோரில் அறிஞர் எ. எம். எ. அஸீஸ், ஜாமி­ஆவின் முதல் அதிபர் மெள­லவி யூ.எம். தாஸீன், அறிஞர் அஸீஸின் ஸாஹிராக் கல்­லூரி மாணவன் கலா­நிதி எம். ஏ. எம். சுக்ரி, மெள­லவி தாஸீன் அவர்­களின் மறை­வுக்குப் பின்னர் ஜாமி­ஆவைப் பொறுப்­பேற்று வக்­கீலுல் ஜாமி­ஆ­வாகப் பணி­யாற்­றிய ஷாகுல் ஹமீத் பஹ்ஜி, நீதி­பதி ஏ. எம். அமீன், மசூத் ஆலிம் சாஹிப், இலங்கை முஸ்லிம் மிஷ­னரி சங்க செய­லாளர் அல்ஹாஜ் ஏ.சீ.ஏ.வதூத், மெள­லவி ஏ.எல்.எம். இப்­ராஹிம், சீனன்­கோட்­டையைச் சேர்ந்த ஹி­ப­துல்லாஹ் ஹாஜியார் போன்றோர் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டி­யோ­ராவர். நளீம் ஹாஜியார் அவர்­களும் அங்கு சமு­க­ம­ளித்­தி­ருந்தார். நேர்­முகத் தேர்வுக் குழு­வுக்குத் தலைமை வகித்­தவர் அஸீஸ் அவர்­களே. நேர்­மு­கப்­ப­ரீட்­சையின் எல்லா நாட்­களும் அஸீஸ் பிர­சன்­ன­மா­யி­ருந்தார். அங்கு அவர் ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில் வினாக்களைத் தொடுத்து கலந்­து­ரை­யா­டி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.


இலங்கை முஸ்­லிம்கள் மறந்­து­விட்ட அல்­லது தொலைத்­து­விட்ட ஒரு பொக்­கிஷம் ‘அற­புத்­தமிழ்’. அறிஞர் அஸீஸ், அற­புத்­த­மிழைப் பாது­காப்­பதில் அதிக கரி­சனை செலுத்­தினார். ஒலிக்­குறி ஒரு­மைப்­பாடு, அற­புத்­தமிழ் அக­ராதி, அற­புத்­தமிழ் இலக்­கி­யக்­கோவை என்­பன எமது அத்­தி­யா­வ­சியத் தேவை என வலி­யு­றுத்­தி­யவர் அவர். நளீ­மிய்யா தொடங்­கப்­பட்ட சில நாட்­களின் பின்னர், ஜாமி­ஆவின் தாபக அதி­பரும் ஜாமி­ஆவில் சேவை­யாற்­றிய இலங்­கையைச் சேர்ந்த ஒரே­யொரு அதி­ப­ரு­மான, மெள­லவி யூ. எம். தாஸீன் (நத்வி, அல் அஸ்­ஹரி) அவர்­க­ளுடன் அறிஞர் அஸீஸ் அவர்கள், வகுப்­ப­றைக்கு வந்து ‘அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என்ற அவரின் நூலை, ஜாமி­ஆவின் முதற் தொகுதி மாண­வர்கள் ஒவ்­வொ­ருவருக்கும் ஸலாம்­கொ­டுத்துத், தனது கரங்­க­ளினால் அன்­ப­ளிப்­பு­ செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


ஜாமிஆ நளீ­மிய்­யாவின் நூல­கத்­திற்கு அஸீஸ் சிறப்­பிடம் அளித்­த­தாக, அஸீஸ் காலத்து ஸாஹி­றாவின் ஆசி­ரி­யரும், எழுத்­தா­ளரும், நூல­க­ரு­மான எஸ்.எம். கமால்தீன் குறிப்­பி­டு­கின்றார். நளீ­மிய்யா நூல­கத்தைத் திட்­ட­மிடும் வாய்ப்பு அஸீஸ் அவர்­க­ளினால் கமால்­தீ­னுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எ.எம். எ. அஸீஸ் அவர்கள் தனது மர­ணத்தின் பின்னர், விலை­ம­திக்க முடி­யாத, பெரும்­பாலும் அவ­ரது அனைத்து நூல்­க­ளையும் ஜாமி­ஆ­வுக்கு வழங்­கிய வள்­ள­லாவார். அவ­ரது நூல்கள் ஜாமி­ஆ­வுக்கு லொறியில் வந்து சேர்ந்­தன. அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை நம்­பிக்­கை­யாளர் சபை உறுப்­பினர் ஏ.ஆர்.ஏ. நூர் அமீன் அவர்கள் அப்­போது ஜாமி­ஆவின் நூல­க­ராக இருந்தார்.


அறிஞர் அஸீஸ் அவர்கள், ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தனது கட்­டு­ரையில் சொல்­வ­து­போல, ‘விரி­வு­ரை­யா­ளர்கள் உள்­நாட்­டி­லி­ருந்தும் வெளி­நா­டு­களில் இருந்தும் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர்’ என ஜாமிஆ பற்­றிய அறி­முகக் கையேட்­டிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் வசித்­து­வந்த எகிப்­தி­ய­ரான அப்துல் கலீல் அயாத் என்­பவர் 1975 காலப்­ப­கு­தியில் ஜாமி­ஆ­வுக்கு வரு­கை­தரு விரி­வு­ரை­யா­ள­ராக சேவை­யாற்­றினார். மேலும் 1977 காலப்­ப­கு­தியில் எகிப்து அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து ஷேய்ஹ் அப்துல் பத்தாஹ், ஷேய்ஹ் இப்­ராஹிம் அல் மலீஹ் ஆகிய இரு விரி­வு­ரை­யா­ளர்கள் ஜாமி­ஆவில் கற்­பிப்­ப­தற்­காக வருகை தந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


எகிப்­தினால் வசீ­க­ரிக்­கப்­பட்­டவர் அஸீஸ். முஸ்­லிம்கள் அந்­நாட்­டுடன் தொடர்­பு­கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­வேண்­டு­மென்­பது அவ­ரது அவா. ஜாமிஆ நளீ­மிய்­யாவின் அங்­கு­ரார்­ப்ப­ண­மன்று, இலங்­கைக்­கான எகிப்து நாட்டுத் தூதுவர் கலீபா அப்துல் அஸீஸ் முஸ்­தபா அவர்கள் அங்கு சமுக­ம­ளித்­தி­ருந்தார். அவர் இலங்­கை­யி­லி­ருந்து நாடு திரும்­பும்­போது, பிரி­யா­விடை நிகழ்­வொன்றும் நளீம் ஹாஜி­யாரின் தலை­மையில் ஜாமி­ஆவில் இடம்­பெற்­றது. இதன்­போது உரை­யாற்­றிய எ.எம்.எ. அஸீஸ் அவர்கள், இந்த நிகழ்வு 1901 இல் இலங்கை முஸ்­லிம்கள் ஒறாபி பாஷா­வுக்கு அளித்த பிரி­யா­வி­டையைத் தமக்கு நினை­வூட்­டு­வ­தாகத் தெரி­வித்தார். அதில் உரை­யாற்­றிய தூதுவர் அவர்கள், இந்த ஜாமி­ஆவில் பயின்ற சிறந்த மாண­வர்கள் சில­ருக்கு, எகிப்து அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமது மேற்­ப­டிப்­புக்­காக வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டு­மெனக் குறிப்­பிட்டார்.


1978 இல் நளீ­மி­யாவின் முதல் தொகுதி மாண­வர்­க­ளான ஜே.எம். உவைஸ் (கொழும்பு), ஏ.எம். அபு­வர்தீன் (மாத்­தளை), வை. அபுல்­பஷர் (புத்­தளம்) எம்.ஐ.எம். நியாஸ் (பொல்­க­ஹ­வெல) ஆகி­யோ­ருடன் ஜாமி­ஆவின் உப அதிபர் மெள­லவி ஏ.எம்.சீ.எம்.புஹாரி (மன்­பஈ), விரி­வு­ரை­யாளர் எஸ்.எல்.எம். ஹசன் ஆகி­யோரும் அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு, வக்ப் அமைச்சின் புல­மைப்­ப­ரிசில் பெற்றுச் சென்­றனர். ஜாமி­ஆவே அவர்­களை அங்கு அனுப்­பி­வைத்­தது. அபுல்­பஷர், எம். ஐ. அப்துர் றஹீம் (மூதூர்) ஆகியோர் ஜாமி­ஆவின் கற்­கையைப் பூர்த்­தி­செய்து பட்­டத்­தையும் பெற்­றனர். அஸ்ஹர் சென்றோர் கலை­மானிப் பட்­டத்தைப் பெற்­றனர். அபு­வர்தீன், கலா­நிதிப் பட்­டம்­பெற்ற நளீ­மிய்­யாவின் முத­லா­வது மாண­வ­ராவார்.


ஜாமிஆ நளீ­மிய்­யாவின் கலைத்­திட்ட முன்­னோ­டியும் வழி­காட்­டியும் அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்­களே. ஜாமி­ஆவில் அறிஞர் அஸீஸை சந்­தித்த மாண­வர்கள், முதல் தொகுதி மாண­வர்கள் மட்­டுமே. ஏனெனில் ஜாமிஆ நளீ­மிய்யா ஆரம்­பிக்­கப்­பட்டு சுமார் மூன்று மாதங்­களில், 24 நவம்பர் 1973 இல், நளீ­மிய்­யாவைத் தரி­சிக்க ஆவ­லாக இருந்த நிலையில் அன்னார் இறை­ய­டி­சேர்ந்­தார்கள்.


ஜாமிஆ மாண­வர்கள் மார்க்கக் கல்­வி­யையும் உலகக் கல்­வி­யையும் சம­சந்­தர்ப்­பத்தில் பெற­வேண்டும். அர­சாங்க அதி­பர்கள் போன்ற உயர் பத­வி­களை வகித்து, பள்­ளி­வா­சல்­களில் கொத்பாப் பேரு­ரை­க­ளையும் நிகழ்த்­த­வேண்டும் போன்ற சிந்­த­னை­களை ஜாமி­ஆவில் விதைத்­த­வர்கள் அறிஞர் அஸீஸ் அவர்­களும் அதிபர் தாஸீன் அவர்­க­ளு­மாவர். இச்­சிந்­த­னை­களால் உருப்­பெற்ற செயல், இன்று வளர்ச்­சி­ய­டைந்து வியா­பித்­துள்­ளது. ஜாமி­ஆவின் இரண்டாம் தொகுதி மாண­வர்­களில் ஒரு­வ­ரான கனே­வல்­பொ­லயை சேர்ந்த ஹபீப் முஹம்மத், இலங்கை நிரு­வாக சேவைப் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து, மூதூர் உதவி அரச அதி­ப­ராக சேவை­யாற்­றி­ய­போது, அதி­காலை சுபஹ் தொழு­கையை நடத்­து­வ­தற்கு, பள்­ளி­வா­ச­லுக்கு நடந்­து­வ­ரும்­போது சுடப்­பட்டார். சமூ­கத்­துக்­காகத் தனது உயிரை தியா­கம்­செய்த நளீ­மியை இச்­சந்­தர்ப்­பத்தில் நினை­வு­கூர விரும்­பு­கிறேன்.


பாகிஸ்தான் நாட்டின் சட்டம், நீதித் துறை­க­ளுக்­கான அமைச்­சரும் அந்­நாட்டு அர­சி­ய­லமைப்பை வரைந்­த­வர்­களுள் ஒரு­வரும் சட்­ட­மா­ அ­தி­பரும் இந்­தி­யா­வுக்­கான பாகிஸ்­தானின் தூது­வ­ராகப் பணி­யாற்­றி­ய­வரும் எழுத்­தா­ள­ரு­மான ஏ.கே. புரோஹி அவர்கள் எ. எம். எ. அஸீஸின் மறை­வின்­போது பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார். “முஸ்­லிம்­களின் அறி­வுத்­து­றையில், வளர்ச்­சிக்­கா­கவும் அவர்தம் சமூக வாழ்வு வளம்­பெ­றவும் அஸீஸ் அளித்த புத்­தூக்கம் அளப்­ப­ரி­ய­தா­யுள்­ளது. உண்­மையில் அஸீஸ் போன்றோர் மர­ணிப்­ப­தில்லை. மக்­களின் உள்­ளங்­க­ளிலே ஒளி­யேற்றி வைப்­ப­தற்­காக ஓயாது உழைப்­ப­வர்கள், மக்­க­ளுக்­காகப் பணி­பு­ரி­வ­தாகப் பாசாங்கு செய்­ப­வர்­க­ளைப்­போ­லன்றி, அதி உன்­னத வாழ்­வு­நி­லையை எய்­து­கி­றார்கள்”.


ஏ.கே. புரோஹி அவர்கள், 07.01.1976 அன்று ஜாமி­ஆ­வுக்கு சமு­க­ம­ளித்து, நிரு­வாகத் தொகுதிக் கட்­டி­டத்­துக்­கான அடிக்­கல்­லையும் நாட்­டி­வைத்தார். அவ்­வ­மயம் ஆற்­றிய உரை­யின்­போது கூறிய கதை இது. “ஒரு மாணவன் ஓர் ஆசி­ரி­ய­ரிடம் கற்றான். அவரே அம்­மா­ண­வனின் முதல் ஆசி­ரி­ய­ரு­மாவார். கற்றல் நடவடிக்கைகளின் இறுதிநாளன்று அவ்வாசிரியர், ஒரு காகிதத்தில் ‘ஒன்று’ என்ற இலக்கமிட்டு அதனை அவனுக்கு வழங்கினார். அம்மாணவன் இரண்டாவது ஆசிரியரிடம் பயின்று முடிந்தபோது இரண்டாவது ஆசிரியர் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒரு பூச்சியத்தைப் போட்டு அக்காகிதத்தை அவனிடம் கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது கற்பித்தலின் இறுதியில் ஒவ்வொரு பூச்சியம் போட்டனர். பெறுமதி அதிகரித்துச் சென்றது. ஒரு நாள் அம்மாணவன் தனது முதலாவது ஆசிரியரை சந்தித்தபோது, தொகை அதிகரித்திருப்பதை பெருமையோடு கூறினான். அவர் அந்த காகிதத்தைப் பெற்று, தான் முதலாவதாக எழுதிய ஒன்று என்ற இலக்கத்தை அழித்துவிட்டு அம்மாணவனிடம் அக்காகிதத்தை மீளக்கையளித்தார்”.


ஜாமிஆ நளீமிய்யா மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஓர் ஆளுமை எ. எம். எ. அஸீஸ் ஆவார். –Vidivelli

No comments

Powered by Blogger.