Header Ads



மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கைக


நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள ஆறுகளிலிருந்து மணலை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு வரையான இலங்கையின் மணல் தேவை 57 மில்லியன் கன மீற்றராக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் 42 மில்லியன் கனமீற்றர் மணலே உள்ளது. ஆறுகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மணல் எடுப்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடலில் ஆழமாக தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டாலும், மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக மணல் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.