வருடாந்தம் 600 மில்லியன் கரண்டிகள், சுற்றுச்சூழலில் கைவிடப்படுகிறது
வருடாந்தம் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட 600 மில்லியன் கரண்டிகள் சுற்றுச்சூழலில் கைவிடப்படுவதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய யோகட், ஐஸ்கிறீம் உள்ளிட்ட உணவுகளுக்காக வழங்கப்படும் பிளாஸ்டிக் கரண்டிகளுக்கு மாற்றீடாக வேறு உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
செஷே பைக்கட்கள் உள்ளிட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு அந்த அமைச்சு இதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.
அவற்றுக்கு மாற்றீடாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் விரைவில் உக்கக்கூடிய பொருட்களை ஊக்குவிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment