எனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளது - அமைச்சரின் புலம்பல்
சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தேசிய விவசாயிகள் அமைப்புக்களுடன் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
பெரும்போக இயற்கை விவசாய வேலைத்திட்டம் தொடர்பில் விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவையெனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேதன பயிர்ச்செய்கை திட்டத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் மிக முக்கியமான வேலைத்திட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் அளுத்கமகே குறிப்பிட்டார்.
நாசமாகிய பின்னர் இன்னமும் நாட்டின் விவசாயத்தை நாசமாக்காமல் உடனடியாக நிரந்தரமாக சிறையில் ஒரு தளத்தை ஒதுக்கி அங்கே சென்றுவிட்டால் இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.
ReplyDelete