Header Ads



மதம் என்ற போர்வையில் இழைக்கப்படும் கொடூரமான, அவலங்களை நிறுத்த முனைப்புடன் செயல்பட வேண்டும்


பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

மதம் என்ற போர்வையில் இழைக்கப்படும் இதுபோன்ற கொடூரமான,  குற்றச்செயல்களால் ஏற்படும் அவலங்களை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலைக்கு எதிராக பாகிஸ்தான் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

1 comment:

  1. உலகமே இருட்டில் இருக்கும் போது நீங்க என்ன செய்வீங்க

    ReplyDelete

Powered by Blogger.