Header Ads



ஒரே குடும்பத்தில் தாய், மகள் கொரோனாவினால் வபாத் - கணவர் உயிரிழந்து சில தினங்களில் சம்பவம்


புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேப்பமடு பகுதியைச் சேர்ந்த தாயும், மகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சித்தி அஜிபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) ஆகிய இருவருமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று (06) உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தவர்கள் எனவும் குறித்த தாய்  காலையும், அவரது மகள் அதே தினத்தன்று நண்பகள் வேளையும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த தாயினதும், மகளினதும் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்த சித்தி அஜிபா எனும் 51 வயதானவரின் கணவரான முஹம்மது நிஸ்தார் (வயது 56) என்பவரும் கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஸீன் ரஸ்மின்


1 comment:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்,யா அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அந்த மூன்று பேரையும் ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்துவைப்பாயாக.இந்த சோதனைகளிலிருந்து முஸ்லிம்களையும் நல்லவர்களையும் காப்பாற்றுவாயாக.

    ReplyDelete

Powered by Blogger.