சகல தரப்பினராலும் மைத்திரிபால புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துகிறார் - சந்திரிகா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் நலன்களிற்காக மாத்திரம் எஸ்டபிஸ்யூஆர்டி பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எஸ்டபிஸ்யூஆர்டி பண்டாரநாயக்கவின் 62 வது சிரார்த்ததினத்தை நினைவுகூறும் நிகழ்வுகள் ஹொரகொல்ல சமாதியில் இடம்பெற்றவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வை எங்கள் குடும்பமே ஏற்பாடு செய்தது,ஸ்ரீலங்;கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்யவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சுதந்திரக்கட்சி அரசியல் ஆதாயத்திற்காக மாத்திரம் பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில் மைத்திரிபாலசிறிசேன ஒரேயொரு முறை மாத்திரம் பண்டாரநாயக்கவின் சமாதிக்கு விஜயம் மேற்கொண்டார் என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துவதற்காக சமாதிக்விஜயம் மேற்கொள்ளக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். TL
Post a Comment