அனுராதபுர சிறையில் இழிவான சட்டவிரோத செயற்பாட்டில் பங்கேற்ற அமைச்சரை உடனடியாக பதவி நீக்குங்கள்
அனுராதபுரம் சிறைச்சாலையில் இழிவான சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
அனுராதபுரம் சிறைச்சா லைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்
எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்
இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் TL
ஒழுக்கம் கெட்ட அமைச்சரை சிறைச்சாலை அமைச்சில் இருந்து நீக்கி பாதுகாப்பு உதவிஅமைச்சராக நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அதுதான் இந்த அரசாங்கத்தின் நடைமுறை.
ReplyDelete