கொரோனாவினால் வீடுகளில் மரணிக்கும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்குவந்த வாரத்தில் மாத்திரம் 194 பேர் வீடுகளில் உயிரிழந்ததாக அந்தப் பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த கொரோனா உயிரிழப்புகளில் 76.6 வீதமாக இது பதிவாகியுள்ளது.
Post a Comment