இலங்கையில் கொரோனாவினால் மரணித்த 76 சதவீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் ஏற்றாதவர்கள் - Dr ஹம்தானி
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரில் 76 சதவீதமானோர், எந்தவிதமான கொரோனா தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் என கோவிட் 19 இணைப்பாளர், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை கல்வி வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரில் 18 சதவீதமானவர்கள் ஒரேயொரு தடுப்பூசியை மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 6 சதவீதமானவர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்கள், பல்வேறான தொற்றா நோய்களுக்கும் நீண்டநாள், நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment