நகர சபை உறுப்பினர் சபூர்தீன் சனூன் கொரோனாவுக்கு வபாத்
திருகோணமலை நகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான சபூர்தீன் சனூன், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இன்று (30) காலமானார்.
2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சோனகவாடி (09) வட்டாரத்தை பிரதிநிதித்துவபடுத்தி, நகர சபையில் உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.
இவரைக் கௌரவிக்கும் முகமாக, திருகோணமலை நகர சபையில் உத்தியோகபூர்வ கொடி அரைக்கம்பத்தில் எற்றப்பட்டுள்ளதுடன், தலைவர், உப தலைவர், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment