அஷ்ரப் இறந்தபோது தான் ஏதாவது செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த மங்கள சமரவீர
-ஏ.பி.எம்.அஸ்ஹர் -
கலங்கரை விளக்கு இனி பிரகாசிக்காது என முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் புதல்வர் அமான் அஷ்ரப்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்..
அவர் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின்
எனது தந்தைக்கும் எனக்கும் ஒரு நல்ல நண்பனாக இருந்தார்.
எனது தந்தை காலமான போது, அவர் தாமாகவே அசித பெரேராவை அணுகி, “நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று விசர்ரித்தார். எல்லாம் கட்டுப்பாட்டில் இருப்பதாக அசித உறுதியளித்தார். இருந்தபோதிலும் அவர் ஏதாவது கட்டாயம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு அவர் சிற்றுண்டிகளை அனுப்பி வைத்தார்.
அவர் நேர்மையின் பக்கம் நின்றார்.
அவர் நீதியின் பக்கம் நின்றார்.
அவர் சமத்துவத்தின் பக்கம் நின்றார்.அவர் ஒழுக்கம் மற்றும் இரக்கத்தின் பக்கம் நின்றார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்
He was a descent politician in Sri Lanka...
ReplyDeleteNall manithergal ulagathil Nilithiruppthillaai
ReplyDelete