ஜனாதிபதியுடனான ஒன்றரை மணித்தியால பேச்சில், பல முக்கிய பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது
தேர்தல் முறைமையை திருத்தம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று -26- இடம்பெற்ற பேச்சுவார்தையின்போது இணக்கம் ஏற்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஒன்றரை மணித்தியாலயம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது பல முக்கிய பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு எட்டப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Post a Comment